எனது மகன் விடுவிக்கப்படவேண்டும் இல்லையெனில் என்னை மாய்த்து கொள்ள வேண்டி வரும்! – அரசியல் கைதியின் தாயார்

எனது மகன் விடுவிக்கப்படவேண்டும் இல்லையெனில் என்னை மாய்த்து கொள்ள வேண்டி வரும் என சிறையில் உள்ள அரசியல் கைதியின் தாயார் ஒருவர் தெரிவித்தார். கொடிய யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகளுக்கு மேலாகியும் சிறையில் உள்ள அரசியல் கைதிகள் பலர் விடுவிக்கப்படாமல் பல துன்பங்களை அனுபவிப்பது மட்டுமன்றி அவர்களது குடும்பமும் சொல்லொனா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். சிறைக்கைதிகள்...

இறுதிப்போரில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளுடன் ஜனாதிபதி இரகசிய சந்திப்பு!

இறுதிக்கட்டப் போரில் பங்கெடுத்த 9 இராணுவ அதிகாரிகள் இரகசியமான முறையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த போர்க் குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு பொறிமுறையின் கீழ் விசாரணை நடத்தப்பட உள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இராணுவத்தில் உள்ள இந்த 9 சிரேஷ்ட அதிகாரிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இரகசியமான...
Ad Widget

ஐந்து வயது மகள் முன்னால் தமிழ் அகதி தற்கொலை முயற்சி!

இலன்கையிலிருந்து கடல்வழியாக ஆஸ்ரேலியவிற்க்கு தனது மனைவி மற்றும் 5 வயது மகளுடன் புகலிடம் கோரி வந்த தமிழ் அகதி ஒருவர் நாவுரு தடுப்பு முகாமில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியில் இருந்து தற்கொலை முயற்சியில் ஈடுபடார். 30 வயதான குறித்த தமிழர் 2012 ஆம் ஆண்டு நடுப் பகுதியில் கடல் வழியாக படகு மூலம் ஆஸ்ரேலியவிற்க்கு...

அரசியல் கைதிகள் விவகாரம் மீண்டும் மந்தகதிக்குச் சென்றது! – முதலமைச்சர் கவலை

அரசியல் கைதிகள் விவகாரம் மீண்டும் மந்தகதிக்கு தள்ளப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் காணப்பட்ட வீச்சு இப்போது இல்லை போன்று தோன்றுகின்றது என்று குறிப்பிட்ட அவர் அரசாங்கம் குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமக்கு உறுதியளித்தவாறு சகல கைதிகளையும் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்...

11 அத்தியாவசிய பொருட்களில் 4 பொருட்கள் மாயம்

2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தில், 11 அத்தியாவசிய பொருட்களுக்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், நுகர்வோர் விவகார அதிகார சபையின் வர்த்தமானி அறிவிப்பில், ஏழு பொருட்களின் பெயர் விவரங்கள் மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளன என்று, நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. வரவு- செலவுத்திட்ட அறிக்கையின் பிரகாரம், பருப்பு, சமையல் எரிவாயு, நெத்தலி, கடலை, உருளைக்கிழங்கு, கட்டாக்...

பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்கள் நாளை முதல்!

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளுக்கான வவுச்சர்கள் நாளை முதல் டிசம்பர் 03 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். சீருடைகளுக்கான வவுச்சர்களை வழங்குவது தொடர்பில் மாகாண மட்ட கல்விப் பணிப்பாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்....

புலிச் சந்தேகநபர்களின் வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்குகளைத் துரிதமாக விசாரணைக்கு உட்படுத்துவதற்கு, சிறப்பு மேல் நீதிமன்றம் நிறுவப்பட்டுள்ளது. அவ்வாறான வழக்குகளை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு, மேல் நீதிமன்ற ஆணையாளராக முன்னாள் நீதிபதி ஐராங்கனி பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். 31 வருடங்கள் நீதிபதியாகச் சேவையாற்றிய ஐராங்கனி பெரேரா, இராணுவ வீராங்கனையான இனோகா...

