- Friday
- November 21st, 2025
காணாமல் போனோர் தொடர்பான விபரங்களை அரசாங்கம் உடனடியாக வெளியிடுமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் இன்று சனிக்கிழமை காலை யாழ்ப்பாணம் நகர பேருந்து நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பான விபரங்களை உடனடியாக அரசாங்கம் வெளியிடவேண்டும் என வலியுறுத்தி கொட்டும் மழைக்கும் மத்தியில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. சம உரிமை இயக்கத்தினரின்...
பாவனை அதிகாரசபை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் இரும்புக்கம்பிகள் இருந்தமை வெள்ளிக்கிழமை (27) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என பாவணை அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் இடம்பெற்றமை பாவனை அதிகார சபை அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. யாழ். நகரப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் திடீர் நடவடிக்கையில் ஈடுபட்ட...
வழி அனுமதிபத்திரத்தை முறைகேடாக பயன்படுத்தி சேவையில் ஈடுபட்ட தனியார் பஸ்ஸை வெள்ளிக்கிழமை (27) கொடிகாமம் பகுதியில் வைத்து கைப்பற்றியுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி 35 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பஸ்ஸை, கொடிகாமம் பொலிஸ் பொறுப்பதிகாரி தலமையிலான குழுவினர் மறித்து சோதனையிட்டனர். இதன் போது, வழி அனுமதிபத்திரத்தில் போலியான கையெழுத்தினை பாவித்து,...
முஸ்லிம் மக்கள் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும்போது, தங்களுக்கு தேவையானவற்றை பேரம் பேசிப் பெற்றுக்கொள்கின்றனர். ஆனால், நாங்கள் அரசாங்கத்திடம் எவ்வித பேரம் பேசலையும் செய்யவில்லையென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில், மாவட்டம் அமைந்துள்ள மாகாண முதலமைச்சர் மற்றும் மாவட்டத்தில் அதிக வாக்குப் பெற்ற கட்சியின் பிரதிநிதி ஆகியோர் இணைத் தலைவர்களாக இருப்பார்கள்...
நோர்வே அரசாங்கத்தின் 67 மில்லியன் ரூபாய் நிதியுதவி வளலாய் பகுதி மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்ப்ஜோன் கெஸ்ராட்செதர் தெரிவித்தார். இலங்கைக்கான தூதுவராக பதவியேற்ற தோர்ப்ஜோன், நோர்வே அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து அறிந்துகொள்வதற்காக வடக்குக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன் ஒரு அங்கமாக கடந்த 30 வருடங்களாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில்...
யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்பான ரயில் கடவைகள் ரயில் வருவதற்காக மூடப்படும் போது, ரயில் கடவையானது எப்போது திறக்கப்படும் என்ற அவசரத்தில் எதிரே வரும் வாகனங்களுக்கு இடம் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நினைக்காமல் வீதியை முழுமையாக ஆக்கிரமித்து நிற்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இரட்டை வீதிகள் என்பது இல்லாமல், இருவழிக்கு ஒரே வீதியில் நடுவில் வெள்ளைக்...
தமிழினத்தின் விடுதலைக்காக உயிர் துறந்த உத்தமர்களின் நினைவாலயங்கள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. ஆனால், நினைவுச் சின்னங்களை அழித்தாலும் மக்கள் மனங்களில் இருந்து அவர்களது நினைவுகளை எவராலும் அழித்துவிட முடியாது. அவர்களின் நினைவாக மரங்களை நாட்டிப் போற்றுவோம் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். மாவீரர் தினமான இன்று உயிர் ஈகம் செய்த போராளிகளை நினைவு கொள்ளும்முகமாக இத்தாவில்...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தன்னுயிரை மாய்த்துக் கொண்ட மாணவன் செந்தூரனின் பூதவுடல் ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் சிந்த அக்கியுடன் சங்கமமானது. மாணவன் செந்தூரனின் இறுதிக் கிரியைகள் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. கோப்பாய் வடக்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் பூதவுடல் வைக்கப்பட்டிருந்ததுடன், பெருந்திரளான மக்கள் அவரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள்...
யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் தலைமையில் பரமேஸ்வரா ஆலய முன்றலில் தீபம் ஏற்றி வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் பெருமளவான பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டிருந்ததாக அறியமுடிகின்றது.
