Ad Widget

மாற்றத்தை விரும்பும் மக்களுக்கு மாற்றுத் தலைமையை கொடுப்போம் – டக்ளஸ்

தமிழ் மக்கள் அனைவரும் அரசியலில் மாற்றம் வேண்டும் என்பதை விரும்புகின்றார்கள். அதை உணர்ந்து செயற்பாட்டிலும் காட்டியுள்ளார்கள். எனவே மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான புறச்சூழலை உருவாக்குவதற்கு வலுவான பொதுக் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய முயற்சி ஒன்றை முன்னெடுத்துள்ளோம். அதற்கு பேரம்பேசும் அரசியல் பலம் தேவை என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்....

வடக்கு கடலில் இந்திய மீனவர்கள் அட்டூழியம்

வடக்கு கடற்பரப்பில் புதன்கிழமை (25) இரவு அத்துமீறி நுழைந்துள்ள இந்திய மீனவர்களின் றோலர் படகுகள், இலங்கை மீனவர்களின் வலைகளை அறுத்து பாரிய சேதத்தை விளைவித்துள்ளன என்று கடற்றொழிலாளர் சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் சம்மேளனத்தைச் சேர்ந்த மீனவர்களில் 150க்கும் மேற்பட்டவர்களின் வலைகளை றோலர்களில் வருகை தந்த இந்திய மீனவர்கள், நாசம் செய்தனர் என்று வடமராட்சி...
Ad Widget

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்.வருகின்றார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 3 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில், அவரது தலைமையில் வடக்கு மாகாண ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது.அதில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் பங்கேற்பதுடன் வடக்கு அமைச்சரவையும் பங்கெடுக்கவுள்ளது. ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர், முதன் முதலாக வடக்கு மாகாணத்துக்கு-யாழ்.மாவட்டத்துக்கு மைத்திரிபால சிறிசேன வரவுள்ளார். அவரின் தலைமையில் இடம்பெறும்...

மின்கட்டணம், இயந்திர எண்ணெய் அடுத்த மாதம் விலை குறைப்பு

மின் கட்டணம் மற்றும் இயந்திரங்களை இயக்க பயன்படுத்தும் எண்ணெயின் விலை குறைக்கப்படவுள்ளதாக மின்வலு சக்தி இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். தெமட்ட கொடயிலுள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மின் கட்டணம் குறைக்கப்படவுள்ளதுடன் புதிதாக மின் இணைப்பு பெற்றுக்கொள்ளும் முறையும் இலகு வாக்கப்பட்டுள்ளது...

இரண்டு பாடசாலைகளில் புதிய தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் திறப்பு

சாவகச்சேரி இந்துக் கல்லூரி மற்றும் பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் கல்லூரி ஆகியவற்றில் புதிதாக அமைக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடங்களின் திறப்பு விழா இன்று நடைபெற்றன. . இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். அவருடன் மகளிர் விவகாரப் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், , நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சுரேஸ்பிரேமச்சந்திரன்...

இங்குள்ள மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பின்னரே இந்தியாவில் உள்ள அகதிகள் குடியேற்றப்படுவர்!

இங்குள்ள மக்களை மீள்குடியேற்றிய பின்னரே இந்தியாவில் உள்ள அகதிகள் மீள்குடியேற்றப்படுவார்கள் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். இன்று வடபகுதிக்கான விஜயத்தை மேற்கொண்டு வவுனியா கந்தசாமி ஆலயத்திற்கு வருகைதந்த அவர் அங்குள்ள மக்களை சந்தித்த போதே இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் - வடபகுதி உள்ளிட்ட இப்பகுதி மக்களுக்கு மீள்குடியேற்றம் தொடர்பான நிறைய பிரச்சினைகள்...

கமலேந்திரனின் பிணை நிபந்தனையில் தளர்வு

யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து நின்று அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வடமாகாண சபை முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் கந்தசாமி கமலேந்திரனுக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி க.சிவபாதசுந்தரம் வியாழக்கிழமை (26) அனுமதியளித்துள்ளார். அத்துடன் மாதத்தின் முதலாம் மற்றும் இறுதி சனிக்கிழமைகளில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்கு சென்று கையொப்பமிடவேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். வடமாகாண சபை முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் கந்தசாமி கமலேந்திரன்,...

பனை அபிவிருத்தி சபையின் புதிய தலைவர், கடமைகளை பொறுப்பேற்பு

பனை அபிவிருத்தி சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட கே.விஜிந்தன், வியாழக்கிழமை (26) பனை அபிவிருத்திச் சபை அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். கடந்த 2ஆம் திகதி கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனால் பனை அபிவிருத்திச் சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டு, 25 ஆம் திகதி பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார். வடமாகாண...

எலிப்பாஷணங்களை வைத்து ‘குழந்தைகளை கொல்ல வேண்டாம்’

வீடுகளிலுள்ள எலிகளைக் கொல்வதற்காக இரசாயனப் பதார்த்தங்கள் அடங்கிய தரமற்ற எலிப்பாஷணங்களால் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசநோய்ப் பிரிவின் தலைவரும் இயல்பியல் நோய் நிபுணருமான வருண குணதிலக்க, இவ்வாறான எலிப்பாசனங்களை கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார். விதவிதமான நிறங்களில் தயாரிக்கப்படும் இந்த எலிப்பாசனங்களை வீட்டின் பல்வேறு...

தந்தையின் பாதுகாப்பு பிரிவில் மகன் இணைவு

கடற்படையில் கடமையாற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான லெப்டினன் யோசித்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தன்னுடைய தந்தையின் பாதுகாப்பு பிரிவில் தன்னை இணைத்துக்கொள்ளுமாறு யோசித்த ராஜபக்ஷ ஏற்கெனவே கோரியிருந்தார்.

உண்மையைக் கூறுவது ஒருபோதும் இனவாதமாகாது : பிரதமர் ரணிலுக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பதில்

உண்மை வெளிப்­ப­டுத்­தப்­பட வேண்டும் எனக் கோரு­வது ஒரு­போதும் இன­வா­த­மாக முடி­யாது. உண்­மையை முதலில் அறிந்தால் தான் நல்­லெண்ணம் பிறக்க வழிவகுக்­கலாம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட­மா­காண சபையில் அண்­மையில் நிறை­வேற்­றப்­பட்ட இனப்­ப­டு­கொலை தீர்­மானம் குறித்து, "நல்­லாட்­சி­மிக்க அர­சாங்­கத்­துடன் விளை­யாட வேண்டாம். இதுவே இன­வா­தி­க­ளுக்­கான எனது இறுதி எச்­ச­ரிக்கை" என பிர­தமர் ரணில்...

சங்கத்தானை ரயில் நிலையத்திற்கு அருகில் குண்டு வெடிப்பு!

சாவகச்சேரி - சங்கத்தானை ரயில் நிலையத்தின் முன்பாக குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது என சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று புதன்கிழமை இரவு 9.20 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. சங்கத்தானை ரயில் நிலையம் முன்பாக உள்ள காணியிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது. குறித்த காணியை இன்று...

மருதங்கேணி கடலிலிருந்து விரைவில் யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் விநியோகம்! – முதலமைச்சர்

வெகு விரைவில் மருதங்கேணியில் இருந்து யாழ்ப்பாண மக்களுக்கு குடிநீர் வழங்கப்படவுள்ளது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா பொது வைத்தியசாலையில் 37 லட்சம் ரூபா பெறுமதியில் தீயாகி அறக்கட்டளை அமைப்பால் உருவாக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர் மேலும்...

