Ad Widget

தமிழக மக்களுக்கு உதவும் வட மாகாணசபையின் ஆர்வத்துக்கு இந்தியத் துணைத்தூதுவர் நன்றி!

தமிழக வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு இதுவரை அயல் நாடுகளிடம் இந்தியா உதவி கோரவில்லையென யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வட மாகாண சபை உதவ முன்வந்தபோது, அதனை இந்தியா நிராகரித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இதன் உண்மைத் தன்மை குறித்து இந்திய துணைத் தூதரகத்தின் துணைத் தூதுவர் ஏ.நடராஜன் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழக மக்களுக்கு உதவுவது குறித்து கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வடக்கு முதல்வர் தம்மிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இதுவரை அயல்நாடுகளிடம் உதவி கோரவில்லையென்றும், எனினும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் தாராளமாக உதவாலாமென்றும் தான் குறிப்பிட்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும், தமிழக மக்களுக்கு உதவ வேண்டுமென்ற வட மாகாண சபையின் ஆர்வம், உணர்வு ஆகியவற்றை நன்கு உணர்ந்து கொண்டதாக தெரிவித்த அவர், அதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

Related Posts