வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

தாக்குதலுக்குள்ளான இளைஞன் ஒருவனின் உறவினர்கள் கொடுத்த முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ளாத வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (26) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. காரைநகரில் வீதியில் திங்கட்கிழமை (25) நின்றிருந்த இளைஞனை மோட்டார் சைக்கிள்களில் கடத்திச் சென்று 4 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதில் காரைநகர் பரமநாதன் அபிராம்...

குடாநாட்டில் சில்லறைகளுக்கு தட்டுப்பாடு

பெற்றோல் செற், பேருந்துகளில் ரிக்கற் மற்றும் கடைகளில் பொருட்களை வாங்கும் நுகர்வோருக்கு மிச்சக் காசுகள் கொடுக்கப்படுவதில்லை என்று மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.அது உண்மை தான் அதற்கு காரணம் குடாநாட்டில் போதியளவு சில்லறைக்காசுகள் இல்லை என்று வணிகர் சங்கத் தலைவர் ஜெயசேகரம் சுட்டிக்காட்டினார். நேற்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.அதில் கலந்து...
Ad Widget

AH1N1 இன்புளுவென்சா வைரஸ் தொற்று குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

இலங்கைத் தீவில் AH1N1 இன்புளுவென்சா வைரஸ் தொற்று அபாயம் உள்ளதாக எச்சிரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தீவில் தற்போது கடுமையான வெப்பமான காலநிலை நிலவி வருகிறது. அதனால் AH1N1 வைரஸ் மக்கள் மத்தியில் பரவி வருவதாக தொற்று நோய் பிரிவு பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். காய்ச்சல், சளி, தொண்டை வலி, இருமல் போன்ற நோய்...

கிளிநொச்சியில் கொடூரம்!! பாடசாலை சென்ற 7 வயதுச் சிறுமியை கடத்தி கூட்டுப் பாலியல் வன்முறை!

பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த 7 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பொதுமலசல கூடத்துக்குள் வைத்துக் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் எனக் கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை காலை கிளிநொச்சியின் பரந்தனில் சிவபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமி வீட்டிலிருந்து பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்தபோது, அவரை இடைவெளியில் மறித்த சிலர் பொதுமலசலகூடத்தில் வைத்து...

யாழில் இடம்பெற்ற போராட்டங்களில் கைதானவர்களில் அப்பாவிகள் விடுவிக்கப்படுவர்! ரணில் கூட்டமைப்புக்கு உறுதியளிப்பு!!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையின் எதிரொலியாக யாழில் இடம்பெற்ற போராட்டங்களின்போது கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவர்களில் சமூக விரோத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களைத் தவிர ஏனையோர் விரைவில் விடுவிக்கப்படுவர். இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் உறுதியளித்தார் என அக்கட்சியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சுரேஷ்...

நுவரெலியாவில் வித்தியாவுக்காக அமைதி ஊர்வலமும் ஆத்ம சாந்தி நிகழ்வும்

புங்குடுதீவு மாணவியின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அமைதி ஊர்வலமும் ஆத்ம சாந்தி நிகழ்வும் நுவரெலியாவில் நடைபெற்றது. புனித சவேரியார் கல்லூரிக்கு அருகிலிருந்து ஆரம்பமான இப் பேரணி, நுவரெலியா பிரதான வீதி ஊடாக லோசன் சுற்றுவட்டத்தை வந்தடைந்ததுடன் அங்கு இரங்கல் உரையும் சர்வ மத வழிபாடுகளும் இடம்பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய மாகாண சபை உறுப்பினர்...

ஞானசார தேரர் பிணையில் விடுதலை!

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறுந்துவத்தை பொலிஸாரால் கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் ஞானசார தேரர் இன்று ஆஜர் செய்யப்பட்ட போது பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முன்...

பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் மாணவர்கள் கோரிக்கை

வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் இனங்கண்டு அதிகபட்ச தண்டனை வழங்குவதுடன் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாது இருக்க நடவடிக்கை எடுக்க வேணடும் என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பிலும்...

வித்தியாவின் பெற்றோரைச் சந்தித்தார் ஜனாதிபதி

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாய் மற்றும் சகோதரனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதுடன் தனது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். வித்தியாவின் கொலை மற்றும் அதனையடுத்து ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பில் நேரடியாக ஆராய்வதற்கு இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி வடக்கு மாகாண...

அடிமை கொண்டவர்களைப்போல் எமது மக்களை காவல்துறையினர் நடத்தக் கூடாது! டக்ளஸ்

வடக்கில் பணியாற்றிவரும் காவல்துறையினர், எமது மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, மனிதாபிமான முறையில் தங்களது கடமைகளை ஆற்ற வேண்டியது அவசியம் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். மாறாக, எமது மக்களை அடிமை கொண்டவர்களைப்போல் கருதி, ஆதிக்க மனப்பான்மையுடன் நடத்தக் கூடாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்...

நீதிமன்றம் மீதான தாக்குதலாளிகள் குறித்த ஆதாரங்களை தந்துதவுமாறு பொலிஸார் வேண்டுகோள்!

யாழ். நீதிமன்ற வளாகத்தின் மீது கடந்த 20 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து வீடியோ, புகைப்படங்களை எடுத்தவர்கள் அவற்றைத் தந்துதவுமாறு குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் கேட்டுள்ளனர். புங்குடுதீவு மாணவியின் படுகொலையைத் தொடர்ந்து இடம்பெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து யாழ். நீதிமன்ற வளாகத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து 130 பேர் கைது செய்யப்பட்டனர்....

வித்தியா படுகொலை வழக்கு: விசேட நீதிமன்று ஊடாக விசாரிக்கப்பட்டு விரைவில் தீர்ப்பு! – ஜனாதிபதி

புங்குடுதீவு மாணவி வித்தியா வன்கொடுமைக்குப் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். வித்தியாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர்களை விசேட நீதிமன்றில் நிறுத்தி, குற்றவாளிகளை இனங்கண்டு அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு யாழ்.வேம்படி உயர்தரப் பாடசாலையில் வைத்து உறுதியளித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் தீடீர் பயணமாக ஜனாதிபதி...

122 வாகனங்களும் நீதிமன்றில் ஒப்படைப்பு!

யாழ். நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கலவரத்தின் போது கைப்பற்றப்பட்ட 122 வாகனங்கள் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 20ம் திகதி புங்குடுதீவு பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் சம்பவத்தினைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் யாழில் நடைபெற்றது. அதன்போது அங்கு கூடியிருந்த இளைஞர்கள் பலர் நீதிமன்ற கட்டடத் தொகுதியின் மீது தாக்குதல் மேற்கொண்டனர். இதன்...

சுன்னாகத்தில் ஆர்ப்பாட்டம், பேரணிக்கு தடை

புங்குடுதீவு மாணவி படுகொலை தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், பேரணி நடத்துவதற்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது. சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்ததையடுத்தே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார். இந்த தடையுத்தரவு...

ஞானசார தேரர் கைது

பொது பல சேனாவின் பொதுச்செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர், கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஜப்பான் நாட்டுக்கு சென்றிருந்த ஞானசார தேரர், நேற்று திங்கட்கிழமை(25) நாடு திரும்பியிருந்தார். இந்நிலையில் அவர் இன்று செவ்வாய்க்கிழமை(26) கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

உடுத்துறையில் காவல்துறை செய்தது என்ன! உண்மைகள் இதோ

உடுத்துறையில் காவல்துறை சுட்டது பற்றிய செய்திகள் காவல்துறையின் வாக்கு மூலத்துடன் உள்ளுர் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி  துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய நபரின் குடும்பத்தின் மீது கஞ்சா காய்ச்சுவதாக காவல்துறையிடம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை சென்று விசாரித்ததில் அங்கு தடயங்கள் எதுவும் இல்லை . தகவல் கொடுத்தவர் யார் என்பது குறித்த குடும்பத்திற்கு தெரிய வந்தது ம்.தகவல்கொடுத்தவரது வீட்டில் தாக்குதல்...

நிலத்தடி நீர் மாசை ஆராய நோர்வே வல்லுநர் குழு யாழ்.வருகை

சுன்னாகம் பகுதியில் நிலத்தடி நீர் மாசடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுவது குறித்து முழுமையான ஆய்வுகளை நடத்த நோர்வே நாட்டிலிருந்து இரு வல்லுநர்களைக் கொண்ட சிறப்புக் குழு நாளை யாழ்ப்பாணம் வரவுள்ளது. சுன்னாகம் பகுதியில் இவர்கள் நேரடியான ஆய்வுகளில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. சுன்னாகம் பிரதேசத்து குடிதண்ணீருடன் கழிவு ஒயில் கலந்துள்ளதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படுகின்றன. உள்ளுரில் நடத்தப்பட்ட நில சோதனைகளில்...

மூன்றாவது தடவையாக யாழ்.வருகிறார் மைத்திரி

யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை வருகை தரவுள்ளார். வடமாகாண ஆளுநர் பளிஹக்கார பலாலியில் வைத்து ஜனாதிபதியை வரவேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதன்பின்னர் ஜனாதிபதி வேம்படி மகளிர் உயர்தரப்பாடசாலையில் கலந்துரையாடல் ஒன்றினையும் மேற்கொள்ளவுள்ளார். மேலும் புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாகவும்,நீதிமன்றம் தாக்கப்பட்டமை தொடர்பாகவும் நிலமைகளை ஆராய்வதற்காகவுமே ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார் என...

வீசா இன்றி இந்தியா செல்ல முடியாது! இந்திய துணைத்தூதுவர் நடராஜன்

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு செல்லவுள்ளவர்கள் வீசாவினைப் பெற்றே விமானநிலையத்தினூடாக செல்ல முடியும் என யாழ். இந்திய துணைத்தூதுவர் நடராஜன் தெரிவித்துள்ளார். இலங்கையில் இருந்து இந்தியா செல்வதற்கு வீசா பெற்றுச் செல்லும் முறைமை தொடர்ந்து வரும் நிலையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஈ.வீசா ( இணைய வீசா) வினால் மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. பலர் ஈ.வீசா...

புங்குடுதீவு படுகொலை! பொலிஸ் விசாரணையில் திருப்தியில்லை! பிரதியமைச்சர் விஜயகலா

புங்குடுதீவு மாணவியின் படுகொலை வழக்கில் பொலிஸார் முன்னெடுத்துவரும் விசாரணைகள் திருப்தியளிக்கக்கூடிய வகையில் இல்லை என மகளிர் விவகார பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் ஊடகம் ஒன்றிற்கு நேற்று திங்கட்கிழமை வழங்கிய சிறப்பு நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்த விசாரணைகள் இனியும் சரியான முறையில் முன்னெடுக்கப்படாத பட்சத்தில் சர்வதேச அமைப்புக்களின் உதவியை நாட...
Loading posts...

All posts loaded

No more posts