வெள்ளைவான் கடத்தல்கள் விசாரிக்க புதிய ஆணைக்குழு; கருணா , பிள்ளையான், டக்ளஸிடமும் விசாரணை

வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பருந்துரைக்கமைய ஐந்து பேரடங்கிய குழு ஒன்று நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு நீதிமன்ற நீதிபதி பிரியந்த குணவர்த்தன தலைமையில் ஐவரடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளது என்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவின்...

மைத்திரி அரசை எதிர்த்து போராடவும் தயங்க மாட்டோம்: வலி.வடக்கு மக்கள்

வலி.வடக்கு மக்களை அவரவர் நிலங்களில் விரைவில் முழுமையாகக் குடியமர்த்துங்கள்.இல்லையேல்,கடந்த அரசுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடியதைப் போல் விரைவில் வீதியில் இறங்கிப் போராடத் தயங்கமாட்டோம் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் வலி.வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவர் அ.குணபாலசிங்கம். வலி.வடக்கு மக்கள் அவர்களது சொந்த நிலங்களை விட்டு இடம்பெயர்ந்து இன்றுடன் 25 வருடங்கள் பூர்த்தியாகின்றன.அதனை முன்னிட்டு...
Ad Widget

விளக்கேற்றிய ரவிகரனிடம் விசாரணை

வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முல்லைத்தீவு பொலிஸார் சனிக்கிழமை (13) விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி நடைபெற்ற மாவீரர் தினத்தன்று, விளக்கேற்றி மாவீரர்களை நினைவுகூர்ந்தமை தொடர்பிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஒன்றரை மணிநேரமாக நடைபெற்ற இந்த விசாரணையின் போது, யாருடைய பின்புலத்தின் அடிப்படையில் விளக்கேற்றல் நிகழ்வு இடம்பெற்றது?...

மருந்து எடுத்தால் பற்றுச்சீட்டு கொடுக்கவும்

தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு, முழு விபரங்கள் அடங்கிய பற்றுச்சீட்டை வழங்குவது, நவம்பர் முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறான விபரங்கள் அடங்கிய பற்றுச்சீட்டுக்களை விநியோகிக்கத் தவறும் வைத்தியசாலைகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்தது. மருந்து வழங்கும் வைத்திய சேவை மற்றும் மருந்து விபரங்கள் தொடர்பான தகவல்களைப்...

5 மாதங்களில் 15,171 பேருக்கு டெங்கு!!

கடந்த ஐந்து மாதங்களில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 15,171 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு அறிவித்துள்ளது. இதில் 4,300 க்கும் மேற்பட்டோர் கொழும்பு மாவட்டத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர். தொற்று நோய் பிரிவின் அறிக்கையின் படி, கொழும்பு மாவட்டத்தில் 4,327 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 2,076 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 737 பேரும்...

புங்குடுதீவு விவகாரம்: உயர்பொலிஸ் அதிகாரி குறித்து சி.ஐ.டி விசாரணை

புங்குடுதீவு மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சந்தேகநபரை, விடுவிக்குமாறு உயர் பொலிஸ் அதிகாரியொருவர் கட்டளையிட்டதாக கூறப்படுவது தொடர்பில் இரகசிய பொலிஸார் (சி.ஐ.டி) மற்றும் பொலிஸ் விசேட விசாரணை பிரிவின் இரண்டு குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் இடம்பெற்ற அண்மைய நாளொன்றில் அந்த சந்தேகநபரை கிராமத்தவர்கள் பிடித்து உப-பொலிஸ் பரிசோதகர் மற்றும்...

 நாடாளுமன்றத்தை கலைப்பதே நல்லது – த.தே.கூ

வடக்கு மற்றும் கிழக்கு தமிழர் தொடர்பான பிரச்சினைகளை கையாளக் கூடிய புதிய நாடாளுமன்றம் உருவாக வழிவகுக்கும் வகையில் தற்போது நாடாளுமன்றத்தை கலைப்பது பொருத்தமாக இருக்குமென கருதுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று கூறியது. இம்முறை தேர்தலில் போட்டியிடுவதற்கும் அதற்கான விஞ்ஞாபனத்தை தயாரிப்பதற்குமான நியமனங்கள் பற்றி சர்வதேச கருத்தாடல்களை நடத்திவருவதாக த.தே.கூ பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

