Ad Widget

காரைநகர் பிரதேச சபை தவிசாளருக்கு தொடர்ந்தும் மறியல்

காரைநகர் பிரதேச சபை தவிசாளருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 22 ஆம் திகதி காரைநகர் வலந்தலை பகுதியிலுள்ள வீடொன்றில் அத்துமீறி நுழைந்து ஒருவரைத்தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் உட்பட ஐவரை கடந்த 13ஆம் திகதி ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்தனர்.

ஐவரும் நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். குறித்த வழக்கு நேற்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்போது தவிசாளர் ஆனைமுகனை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதுடன் மற்றய நால்வரையும் தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான ஆட்பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

Related Posts