Ad Widget

சாதாரண தர பரீட்சை : கைத்தொலைபேசிகள் எடுத்துச் செல்ல தடை

2015ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் இன்று ஆரம்பமாகின்றன.

இன்று காலை 08.30 மணிக்கு பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதோடு, மாணவர்களை 08.00 மணிக்கே பரீட்சை மண்டபத்துக்கு சமூகமளிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.

அத்துடன் மாணவர்கள் பரீட்சை நிலையத்திற்கு கைத்தொலைபேசிகள், குறிப்புகள் மற்றும் எந்தவொரு உதவி பொருட்களையும் எடுத்துச் செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தடையை மீறி இவ்வாறான பொருட்களை பரீட்சை மண்டபத்திற்கு எடுத்துச் செல்லும் பரீட்சார்த்திகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் அந்த மாணவர்களின் பெறுபேறுகள் வௌியிடப்படமாட்டாது என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Posts