Ad Widget

இரகசிய முகாம் தொடர்பான சாட்சியங்கள் உள்ளன! – சுரேஷ்

இரகசிய முகாம் தொடர்பான சாட்சியங்கள் உண்டு சாட்சியங்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டல் அவற்றை முற்படுத்த தயார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

suresh

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கடத்தப்பட்டவர்கள், காணாமல்போனவர்களை தடுத்துவைக்கும் இரகசிய முகாம்கள் தொடர்பில் பாராளுமன்றில் முன்வைத்த முறைப்பாடுகளுக்கு உரிய விசாரணைகள் நடத்தப்படாமல் அவ்வாறான இரகசிய முகாம்களே இல்லை. என பிரதமர் மற்றும் நீதியமைச்சர் ஆகியோர் முன்வைக்கும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள போவதில்லை

இரகசிய முகாம்கள் இப்போது இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவ்வாறன இரகசிய முகாம் இருந்தமைக்கான சாட்சிகள் இருக்கின்றன.

அந்த சாட்சிகளின் உயிருக்கு உத்தரவாதமளிக்கப்பட்டால் அரசாங்கத்தின் முன்னால் கொண்டுவருவதற்கு தயார்.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள கோட்டாபாய என பெயர் கொண்டு அழைக்கப்பட்ட இரகசிய தடுப்பு முகாமில் 700 பேர் வரையில் தடுத்துவைக்கப்பட்டிருந்து இருக்கின்றார்கள்.

எனவே நாங்கள் கோருவது என்னவென்றால் அவ்வாறான முகாம் ஒன்று இருந்தது தொடர்பிலும் அதில் இருந்தவர்கள் யார்? இப்போது எங்கே இருக்கின்றர்கள்? எதற்காக தடுத்துவைக்கப்பட்டார்கள்? போன்ற கேள்விகளுக்கு எமக்கு விடை கிடைக்கவேண்டும்.

எனவே நாம் இந்த விடயத்தில் ஒரு நீதியான விசாரணை, நடத்தப்படவேண்டும் என எதிர்பார்க்கிறோம். அதைவிடுத்து நாங்கள் கடற்படையிடம் கேட்டோம் படையினரிடம் கேட்டோம். அவ்வாறான முகாம் இல்லை என அவர்கள் கூறினார்கள் எனவே அவ்வாறன முகாம் இல்லை என இறுதி யுத்தத்தின் போது 20ஆயிரம் பேர் காணாமல்போயிருக்கின்றார்கள். அவ்வாறு காணாமல்போனவர்களில் பலர் பேருந்துகளில் கொண்டுசெல்லப்பட்டமையினை அவர்களுடைய உறவினர்கள் கண்டிருக்கின்றனர்.

எனவே இந்த விடயத்தை முன்னைய அரசாங்கம் போன்றே இந்த அரசாங்கமும் மூடி மறைக்கப் பார்க்கின்றதா? என்பதே தற்போது எங்களிடமிருக்கும் கேள்வி.

எனவே இந்த விடயத்தில் முழுமையானதும் முறையானதுமான விசாரணை நடத்தப்பட்டு அந்த அறிக்கை வெளியிடப்படவேண்டும். என தெரிவித்தார்.

Related Posts