Ad Widget

சில்லறைக்கு தட்டுப்பாடு; மத்திய வங்கியுடன் பேச நடவடிக்கை

வர்த்தகர்களுக்கு சில்லறை ப்பணத்தினை வழங்குவது குறித்து வங்கிகளுடனும் மத்திய வங்கியுடனும் பேச்சு வார்த்தை நடாத்த திட்டமிட்டுள்ளோம் என யாழ்ப்பாண வர்த்தக சங்கத்தலைவர் ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.

வர்த்தக சங்கத்தினருக்கும் யாழ்ப்பாண வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று வர்த்தக சங்கத்தின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. அதன் போதே இதனை அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது வியாபார நிலையங்களில் பொருட்களை பெற்றால் மிகுதிக்காசுக்குப் பதிலாக தீப்பெட்டி, இனிப்பு வகைகளை தருகின்றனர் மிகுதியைத் தருகின்றனர் இல்லை என்று பலர் வர்த்தக சங்கத்திற்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பில் வர்த்தகர்களிடம் கேட்ட போது சில்லறைக்காசுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வங்கிகள் சில்லறைக்காசை வழங்குகின்றார்கள் இல்லை. எனவே சில்லறைகளைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டால் நாங்கள் மிகுதிகளை நுகர்வோருக்கு வழங்குவோம் என தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து வங்கிகள் மற்றும் மத்திய வங்கியுடனும் கலந்துரையாடவுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts