யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிட செல்வோரின் கவனத்திற்கு

யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிடுவோருக்கென விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் வைத்தியசாலை நிர்வாகத்தினரால் தளர்த்தப்பட்டுள்ளன. இதில் நோயாளர்களை பார்வையிட வருவோர் அமர்ந்திருப்பதற்கென ஆசனங்களும் கடந்த வாரம் முதல் ஒதுக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களை பார்வையிடுவதற்கென வருவோர்கள் பாஸ் நடைமுறையின் படியே கடந்த சில வருடங்களாக அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதேபோல் பார்வையிட வருவோர் உள்ளே அனுமதிக்கப்படும் வரையில் வைத்தியசாலைக்கு...

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மூவருக்கெதிராக சட்ட நடவடிக்கை

யாழ். பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மூவருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு யாழ். மாநகர சபை ஆணையாளருக்கு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி பெ.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். யாழ்.நகரப் பகுதியில் இயங்கி வந்த உணவு விடுதி ஒன்றுக்கு கடந்த வருடம் ஜூலை மாதம் 31ஆம் திகதி 3 பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சென்று 3 கிலோ நிறையுடைய சோஸ்...
Ad Widget

எழுவைத்தீவு இறங்குதுறை புனரமைப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்! – டக்ளஸ் தேவானந்தா

மக்களின் போக்குவரத்து செயற்பாடுகளுக்கு ஏதுவாக எழுவைத்தீவு இறங்குதுறையை புனரமைப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். மேற்படி இறங்குதுறை நெடுங்காலமாக பழுதடைந்துள்ள நிலையில் இதனூடாகப் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள் பாரிய சிரமங்களுக்கு உள்ளாவதாக தீவகப் பகுதி அபிவிருத்தி தொடர்பில் நேற்றைய தினம்...

தமிழகத்தில் ஈழத்தமிழருக்கு உயிராபத்து

தமிழகம் – மதுரையில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகள் தங்களது உயருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியாளரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். மதுரை – ஆணையூரில் உள்ள ஈழ அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாமில் அத்துமீறி நுழையும் குண்டர்கள் குழுவினரினால் தங்களுக்கு உயிராபத்து ஏற்பட்டிருப்பதாக ஈழ அகதிகள் முறையிட்டுள்ளனர். அதுமட்டுமன்றி முகாமிலிருந்து தொழிலுக்காகச் சென்றுவரும்...

காணிகளை மீள வழங்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை – சுரேஸ்

வடக்கு கிழக்கு மக்களின் காணிகளை மீள வழங்குவது தொடர்பில், எந்தவித நோக்கமும் அரசாங்கத்திற்கு இல்லையென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ்.பொது நூலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற காணி தொடர்பான கலந்துரையாடலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தற்போது வழங்கப்பட்டுள்ள காணிகள் கூட கடந்த அரசாங்கம் வழங்குவதற்கு சம்மதித்திருந்த காணிகளே...

கைதிகளின் விடுதலையில் அரசுக்கு அழுத்தம் கொடுக்க த.தே.கூ தயக்கம்!

அரசாங்கத்தின் முக்கிய எதிர்கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருந்தும் கைதிகளின் பொதுமன்னிப்பு விடயத்தில் கரிசனை கொள்ளாதது வேதனைக்குரிய விடயமாகும்.இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி. அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையின் முழுவிவரம் வருமாறு:- அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யப்பட வேண்டும் என அனைத்துத் தரப்பினராலும்...

மதுபோதையில் பெண்கள் மீது குத்துச்சண்டை ஒத்திகை!!

உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சியை மேற்கொண்ட பின்னர் வீட்டுக்குச் சென்றவர்கள், வீட்டிலிருந்த பெண்கள் மீது குத்துச்சண்டை ஒத்திகை பார்த்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்ற இந்த சம்பவத்தால், இரண்டு பெண்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடற்பயிற்சி கூடத்தில் செய்து பார்த்த உடற்பயிற்சியை, மதுபோதையில் வீட்டுக்குச் சென்று அங்குள்ள பெண்கள் மீது அதனைச்செய்து பார்த்தமையாலேயே...

மாவீரர் தினத்துக்கு விளக்கேற்றியதாக விசாரணை?

மாவீரர் தினமான கடந்த 27ஆம் திகதி இலங்கை போக்குவரத்துச் சபையின் யாழ்ப்பாண ஊழியர்கள் இருவர், விளக்கேற்றியமை தொடர்பில் அந்த இரு ஊழியர்களிடமும் பொலிஸார் விசாரணைகளை நடத்தியுள்ளதாக தெரியவருகின்றது. மேற்படி இரண்டு ஊழியர்களும், யாழ்ப்பாண வளாகத்துக்குள் விளக்கேற்றியதாக கொடுக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமது சகோதரர்கள் உயிர்நீர்த்ததாகவும் அதனால் தான் விளக்கேற்றியதாகவும் அதற்காக விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும்...

யாழில் 1 கிலோகிராம் பச்சை மிளகாய் ரூபா 1,000 !!

யாழ்ப்பாணத்துக்கு சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் என்றுமில்லாதவாறு அதிகரித்த நிலையில் காணப்படுகின்றன. 1 கிலோகிராம் பச்சை மிளகாய் 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. மரக்கறிகளில் கறிமிளகாய் 1 கிலோகிராம் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதுடன், 1 பிடி கீரை 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் போதும், கீரையை சந்தைகளில் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. கத்தரிக்காய் 1...

