Ad Widget

பதிவுத் தபால் விநியோகம் பாதிப்பு

மத்திய தபால் பரிமாற்றத்தில் பெருமளவிலான பதிவு தபால்கள் குவிந்து கிடப்பதனால் பதிவுத் தபால் விநியோக நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பரீட்சைகள், நேர்முகத் தேர்வுகள் முக்கிய நிகழ்வுகளுக்கான அழைப்பிதழ்கள், மற்றும் பல்வேறு நிறுவனங்கள் ஊடாக அனுப்பிவைக்கப்படுகின்ற பதிவு தபால்கள் உரிய நேரத்தில் கிடைக்காமையால் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த இவ் விடயம் தொடர்பாக தபால்மா அதிபர் ரோஹன அபேரத்னவிடம் வினவிய போது ஊழியர்கள் பற்றாக்குறையே இந்த நிலைமை ஏற்படக் காரணம் என தெரிவித்துள்ளார்.

இப் பிரச்சனைக்கு தீர்வுகாணும் வகையில் மேலதிக தபால் ஊழியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக தபால்மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts