Ad Widget

நீதிமன்ற தாக்குதல் சம்பவம்: ஒருவர் கைது

யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது கடந்த மே மாதம் 20ஆம் திகதி தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில், பிறவுண் வீதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை பெருமாள் கோவில் பகுதியில் வைத்து, கொழும்பிலிருந்து வந்த விசேட குற்றத் தடுப்புப் பொலிஸார் திங்கட்கிழமை (15) மாலை கைது செய்தனர்.

நீதிமன்ற கட்டடத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டமை மற்றும் வளாகத்தில் நின்றிருந்த வாகனங்களை அடித்து சேதமாக்கியமை தொடர்பாக வீடியோ ஆதாரங்களை திரட்டிய கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ ஆதாரத்தில் காணப்பட்ட ஒருவரையே விசேட குற்றத்தடுப்புப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்.

Related Posts