Ad Widget

வித்தியா படுகொலை வழக்கு இன்று விசாரணை!

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 10 சந்தேக நபர்களும் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

இந்த படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த 9 சந்தேக நபர்கள் கடந்த முதலாம் திகதி ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து அவர்களை இன்றுவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்தவாரம் இச்சம்பவம் தொடர்பாக 10 ஆவது சந்தேக நபரும் கைது செய்யப்பட்டிருந்தார். இவர்கள் 10 பேருமே இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

கடந்த 01 முதலாம் திகதி நடைபெற்ற விசாரணையின்போது 9 ஆவது சந்தேக நபர் கொழும்புக்கு தப்பிச் சென்றமை தொடர்பில் விசேட விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிவான் பணிப்புரை விடுத்திருந்தார்.

இந்த விசாரணை அறிக்கை இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய விசாரணையின்போது பாதிக்கப்பட்டோரின் நலனை கவனிப்பதற்காக சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராஜாவின் தலைமையில் சட்டத்தரணிகள் ஆஜராகவுள்ளனர்.

Related Posts