Ad Widget

5 மாதங்களில் 15,171 பேருக்கு டெங்கு!!

கடந்த ஐந்து மாதங்களில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 15,171 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு அறிவித்துள்ளது.

இதில் 4,300 க்கும் மேற்பட்டோர் கொழும்பு மாவட்டத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர்.

தொற்று நோய் பிரிவின் அறிக்கையின் படி, கொழும்பு மாவட்டத்தில் 4,327 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 2,076 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 737 பேரும் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, இரத்தினபுரி மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சலினால் கூடுதலானோர் பாதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Posts