நிலத்தடி நீரில் கழிவுஎண்ணெய் தொடர்பாக ஆராய நோர்வே நிபுணர்கள் வருகை

வலிகாமம் பிரதேசத்தில் நிலத்தடி நீரில் கழிவுஎண்ணெய் கலந்துள்ளது தொடர்பாக ஆராய்வதற்காக நோர்வே நாட்டு நிபுணர்கள் வருகை தந்துள்ளனர். இவர்கள் இப்பிரச்சினை தொடர்பாக வடக்கு விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசனை அவரது அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை (25.02.2015) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்கள்....

ஐ.நா. உயர் அதிகாரி சனியன்று கொழும்பு வருகிறார்!

ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட பிரதிநிதி எதிர்வரும் சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதிநிதி ஜெப்ரி பெல்ட்மன்டே இலங்கை வரவுள்ளார். அவர் எதிர்வரும் சனிக்கிழமை இலங்கைக்கு பயணமாவார் என்று ஐ.நா. செயலாளர் நாயகத்தின் ஊடகப் பேச்சாளர் டுஜாரிக் தெரிவித்துள்ளார். ஜெப்ரி பெல்ட்மன்ட் தனது இலங்கை...

வித்தியாசமான புகைப்போக்கி

யாழ்ப்பாணம், சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் சமையல் அறையில் அமைக்கப்பட்ட புகைப்போக்கி வித்தியாசமான முறையில் எண்ணெய் பரல்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள வீடுகளில் சீமெந்து கட்டுக்களிலான புகைப்போக்கிகள் வீடுகளில் நிர்மாணிக்கப்படுவது வழமை. எனினும் இந்த புகைப் போக்கியானது 5 எண்ணெய் பரல்களை அடுக்கி அமைக்கப்பட்டுள்ளது. புகைப்போக்கி சரிந்து விழாமல் இருப்பதற்கு உறுதுணை கம்பிகளும் கட்டப்பட்டுள்ளன.

இரு பிரதேச சபை தேர்தலுக்கான பிரசாரங்கள் நிறைவு

எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இரு பிரதேச சபைத் தேர்தலுக்காக போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் தங்களது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை இன்று புதன்கிழமையுடன் நிறைவு செய்ய வேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,...

புதிய இராணுவத் தளபதி – ஜனாதிபதி சந்திப்பு!

புதிதாக அண்மையில் நியமனம் பெற்ற இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் எ.டபிள்யூ.ஜே.கிரிசாந்த டி சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்துள்ளார். புதிதாக இராணுவ தளபதியாக நியமனம் செய்யப்பட்ட இவர் தனது நியமனத்தின் பின் நேற்று ஜனாதிபதியை சந்தித்துள்ளார். இலங்கை இராணுவத்தில் 36 வருட கால சேவையை பூர்த்தி...

சுழிபுரம் கொலையாளியை கொல்லப்பட்டவரின் மனைவி, அடையாளம் காட்டினார்

சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் கடந்த மாதம் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான அறுவரில், பிரதான சந்தேக நபரை கொல்லப்பட்டவரின் மனைவி, செவ்வாய்க்கிழமை (24) அடையாளம் காட்டினார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை மல்லாகம் நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்றபோது, சந்தேகநபர்கள் அறுவரும் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டனர். வழக்கு விசாரணைக்கு...

ஜனாதிபதி, சாரணர் விருதுக்கான நேர்முகத்தேர்வு

இலங்கை ஜனாதிபதி, சாரணர் விருதுக்கான நேர்முகத் தேர்வு இலங்கை சாரணர் தலைமையக பிரதி பிரதம ஆணையாளர் எஸ்.ஏ.அமரசிங்க தலைமையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்றது. யாழ்.மாவட்ட சாரண ஆணையாளர் ச.சௌந்தரராஜனினின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நேர்முகத் தேர்வில், இலங்கை சாரணர் தலைமையகத்தைச் சேர்ந்த ரூபன் ஆரியரத்தின, எஸ்.சௌந்தரராஜன், சரத் சோம விக்கிரம சிங்க,...
Loading posts...

All posts loaded

No more posts