Ad Widget

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்தவர் சாவு!

மோட்டார் சைக்கிளில் பின்புறம் இருந்து பயணித்தவர் தவறி விழுந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் புன்னாலைக்கட்டுவன், ஈவினை வீதியில் இடம்பெற்றது.

இந்த சம்பவத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான கெங்காதரன் தவக்குமார்(வயது -29) என்பவரே உயிரிழந்தார். விபத்து குறித்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

சுன்னாகத்தில் இருந்து புத்தூர் வரை செல்லும் குறிப்பிட்ட வீதியானது வாகனங்கள் செல்லமுடியாத அளவுக்கு பெரும் ‘பம்மிங்’ வீதியாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts