Ad Widget

உள்ளகப் பொறிமுறை உருவாக்கும் விடயத்தில் அனைவருடனும் கலந்தாலோசிக்க ஐ.நா.வேண்டுகோள்

உள்ளகப் பொறிமுறையை உருவாக்கும் விடயத்தில் அனைத்து அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள், பாதிக்கப்பட்டவர்கள் உட்பட அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசிக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் குறித்து பொறுப்புகூறுவதுடன், நல்லிணக்கத்திற்கான உள்ளகப் பொறிமுறையையும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் செப்ரெம்பர் மாத அமர்வுக்கு முன்னதாக ஏற்படுத்தப்படவேண்டும் என எதிர்பார்ப்பதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சையத் அல் ஹுசைன் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் 29 ஆவது அமர்வை நேற்று ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இலங்கையின் புதிய அரசு அரசமைப்பு மாற்றத்தை நிறைவேற்றியுள்ளது, அதனை உரிய விதத்தில் நடைமுறைப்படுத்தினால் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி குறித்த நம்பிக்கைகளை ஏற்படுத்தும். செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் பொறுப்புக்கூறுதல் மற்றும் நல்லிணக்கத்திற்காக நம்பகத்தன்மை மிகுந்த உள்ளகப் பொறிமுறையை ஏற்படுத்துவதற்கான வெளிப்படையான – அனைவரையும் உள்வாங்கும் செயற்பாடுகள் குறித்து எனது அலுவலகம் இலங்கையுடன் தொடர்ந்தும் பேச்சுகளை மேற்கொள்ளும். சகல அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள், பாதிக்கப்பட்டவர்கள் உட்பட அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசிக்குமாறும், இலங்கை அரசை நான் கேட்டுக்கொள்கிறேன் – என்றார்.

Related Posts