அனந்தி நாளை முதல் தொடர் உண்ணாவிரதம்

வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நாளை வெள்ளிக்கிழமை தொடர் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். யாழ். நல்லூர் ஆலய முன்றலில் காலை 09.00 மணிக்கு இவ்வாறு போராட்டத்தினை அவர் ஆரம்பிக்கவுள்ளார். வட பகுதியில் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு, காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகள், இராணுவத்தில் சரணடைந்த காணாமல் போனவர்கள் உட்பட மீள்குடியேற்றம் போன்ற...

காங்கேசன்துறையில் அமைக்கப்படுவது ஜனாதிபதி மாளிகை அல்ல! – மஹிந்த

தனது பயன்பாட்டிற்காக காங்கேசன்துறை பகுதியில் ஜனாதிபதி மாளிகை நிர்மாணிக்கப்பட்டதாக வௌியாகும் செய்திகளில் உண்மையில்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் அது சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்காக அமைக்கப்பட்ட கட்டிடம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, 1980ம் ஆண்டு...
Ad Widget

20 வீதம் விலை குறைத்தே உணவுவகைகளை விற்கவேண்டும் – யாழ்.வணிகர் கழகம் கோரிக்கை

யாழ்.மாவட்ட உணவகங்களில் கடந்த காலத்தில் விற்பனை செய்ததை விட 20 வீதம் விலை குறைத்து உணவுவகைளை விற்பனை செய்ய அனைத்து உணவகங்களினதும் உரிமையாளர்கள் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் - இவ்வாறு யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தினால் கோரிக்கை விடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வணிகர் கழக அலுவலக மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகங்களின் உரிமையாளர்கள்...

காணாமல் போனவர்கள் இரகசிய முகாம்களில் – வடக்கு முதலமைச்சர்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த காலத்தில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் பலர் இலங்கையின் பல இடங்களில் உள்ள இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக வடக்கு முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். காணாமல் போனவர்களின் உறவுகள் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை நடாத்தியிருந்ததுடன் அரச அதிபர் ,...

கொக்குவில் இந்து கலையரங்கிற்கு விசமிகளால் தீ வைப்பு

கொக்குவில் இந்துக்கல்லூரி மைதானத்திலுள்ள மாலதி கலையரங்கிற்கு விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பாடசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இன்று விடுமுறை தினம் என்பதால் காலை பாடசாலைக்கு எவரும் சமுகமளித்திருக்கவில்லை. இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு விசமிகள் இந்த வேலையை செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் உடனடியாக யாழ். மாநகர சபை தீயணைப்புப்...

சில்லறைக்கு தட்டுப்பாடு; மத்திய வங்கியுடன் பேச நடவடிக்கை

வர்த்தகர்களுக்கு சில்லறை ப்பணத்தினை வழங்குவது குறித்து வங்கிகளுடனும் மத்திய வங்கியுடனும் பேச்சு வார்த்தை நடாத்த திட்டமிட்டுள்ளோம் என யாழ்ப்பாண வர்த்தக சங்கத்தலைவர் ஜெயசேகரம் தெரிவித்துள்ளார். வர்த்தக சங்கத்தினருக்கும் யாழ்ப்பாண வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று வர்த்தக சங்கத்தின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. அதன் போதே இதனை அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...

உள்நாட்டு விசாரணைக்கு பொன்சேகா சம்மதம் குற்றவாளிகளை தண்டிக்கவும் உறுதி

இலங்கையின் இறுதிக்கட்ட போரின்போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து ஒரு உள்நாட்டு விசாரணை நடப்பதை தான் ஏற்றுக்கொள்வதாக முன்னாள் இராணுவ தளபதியான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணை ஒன்றுக்காக கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு வந்திருந்த போதே செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை இராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை என்பதே தமது...

தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வை புதிய அரசாங்கம் தர வேண்டும்!

தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நிரந்தர அரசியல் தீர்வை வழங்க புதிய அரசு முன்வரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன். கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மாகாண அபிவிருத்திக் குழுக் கூட்டம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில்...

எதிர்வரும் பாரளுமன்றத் தேர்தலில் NFGG பத்து மாவட்டங்களில் போட்டி

எதிர்வரும் பாரளுமன்றத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) பத்து மாவட்டங்களில் போட்டியிடவுள்ளதாக அதன் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே இந்த விடயத்தை அவர் தெரிவித்தார். இதன்படி எதிர்வரும் பாரளுமன்றத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியானது மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, கொழும்பு, கம்பஹா, கண்டி, குருநாகல்,...

முல்லைத்தீவு கோட்டாபய முகாம் குறித்து விளக்கமளிக்கக் கோரிக்கை

தெஹிவளையில் 2008 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 17 ஆம் திகதி இரவு 10 மணியளவில் மூன்று தமிழ் இளைஞர்களும் அவர்களது நண்பர்களான இரண்டு முஸ்லிம் இளைஞர்களும் அவர்கள் பயணம் செய்த வாகனத்தோடு கடத்தப்பட்டனர். கடற்படையினரால் கடத்தப்பட்ட ஜந்து.மாணவர்களின் பெற்றோர்கள் சார்பில் கடத்தப்பட்டு காணாமல்போன மாணவர்களின் பெற்றோர்களை மனுதாரர்களாக பெயர் குறிப்பிட்டு சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிசங்கரி...

‘அழுது அழுது கண்ணீர் வற்றிவிட்டது’ கதறியழுத உறவுகள்

பாதுகாப்பு படைகளால் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டு காணாமற்போனவர்களின் உறவுகள் தமக்கு நீதிகோரி யாழ். மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக இன்று புதன்கிழமை (04) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தை காணாமற்போனோர் பாதுகாவலர் சங்கம் ஏற்பாடு செய்தது. கடந்த 1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு படைகளால் கைது செய்யப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என்று அறியாத...

தேர்தலுக்கு வருவீர்களா என்று அப்பாவிடமே கேளுங்கள் – நாமல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரும் கடற்படையின் லெப்டினன் பதவிநிலை வகிப்பவருமான யோஷித்த ராஜபக்ஷ, பொலிஸ் குற்றவியல் பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக இன்று காலை 8.40க்குச் சென்றார். இதன்போது, யோஷித்தவின் சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷவும் சென்றிருந்தனர். வாக்குமூலத்தை வழங்கிவிட்டு, அவ்விருவரும் இன்று முற்பகல் 10.40க்கு பொலிஸ் குற்றவியல் பிரிவிலிருந்து வெளியே வந்தனர்....

சர்வதேச மகளிர் தின கொண்டாட்டங்கள் அநுராதபுரத்தில்

சர்வதேச பெண்கள் தின கொண்டாட்டங்கள் எதிர்வரும் 7, 8 ஆகிய தினங்களில் காலை 9.00 மணிக்கு அநுராதபுரம் சல்காது மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது என மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் இன்று காலை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்....

நான் நாட்டு மக்களுடனேயே ஒப்பந்தம் செய்துள்ளேன் – ஜனாதிபதி

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை ஆனால் நாட்டு மக்களுடன் மட்டுமே நான் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது. அதில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...

விலை விபரம் இல்லாமையால் ரூ. 1 இலட்சம் அபராதம்

யாழ். நகரப் பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் விலைவிபரம் இல்லாமல் பொருள் விற்பனை செய்த குற்றத்துக்காக 1 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து யாழ். நீதவான் பொ.சிவகுமார் செவ்வாய்க்கிழஇமை (03) உத்தரவிட்டார். விலை விபரம் இல்லாத கண்ணாடி சுத்திகரிப்பு ஸ்பிரேயை வைத்திருந்த குற்றத்துக்காக, யாழ். பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையால் அங்காடி உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில்...

உறவுகளை மீட்டுத்தரக் கோரி ஜனாதிபதிக்கு மகஜர்

காணாமல் போனவர்களை மீட்டுத்தரக் கோரி ஜனாதிபதிக்கான மகஜர் அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களை மீட்டுத்தரக் கோரி வட பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போன பொதுமக்கள் பெற்றோர் பாதுகாவலர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட உறவுகள் காணாமல் போன...

பரவலாகும் சுமந்திரனுக்கெதிரான நடவடிக்கைகள்!

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிற்கு மரணதண்டனை விதித்து குடாநாடெங்கும் கொடும்பாவிகள் தொங்கவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரி யாழ்.வந்து திரும்பியுள்ள நிலையில் வடமராட்சி, தென்மராட்சி மற்றும் யாழ்.நகரென இக்கொடும்பாவிகள் இன்று இரவோடிரவாக தொங்கவிடப்பட்டுள்ளதாக கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ் தேசியக்கூட்டமைப்பு இளைஞரணியினை சேர்ந்தவர்களென தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட இளைஞர் குழுக்களே மரணதண்டனை எச்சரிக்கையுடன் இக்கொடும்பாவிகளை கட்டித்தொங்கவிட்டிருந்தததாக செய்திகள்...

சேவைக்காலத்தை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு ஏப்ரலில் இடமாற்றம்

வன்னிப் பகுதியில் தமது சேவைக்காலத்தை நிறைவு செய்த தகுதியுடைய ஆசிரியர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் புதன்கிழமை (04) தெரிவித்தார். வன்னிப் பிரதேசத்தில் கடமையாற்றி இடமாற்றத்துக்கு விண்ணப்பித்த, தகுதியுடைய ஆசிரியர்கள் அனைவருக்கும் ஏப்ரல் 1ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையிலான இடமாற்ற கடிதங்கள் மாகாண கல்வி அமைச்சின்...

தாதிய பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் ஜனாதிபதியிடம் மனுக் கையளிப்பு!

யாழ்ப்பாணம் தாதிய பயிற்சிக் கல்லூரி மாணவர்கள், தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக்கோரி மனு ஒன்றை நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் நேரடியாகச் சமர்ப்பித்தனர். யாழ். அரச செயலகத்துக்கு சென்று இந்த மனுவை அவர்கள் ஜனாதிபதியிடம் ஒப்படைத்தனர். தாதிய பயிற்சி நெறியை பூர்த்தி செய்து இறுதிப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள நேரத்தில் தங்களிடம் ஆங்கில பாடத்தில் திறமைச்சித்தி கோரப்பட்டு,...

தென்னிலங்கை அரசியல்வாதிகளை தமிழ் மக்கள் நேசக்கரம் நீட்டி வரவேற்கின்றனர் – டக்ளஸ்

தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு கறுப்புக்கொடி காட்டி எதிர்த்த காலம் மாற்றமடைந்து, நேசக்கரம் நீட்டி தமிழ் மக்கள் வரவேற்கும் காலம் தற்போது நடைபெறுகின்றது. அந்த மாற்றத்துக்கு முக்கிய பங்காளிகளாக நாங்கள் இருந்துள்ளோம் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வடமாகாண விசேட அபிவிருத்திக்குழுக்கூட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை...
Loading posts...

All posts loaded

No more posts