Ad Widget

தமிழ் எழுத்துக்களுடன் நாட்காட்டி

கிளிநொச்சி ஜெயந்தி நகரைச் சேர்ந்த நா.வை.மகேந்திராசா என்ற மின் பொறியியலாளர் தமிழர் எழுத்துக்களுடன் கூடிய நாட்காட்டியை (கலண்டர்) 2015ஆம் ஆண்டுக்கு வெளியிட்டுள்ளார். திருவள்ளுவர் ஆண்டு 2046 எதிர்வரும் தைத்திருநாளில் பிறக்கின்றது. இதனையே தமிழ்ப் புதுவருடமாகக் கொள்வோரும் உள்ளனர். தமிழ் மாதங்களான சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி,...

மக்களுக்கு பாதிப்பின்றி போர் புரிந்தோம் – பொன்சேகா

யுத்தம் புரிந்த போது மக்கள் எவருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையிலேயே படை நடவடிக்கைகளை முன்னெடுத்தோம் என்று முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்தார். யாழ். நல்லூர் சங்கிலியன் பூங்காவில் (கிட்டு பூங்கா) செவ்வாய்க்கிழமை (30) மாலை இடம்பெற்ற, பொது எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பரப்புரைக்...
Ad Widget

வடமராட்சி கிழக்கு காணிப்பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல்

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் காணிப்பிரச்சினை தொடர்பான விஷேட கலந்துரையாடலொன்று செவ்வாய்க்கிழமை (30) கட்டைக்காடு கடற்றொழிலாளர் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டம், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் மற்றும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவுற்குட்பட்ட கட்டைக்காட்டு கிராமத்தில் உள்ள மக்கள் எதிர்நோக்கிவரும் காணிப்பிரச்சினை தொடர்பில் விரிவாக...

நாடு திரும்பியுள்ள வாக்காளர்கள் அடையாள அட்டையுடன் கடவுச்சீட்டையும் சமர்ப்பிக்க வேண்டும்

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியுள்ள வாக்காளர்கள் தேசிய அடையாள அட்டைக்கு மேலதிகமாக செல்லுபடியாகும் கடவுச் சீட்டையும் எடுத்துவருவது கட்டாயம் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வெளிநாடு சென்றுள்ள வாக்காளர்களின் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளும் 2014 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்பில் காணப்படும் அவர்களது வழமையான வதிவிட முகவரிகளுக்கு அனுப்பி...

பிரபாகரன் பெயர் கேட்டதும் விண்ணதிர கோஷமிட்ட மக்கள்

பிரபாகரன் பெயர் கேட்டதும் பரப்புரைக்கூட்டத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரித்த சம்பவம் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் கிட்டு பூங்காவில் பொதுவேட்பாளர் மைத்திபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தனது உரையில் பிரபாகரன் என்ற பெயரை கூறியதுமே கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சியில் விண்ணதிரக் கோஷமிட்டனர்....

மைத்திரியை ஆதரித்ததன் மூலம் தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பு மீண்டும் துரோகம் செய்கிறது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது எதிரணி வேட்பாளர் மைத்திபாலவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளவில்லை எனில் அவர்களுக்கு எதற்காக ஆதரவளிக்கவேண்டும். இருதரப்புக்கும் இடையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை வெளியிடப்பட்டால் சிங்கள மக்களின் வாக்குகளை இழக்க நேரிடும் என எதிரணி அஞ்சுகிறதா? அப்படி ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ளவில்லை எனில் ஏன் அவர்கள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவளித்திருக்கக்கூடாது. மைத்திரிக்கு ஆதரவளிப்பதன் மூலம் மீண்டும்...

பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படாத வகையில் மீள்குடியேற்றதை மேற்கொள்வோம்! – சந்திரிகா

இந்த நாட்டில் உள்ள எந்த மக்களாக இருந்தாலும் சமாதானமாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டும் என்பதற்கான நான் பாடுபடுவேன் என பொதுவேட்பாளர் எப்போதும் கூறுவார். எனவே புதிய ஜனாதிபதி மைத்திரிபால உங்கள் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைக்கு சரியாக முறையில் தீர்வு காண்பார்.அதற்கு நாமும் ஒத்துழைப்பு வழங்குவோம். ஒரு நாட்டில் அதன் எல்லைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தன. அதேபோல...

நான் இன்னுமொரு தமிழ் மாணவன் – ஜனாதிபதி ( விடியோ இணைப்பு)

இலங்கையில் உள்ளவர்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் கற்கவேண்டும். நான் தமிழ்மொழியை கற்க விருமபுகிறேன் நான் இன்னுமொரு தமிழ் மாணவன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவின் தந்தி தொலைக்காட்சிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அளித்த பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கேள்வி: நீங்கள் தேர்தல் பிரசார கூட்டங்கள் மற்றும் பொது...

தமிழ் தேசியக்கூட்டமைப்பு மைத்திரிக்கு ஆதரவு

தமிழ் தேசியக்கூட்டமைப்பு, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் அறிவித்தார். சற்று முன்னர் கொழும்பில் ஜானகி விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை அவர் அறிவித்தார். இதேவேளை இன்றைய தினம் பொது எதிரணியினர் வடபகுதியில் தேர்தல் பரப்புரை...