தனியார் துறையினருக்கும் ஓய்வூதியம்

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்ற ஓய்வூதியத் திட்டமொன்றை தனியார்துறை ஊழியர்களுக்கும் அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, அரசாங்கம் விரைவில் எடுக்குமென, வெளிநாட்டு அலுவல்கள் பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். வரவு- செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, பிரதியமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். பலர், அரசாங்கத் துறையில் பணியாற்ற விரும்புவதற்கு, அங்கு காணப்படும் ஓய்வூதியத் திட்டமே...

தனியார் பஸ் கட்டணம் 6% அதிகரிப்பு!

தனியார் பஸ் துறைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் சேவைக் கட்டணம், அதிகரிக்கப்பட்ட வரிப்பணம் மற்றும் புதிய வரி முறைமை ஆகியவற்றை இரத்துச் செய்யாவிடின், எதிர்வரும் ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல், தனியார் பஸ் கட்டணத்தை 6 சதவீதத்தால் அதிகரிக்கவுள்ளதாக, தனியார் பஸ் சங்கங்கள் அறிவித்துள்ளன. பிரதமர் மற்றும் நிதியமைச்சருக்கு எழுத்தியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு அச்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன....

தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியான 4 சதவீதமான வரி, மின்சாரத்திற்கு இல்லை

அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியான 4 சதவீதமான வரி, மின்சாரக் கட்டணத்துக்கு அறவிடப்படமாட்டாது என்று மின்வலு மற்றும் புதுப்பிக்கப்பட்ட மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார். மின்சார பாவனையாளர்களுக்கு பாரமின்றி அவர்களுக்கு முறையாக மின்சாரத்தை பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கோட்டாவை கைதுசெய்யுமாறு பரிந்துரை

சட்டவிரோதமாக ஆயுதங்களை இறக்குமதி செய்தல், அவற்றுக்குரிய அனுமதிப்பத்திரமின்றி அவற்றைத் தம்வசம் வைத்திருத்தல் மற்றும் இத்தகைய செயல்களுக்கு உதவுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின்அடிப்படையில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, அவன்ட் காட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி உட்பட 5 பேரைக் கைது செய்ய ஆலோசனை வழங்குமாறு கோரி மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வசந்த நவரட்ண...

விமானப்படையினரால் யாழ் மாணவர்களுக்கு உதவிகள்

இலங்கை விமானப்படை தலைமையகத்தினால் யாழ் மாவட்டத்திலுள்ள பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தொகுதி புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. விமானப்படைத் தளபதியின் பணிப்பில் விமானப்படை சேவாலங்கா மன்றத்தின் ஏற்பாட்டில் குறித்த புத்தகங்கள் யாழ் வசாவிளான் குட்டியபுலம் மகாவித்தியாலயம் மற்றும் புன்னாலைக்கட்டுவன் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. நேற்று (30) குட்டியபுலம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற...

இன்று உலக எயிட்ஸ் தினம்!

உலகளாவிய ரீதியில் அனைத்து நாட்டவர்களாலும் இன்று (01) உலக எயிட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. உலக எயிட்ஸ் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. ஆண்டு தோறும் ஒவ்வொரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அவ்வகையில் இம்முறைக்கான கருப்பொருளாக "செயற்பாடுகளுக்கான நேரம் தற்பொழுது ஆரம்பம்" (The Time to Act...

மீனவர்களே அவதானம்!

மீனவர்கள் மற்றும் கடற்தொழிலாளர்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மன்னார் - ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகை பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் – சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்டகாலமாக உருவாகி வரும் படம் ‘ரஜினி முருகன்’. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர் அறிமுகமான முதல் படம் இதுதான். மேலும், ராஜ்கிரண், சமுத்திரகனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பொன்ராம் இயக்கியுள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். இவருடைய இசையில் வெளிந்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை...

வூப்பெற்றால் துர்க்காதேவி ஆலயத்தினரால் வறணியில் வெள்ளநிவாரண உதவி

அண்மையில் இலங்கையின் வடபகுதியில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேச மக்களுக்கு ஜேர்மனியில் உள்ள வூப்பெற்றால் ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயத்தினரால் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றது. அதன் இன்னொரு கட்டமாக வறணிப்பகுதியில்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களில் ஒரு தொகுதியினருக்கு மேற்படி ஆலயத்தினரின் நிதி உதவியுடன் நிவாரண உதவிகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் கடந்த...

பலத்த காற்றுடன் மழை!

இலங்கைக்கு அருகில் நிலவும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் தொடர்ச்சியாக மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வானம் இருள் சூழ்ந்து காணப்படும் எனவும், இதன்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, சில இடங்களில் 100 மில்லிமீற்றரிலும்...

வடக்கில் புகையிரதக் கடவைகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் உடனடி அவசியம்! – டக்ளஸ் தேவானந்தா

வடக்கு மாகாணத்தில் உள்ள புகையிரதக் கடவைகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா மற்றும் புகையிரதத் திணைக்கள பொது முகாமையாளர் ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளார். இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர்...
Loading posts...

All posts loaded

No more posts