வடக்கில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கான தொழில்வாய்ப்பு முயற்சியினை எற்படுத்த நோர்வே அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் இலங்கையின் பல்வேறு துறைகளில் அபிவிருத்திகளை ஆராய்ந்துவரும் இத்தருணத்தில் வடக்கில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கான தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் ஏன் முன்வரவில்லை. அதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்க இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்ப் ஜோர்ன் கோஸ்ரட்சீதர்...
வடமராட்சி, மணற்காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் காலத்தில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் தங்க நகைகள் மற்றும் பணத்தை மீட்டெடுக்கும் வகையில் நேற்று வியாழக்கிழமை (26) மேற்கொள்ளப்பட்ட தோண்டும் நடவடிக்கையில் எவையும் சிக்கவில்லை. சுமார் 7 அடி ஆழத்துக்கு மண் அகழப்பட்ட போதும், கட்டடடிபாடுகள் மாத்திரமே கிடைத்தன. மணற்காட்டுப் பகுதிக்கு, கடந்த 20 ஆம் திகதி சென்ற ஐந்து...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தற்கொலைச் செய்து கொண்ட மாணவன் செந்தூரனின் உணர்வுகளையும், எதிர்ப்பார்ப்பினையும் இந்த அரசாங்கம் புரிந்து கொள்ளும் என்பதில் நம்பிக்கை இல்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று வடக்கு முதல்வரைச் சந்தித்த ஊடகவியலாளர்கள் மாணவனின் தற்கொலை தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இன்று காலை நல்லூர் கந்தசுவாமி கோவில் வளாகத்தில் அவர் மாவீரர்களுக்கு தீபமேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்த நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு இடம்பெற்றதோடு, இதில் உயிர்நீத்தவர்களின் உறவினர்களும் கலந்துகொண்டனர். மாவீரர் தினத்தினை முன்னிட்டு வடக்கில்...
வரவு செலவு திட்டத்தில் விலை குறைப்புச் செய்யப்பட்ட பொருட்கள் பலவற்றின் புதிய விலை உள்ளிட்ட வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விலை குறைப்புச் செய்யப்பட்ட பருப்பு, நெத்தலி, கருவாடு, 400 கிராம் உள்நாட்டு பால்மா மற்றும் கடலை வகைகள் என்பவற்றின் புதிய விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக, நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, உலர்ந்த...
புலம் பெயர்ந்தோர் அமைப்புகள் மற்றும் தனி நபர் சிலர் மீதான தடைகள் நீக்கஞ் செய்யப்பட்டுள்ளமை, தேசிய நல்லிணக்கம் தொடர்பில் அரசாங்கம் காட்டியுள்ள நல்லெண்ண சமிக்ஞையாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பிடி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், 2014ம் வருடம் மார்ச்...
வடக்கில் இன்று மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடுக்க, பாதுகாப்பு அமைச்சு முழு அளவிலான விழிப்பு நிலையில் இருக்கும் என்று நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், “ விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பு. அரசியலமைப்பின் படி, நாட்டுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் எந்தவொரு அமைப்புத் தொடர்பான...
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, தன் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவனின் கடிதத்தை பொலிஸார் உள்ளிட்ட சில தரப்பினர் மூடி மறைக்க முயற்சித்து வருவதாக தாம் சந்தேகிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். குறித்த கடிதத்தின் பிரதிகள் தமக்கும் கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர், அவ்வாறான ஒரு கடிதம் கிடைக்கவில்லையென...
தமிழ்க்கைதிகளின் விடுதலையினை வலுயுறுத்தி கோண்டாவில் தொடருந்து வழித்தடத்தில் தொடருந்து முன் பாய்ந்து தன்னை மாய்த்துக் கொண்ட மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரனது சம்பவத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சர் சுதன்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : மாவீரர்களை நினைவேந்தி நிற்கும்...
தமிழீழ தேசிய தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் நேற்று யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் கொண்டாடப்பட்டது. தேசிய தலைவரின் 61 வது பிறந்தநாள் நேற்று உலகில் பல்வேறு நாடுகளில் தமிழர்களால் கொண்டாடப்பட்ட நிலையில், இராணுவ நெருக்குவாரங்களால் இலங்கையில் கொண்டாடப்படக் சூடிய சூழ்நிலை இருக்கவில்லை. எனினும், நேற்று மாலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் பிரத்தியேக இடத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் மாணவர்களால் நடத்தப்பட்டுள்ளது. அதேவேளை,...
மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதால் அரசு பலவீனமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய தேவையில்லை என பெற்றோலிய மற்றும் கனியவளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். இலங்கை சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி...
Loading posts...
All posts loaded
No more posts