தாழமுக்கம் இலங்கைக்கு அப்பால் நகர்வதால் காலநிலை சீரடையலாம்?

இலங்கையின் கிழக்கு கரையோரத்தை அண்மித்த வளிமண்டலத்தில் நிலவிய தாழமுக்கம் வடக்கு நோக்கி இலங்கைத் தீவைவிட்டு நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால் எதிர்வரும் சில நாட்களில் காலநிலை சீரடையும் என்றும் மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் அல்லது மாலை வேளைகளில் அவ்வப்போது மழை பெய்யுமென்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு உள்ளிட்ட...

உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படமாட்டாது – மகிந்த

வடக்கில் தற்போது காணப்படும் உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படமாட்டாது என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மக்கள் பேஸ்புக் போலிப் பரப்புரைக்கு ஏமாந்துவிடக் கூடாது. பேஸ்புக் சமூக வலையத்தளத்தின் ஊடாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டு வருகிறது. வெறுமனே மாற்றம் அவசியம் தேவை என்பதனை விடவும் எதற்காக மாற்றம் தேவை என்பது முக்கியமானது. முன்னாள் லிபிய அதிபர்...

இடி அமீனைப் போல் ஆட்சி நடத்துகின்றார் மஹிந்த! – மைத்திரி

இடி அமீனைப் போல் ஆட்சி நடத்தும் மஹிந்தவின் ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும் என்றும், அதற்கான சிறந்த சந்தர்ப்பம் தற்போது உதயமாகியுள்ளது என்றும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஏறாவூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:- மஹிந்தவின் ஆட்சியை ஒழிக்க வேண்டும்...

வடக்கில் இன்று மைத்திரியின் பிரசாரக் கூட்டங்கள்! – ரணில், சந்திரிகா, ஹக்கீம், ரிஷாத், மனோ, பொன்சேகாவும் பங்கேற்பு

ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று செவ்வாய்க்கிழமை வடக்குக்கு வருகின்றார். இவருடன் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ...

தமிழர்கள் தேர்தலை பகிஸ்கரிக்கக் கூடாது – ஆனந்தசங்கரி

எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை தமிழ்மக்கள் பகிஸ்கரிக்கக்கூடாது எனவும், அவ்வாறு பகிஸ்தரித்தால் 2004ஆம் ஆண்டு நடந்தவையே மீண்டும் நடைபெற வைப்பதாக அமையும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆனந்தசங்கரி திங்கட்கிழமை (29) அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த...

முப்படையினரும் களத்தில், அவசர இலக்கங்களும் அறிவிப்பு

கடந்த சில நாட்களாக தொடர்ந்த சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகளில் மூப்படையினரும் ஈடுபட்டு வருவதுடன் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள 409 நிவாரண முகாம்களில் படையினர் தமது உதவிகளை வழங்கி வருவதாக இராணுவ பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மைய பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன்...

நீதியான தேர்தல் நடைபெறும் என எதிர்ப்பார்க்கின்றேன் – மூன்

இலங்கையில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்று நடைபெறுமென தான் எதிர்ப்பார்ப்பதாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இலங்கையின் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸூடன் கடந்த வாரம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட மூன், இலங்கையின் நல்லிணக்கத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை என்றும் துணையிருக்கும் என்று உறுதியளித்துள்ளார். இதன்போது...

தாக்குதல்தாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் – சந்திரிகா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமரதுங்கவின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்திய தாக்குதல்தாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவரது சட்டத்தரணிகள், பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளனர். சந்திரிகாவின் வாகனத்தின் மீது கடந்த 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை பேருவளையில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்த மைத்திரி

பொது எதிரணியுடன் இணைந்து நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு ஒன்றுபடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுப்பதாக மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பொறியியலாளர் சிப்லி பாறூக்கின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதான வீதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...

எதிர்க்கட்சி தேர்தல் பிரச்சார அலுவலகங்கள் மீது தாக்குதல்

இலங்கையில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவின் மூன்று தேர்தல் பிரச்சார அலுவலகங்கள் திங்களன்று அதிகாலை தாக்கப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர். மஹியங்கனைய, தெனியாய மற்றும் வெலிகம ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் பிரச்சார் காரியாலயங்கள் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக போலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோகன தெரிவித்தார். அதிகாலை வாகனங்களில் வந்த சிலர் மஹியங்கனையவில் அமைந்துள்ள எதிர்க்கட்சிகளின் பொது...

பக்கச்சார்பாக நடக்க வேண்டாம்; யாழ்.பல்கலை துணைவேந்தருக்கு அறிவித்தல்

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவிக்குமாறு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்திடம் கோரியமை போன்று மீண்டும் செயற்படவேண்டாம் என துணைவேந்தருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் பொ.குகநாதன், திங்கட்கிழமை (29) தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்துத் தெரிவிக்க வேண்டும் என பல்கலைக்கழக பேராசிரியர்கள்...
Loading posts...

All posts loaded

No more posts