யாழில் தேவாலயத்திற்குச் செல்வதாக கூறிச் சென்ற யுவதி மாயம்

தேவாலயத்திற்கு செல்வதாக சென்ற யுவதி ஒருவரை காணவில்லை என சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சுன்னாகம் கிழக்கை சேர்ந்த யுவதியே இவ்வாறு காணாமல் போயுள்ளார். சுன்னாகம் பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு செல்வதாக சனிக்கிழமை வீட்டில் இருந்து சென்றவர் ஞாயிற்றுக்கிழமை காலை வரை வீடு திரும்பவில்லை எனத் தெரிகிறது. அதனை அடுத்து பெற்றோரால் ஞாயிற்றுக்கிழமை காலை...

வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படவில்லை – மஹிந்த கூறியது பொய்!

தற்போதைய அரசாங்கம் வடக்கிலுள்ள எந்தவொரு இராணுவ முகாமையும் நீக்கவில்லை என, ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் கசிம் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அண்மையில் மாத்தறையில் இடம்பெற்ற பேரணிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுப்பிய அறிக்கையில் வடக்கில் இருந்து தற்போதைய அரசாங்கம் 59 இராணுவ முகாம்களை...

வடக்கு முதல்வருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

வலி.கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அன்னலிங்கம் உதயகுமார் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வலி. கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் அன்னலிங்கம் உதயகுமார் 2014ஆம் ஆண்டு தவிசாளர் பதவியில் இருந்து வடக்கு மாகாண முதலமைச்சரினால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். சபையின் 2013ஆம்...

புலம்பெயர் தமிழர்கள் பயங்கரவாதிகள் அல்லர் என்ற அரசின் கூற்றை மனதார வரவேற்கிறது கூட்டமைப்பு!

"புலம்பெயர் தமிழர்கள் பயங்கரவாதிகள் அல்லர் என்று அரசு பகிரங்கமாக அறிவித்துள்ளதை மனதார வரவேற்கின்றோம். புலம்பெயர் தமிழர்களுடன் இந்த அரசு மனம் விட்டு பேச முன்வந்துள்ளமை மிகவும் முற்போக்கான செயலாகும். மைத்திரி அரசின் இந்த முன்னேற்றகரமான நடவடிக்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கும் அவருடன் சேர்ந்து ஒப்பாரி வைக்கும் இனவாதிகளுக்கும் தக்கபாடமாகும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

மதுபானத்தின் சொர்க்கபுரியாக யாழ்ப்பாணம்!

யாழ்ப்பாணத்தில் மதுபானத்தின் பாவனை 2009 இன் பின்னர் பல மடங்குகள் அதிகரித்துள்ளன என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மதுவரித் திணைக்களத்தின் ஆதாரங்களின்படி 2009 இல் யாழ்ப்பாணத்தில் 7 இலட்சத்து 62 ஆயிரத்து 610 லீற்றர் பியர் நுகரப்பட்டது. அதுவே 2013 இல் ஐந்து மடங்கால் அதிகரித்து 40 இலட்சத்து 56 ஆயிரத்து 999 லீற்றர் பியர் நுகரப்பட்டது....

காரைநகர் பிரதேச சபை தவிசாளர் உட்பட ஐவர் கைது

வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டு வீட்டிலிருந்தவரை அடித்துக் காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் உட்பட ஐவர் நேற்று சனிக்கிழமை (13) கைதுசெய்யப்பட்டதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். கடந்த மே மாதம் 22ஆம் திகதி காரைநகர், வலந்தலை பகுதியிலுள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவரின் வீடொன்றுக்குள் ஐந்து பேர் கொண்ட...

தமிழகத்தில் இலங்கை அகதி ஒருவர் தப்பி ஓட்டம்

தமிழகத்தில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர் ஒருவர் தப்பி ஓடியுள்ளார். இது குறித்து தமிழக ஊடகமம் வௌியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, இராமநாதபுரம், மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கி இருந்தவர் சுரேஷ் என்ற நிஷாந்தன் (28). கடந்த 3 மாதத்துக்கு முன்பு புதுக்கோட்டையில் கஞ்சா கடத்திய வழக்கில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த...

20 பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெற்றாலும் அமுல்படுத்துவது எளிதல்ல

புதிய தேர்தல் முறை­யா­னது எழுத்து வடிவில் கிடைக்­கப்­பெறும் வரையில் அதில் உள்­ள­டக்கம் குறித்து தெளிவ­டைந்­து­வி­ட­மு­டி­யாது. புதிய தேர்தல் முறைமை பாரா­ளு­மன்­றத்தின் அங்­கீ­கா­ரத்தைப் பெற்­றுக்­கொண்­டாலும் அதனை அமுல்­ப­டுத்­து­வ­தென்­பது எளி­தான காரி­ய­மல்ல. எனவே அடுத்து இடம்­பெ­ற­வி­ருக்­கின்ற பாரா­ளு­மன்றத் தேர்தல் புதிய முறையில் அல்­லது தற்­போது அமுலில் உள்ள விகி­தா­சார முறையின் ஊடா­கவே இடம்­பெறும் சாத்­தியம் தென்­ப­டு­ப­வ­தாக தமிழ்த் தேசியக்...

கொக்கிளாயில் விஹாரை அமைக்கும் பணி இடைநிறுத்தம்

கொக்கிளாய் பகுதியில் தனியார் காணியில் அத்துமீறி கட்டப்பட்டு வந்த விஹாரை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை (12) இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார். காணிப்பிணக்குகளை தீர்க்கும் பொருட்டு வெள்ளிக்கிழமை (12) முல்லைத்தீவில் இடம்பெற்ற காணி அமைச்சின் உயர் அதிகாரிகளின் நடமாடும் சேவையிலேயே மேற்படி முடிவு எட்டப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கற்றுக்கொண்ட...

 பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 41பேர் கைது

நீதிமன்றங்களினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 41பேரை நேற்று வெள்ளிக்கிழமை (12) கைது செய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கை மூலமே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, திருட்டு, பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளுடன் தொடர்புடையோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் 2014ஆம்...

கடாக்கள், சேவல்கள் வெட்டப்பட்டு துர்க்காபுரம் பேரம்பல வைரவருக்கு வேள்வி!

தெல்லிப்பழை துர்க்காபுரம் பேரம்பல வைரவர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவும் வேள்வியும் இன்று மிகவும் பக்திப் பரவசமாக இடம்பெற்றது. அதிகாலையில் இடம்பெற்ற பொங்கல்கள் படையல்கள் மற்றும் விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து வேள்விக்கு கடாக்கள் பலியிடும் நிகழ்வுகள் இடம்பெற்றன. தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி எஸ்.நந்தகுமார் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் கடாக்களை பரிசோதனை செய்து அனுமதி...

கிளிநொச்சியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணைக் காணவில்லை!

கிளிநொச்சி, திருநகரைச் சேர்ந்த கணேசமூர்த்தி சாந்திமலர் (வயது 48) என்ற பெண்ணை கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணவில்லையென, அப்பெண்ணின் உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி நகரிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த போது வீட்டுக்கு அருகில் முச்சக்கரவண்டியில் வந்தவர்களால் வழக்கு விசாரணைக்கு ஒன்றுக்கு வருமாறு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அதன் பின்னர் அவர் இதுவரையில்...

யாழ்ப்பாணத்தின் அனைத்து இடங்களிலும் தரப்பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை

பாடசாலை மாணவர்களை ஏற்றியிறக்கும் சேவையில் ஈடுபடும் வாகனங்களை தரப்பரிசோதனை செய்யும் நடவடிக்கையானது யாழ். மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் திடீரென அறிவிக்கப்படாத நாட்களில் மேற்கொள்ளப்படும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள யாழ். மாவட்ட பொறுப்பதிகாரி கோபாலபிள்ளை மதிவண்ணன் வெள்ளிக்கிழமை (12) தெரிவித்தார். பாடசாலை மாணவர்களை ஏற்றியிறக்கும் சேவையில் ஈடுபடும் வாகனங்களை தரப்பரிசோதனை செய்யும் நடவடிக்கை யாழ்.பொதுநூலகத்துக்கு வெள்ளிக்கிழமை...
Loading posts...

All posts loaded

No more posts