Ad Widget

யாழில் 7379 பேர் மாற்றுத்திறனாளிகள்!

யாழ் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளாக 7379 பேர் இருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இதில் 1100 சிறுவர்களும் 1320 பேர் போரால் பாதிக்கப்பட்டவர்களும் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை நேற்றைய தினம் மாற்றுத் திறனாளிகளை சமூகத்துடன் சேர்ப்பதற்கான செயற்திட்டத்தின் கீழான விசேட செயலமர்வு ஒன்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றிருந்ததுடன் குறித்த செயலமர்வில் மாற்றுத் திறனாளிகளிற்கு எவ்வாறான உதவிகளை வழங்குவது என்பது தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts