ராஜபக்ஷ குடும்பத்தினர் ஒரு போதும் பண மோசடியில் ஈடுபட்டதில்லை என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று நாடு திரும்பிய பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் இருந்து டுபாய் வழியாக இலங்கையை வந்தடைந்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் பசில் ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.
அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முன்னுரிமை அளித்து விசாரணைக்கு தேவையான சகல ஆதரவினையும் அனைத்து தரப்பினருக்கும் வழங்கப்போவதாகவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
தான் 1931 ல் இருந்து அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும் ஆனால் அவர் மீது இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் ஒருபோதும் சுமத்தப்பட்டதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.