வரணி இடைக்குறிஞ்சி பகுதியிலுள்ள வீடொன்றில் சனிக்கிழமை(14) இரவு முகத்தை துணியால் மறைத்தபடி நுழைந்த நால்வர் கொண்ட குழு, வீட்டிலிருந்தவர்களை அடித்து, கட்டிவைத்ததுடன் நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக கொடிகமம் பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை (15) தெரிவித்தனர்.
வீட்டின் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 25 பவுண் நகைகள் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணம் என்பன இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
மோட்டார் சைக்கிளில் வந்த இந்தக் கொள்ளைக்கும்பல் தொடர்பில் வீட்டு உரிமையாளர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.