இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா இன்று வியாழக்கிழமை (10) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டார்.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட அவர், சங்கிலியன் பூங்காவையும் அதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியையும் பார்வையிட்டார்.
இன்று மற்றும் நாளை வெள்ளிக்கிழமை (11) ஆகிய இரண்டு நாட்கள் வடபகுதியில் தங்கியிருக்கும் அவர், பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொள்கின்றார்.