Ad Widget

மண்எண்ணெய் அருந்திய குழுந்தை பரிதாபச் சாவு

வல்வெட்டித் துறையைச் சேர்ந்த விஜிதரன் கனிஸ்ரா என்ற ஒன் றரை வயதுக் குழந்தையே யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தது.

வீட்டில் தாயார் விளக்குக்கு மண் எண்ணெய் விடும் பொழுது அருகே இருந்த குழந்தை, தாயார் மற்றைய விளக்கை எடுத்து வரச் சென்றபோது போத்தலில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து அருந்தி விட்டது.

திரும்பி வந்த தாயார் குழந்தை மண்எண்ணெய் யைக் குடித்துக் கொண்டிருந் ததைக் கண்டு விட்டார்.

உடனடி யாக அந்தக் குழந் தையை மந்திகை ஆதார வைத்திய சாலைக் குக் கொண்டு சென்றனர்.

மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்குக் குழந்தை மாற்றப்பட்டது. எனினும் சிகிச்சை பயனளிக்காது நேற்றுமுன் தினம் இரவு 11 மணியளவில் குழந்தை உயிரிழந்தது.

திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் விசாரணையை நடத்தி சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தார்.

Related Posts