வடக்கு, கிழக்கு மக்களை மீட்டெடுக்க விசேட திட்டம் தேவை! – சம்பந்தன்

நாட்டின் அபிவிருத்திக்குப் பாரிய பங்களிப்பைச் செலுத்தக்கூடிய வடக்கு, கிழக்கு மக்களை மீட்டெடுக்க விசேட திட்டம் தேவை. இவர்களின் பிரச்சினையை அவசர நிலைமையாகக் கருதி முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக விசேட கவனம் செலுத்தி தாமதமின்றி நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்கவேண்டும். இரு கட்சிகளும் இணைந்ததன் முக்கிய குறிக்கோளை அரசு மறந்துவிடக்கூடாது. இவ்வாறு நாடாளுமன்றில் வலியுறுத்தினார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்...

கிளிநொச்சியில் இராணுவ துணைப்படையினருக்கு முன்பள்ளி ஆசிரியர் நியமனம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத் துணைப்படையினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்பள்ளி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சபையில் கடும் எதிர்ப்பை வெளியிட்டார். முன்பள்ளி செல்லும் தமிழ்க் குழந்தைகள் இராணுவச் சின்னம் பொறித்த சீருடையுடனேயே செல்கின்றனர். இது சரியானதா எனக் கேள்வி எழுப்பியதுடன், இந்தச் செயற்பாடானது தமிழ்க்...

யாழில் கஞ்சாவுடன் ஏழ்வர் கைது

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ்ஸில் இருந்து 7 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் மேலும் 5 கிலோ கஞ்சாவுடன் ஐவரைக் யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர். யாழ். நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த இருவர் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் சொகுசு பஸ்ஸில் ஏறியுள்ளனர்....

மருதங்கேணி பிரதேசசபை தனியாக்கப்பட வேண்டுமென கோரிக்கை

வடமாராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச சபை தனியாக்கப்பட வேண்டுமென்றும், நல்லூர், சுன்னாகம், மானிப்பாய், சங்கானை, நெல்லியடி போன்ற பிரதேசங்கள் நகர சபைகளாக தரம் பிரிக்க வேண்டுமென்று பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளதாக, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் 2016ம் ஆண்டில் யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி மற்றும்...

யாழ் நூலகத்துக்கு புத்தகங்களை அன்பளிப்பு செய்த தென்னிலங்கை மக்கள் !!

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு நாட்டின் தென்பகுதியைச் சேர்ந்த கலைஞர்கள், எழுத்தாளர்கள், பொதுமக்கள் சிலர் இணைந்து 10,000 புத்தகங்களை ஞாயிறன்று அன்பளிப்பு செய்திருக்கின்றார்கள். கடந்த 1981 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி நள்ளிரவு கடந்த நேரத்தில் இடம்பெற்ற அரச வன்முறைச் சம்பவம் ஒன்றில் யாழ்ப்பாணம் நூலகம் எரியூட்டப்பட்டது. இதன்போது அங்கிருந்த...

யாழ்ப்பாணத்தில் இன்னமும் 9700 ஏக்கர் நிலம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில்!

யாழ்.மாவட்டத்தில் தமிழ் மக்களின் சுமார் 9700 ஏக்கர் நிலம் தொடர்ந்தும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் மீள்குடியேற்ற நிலமைகள், மற்றும் தேவைகள் தொடர்பில் ஆராய்ந்து மத்திய அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்யும் நோக்கில் யாழ் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இது சுட்டிக்காட்டப்பட்டது. இந்நிலையில், குறித்த காணிகளுக்குச் சொந்தமான 9819 குடும்பங்களை சேர்ந்த...

பட்ஜெட்டை விமர்சித்து யாழில் சுவரொட்டிகள்

புதிய அரசின் வரவு- செலவுத்திட்டத்திலுள்ள விடயங்களை விமர்சித்து யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியில் முன்னிலை சோஷலிஸக் கட்சியினால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 'கூட்டரசாங்கம் பென்ஷனுக்கு வேட்டு' 'EPF - ETF கொள்ளையடிக்கிறது', 'உர மாணியம் நாசம் அரசாங்கத்தின் குண்டுக்கு சிக்காதிருப்போம்', 'பைக்- த்ரீ வீல் வாகனங்களுக்கு விதித்த வரியை சுருட்டிக்கொள்' ஆகிய வாசகங்கள் எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டபட்டுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிக்கு நோபல் பரிசு

2016ஆம் ஆண்டுக்கான சமாதானத்துக்கான நோபல் பரிசுக்காக மைத்திரிபால சிறிசேன பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இரண்டு பிரதான எதிர்க்கட்சிகளை இணைத்து, தேசிய அரசாங்கமொன்றை அமைத்ததற்காகவே இந்த விருது கிடைக்கலாம் என்றும் அவர் கூறினார்.

வடமாகாண சபை உறுப்பினர்களுக்கான பொலிஸ் பாதுகாப்பு வாபஸ்

வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு, சனிக்கிழமை (28) முதல் மீளப்பெறப்பட்டுள்ளதாக சபையின் உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் விரும்பினால் பொலிஸ் பாதுகாப்பினை பெற்றுக்கொள்ளமுடியும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், திருமதி அனந்தி சசிதரன், விந்தன் கனகரத்தினம் மற்றும் சபையின் எதிர்க்கட்சி...

2016ம் ஆண்டுக்கான வடமாகாண சபை வரவு செலவுத்திட்டம் முன்மொழிவு

வடமாகாண சபையின் 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம், நேற்று சபை அமர்வின்போது முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் முன்மொழியப்பட்டது. மத்திய அரசாங்கத்தினால் வடமாகாண சபைக்கு ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ள மொத்த நிதியின் அடிப்படையில், 2016ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்னோட்டம் முதலமைச்சரினால் முன்மொழியப்பட்டது. வடமாகாண சபையின் 2016ம் ஆண்டுக்கான வருடாந்த நிதிக்கூற்று அறிக்கை இன்றைய தினம் மாகாண சபையின்...

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு விரைந்து செயற்பட வேண்டும் எனக் கோரிக்கை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழும் அவசரகால சட்ட விதிமுறைகளின் கீழும் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளின் உரிமைகள் தொடர்பில் ´ஆழ்ந்த´ கவலையடைந்துள்ளதாக கூறியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டமா அதிபருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது. அவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் ஆணைக்குழு சட்டமா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளது. குற்றச்சாட்டுக்கள் இன்றியும், நம்பகமான ஆதாரங்கள் இன்றியும்...

வடமராட்சி கிழக்கில் வட்டாரங்கள் குறைப்பு மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும்!- டக்ளஸ் தேவானந்தா

யாழ் குடாநாட்டில் இயற்கை அனர்த்தங்கள் மற்றும் கடந்த கால யுத்தம் காரணமாக மிகவும் பாதிப்படைந்துள்ள வடமராட்சி கிழக்குப் பகுதியில் நான்கு வட்டாரங்கள் என தேசிய எல்லை நிர்ணயக் குழு அறிவித்துள்ளமை மீள் பரிசீலைனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில்...

வடக்கில் மாவீரர் தினம் மிகவும் அமைதியான முறையில் அனுஷ்டிக்கப்பட்டது – பொலிஸ் பேச்சாளர்

வடக்கில் மாவீரர் தினம் மிகவும் அமைதியான முறையில் அனுஷ்டிக்கப்பட்டதாகவும் சட்டத்தை மீறியமைக்காக எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். நல்லூர் கோவிலில் உயிரிழந்த தமது உறவுகளுக்காக சிலர் விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இது அவர்களின் தனிப்பட்ட விடயமாதலால் பொலிஸார் இதில் தலையிடவில்லை. மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கில் எவ்வித...
Loading posts...

All posts loaded

No more posts