Ad Widget

காணாமல் போனவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ் வீரசிங்க மண்டபத்திற்கு முன்பாக வடக்கு, கிழக்கு காணமால் போனவர்களின் உறவழனர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நேற்றய தினம் முன்னெடுத்தனர்.

missing - event - 08-12-2015

யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.

காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகமவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளினால் எந்தப் பயனும் இல்லை என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் எதிர்வரும் 11.12.2015 தொடக்கம் 16.12.2015 வரை யாழ் மாவட்டத்தில் இடம்பெறவுள்ள குறித்த ஆணைக்குழுவின் விசாரணைக்கும் இவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்ட குடும்ப உறவுகள் என்ற அமைப்பினால் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உண்மை, நீதி, நல்லிணக்கத்திற்கான நம்பிக்கையை எற்படுத்துவது அரசின் பொறுப்பாகும் என்றும் நம்பகத் தன்மையற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாட்டை முடிவுறுத்துமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

Related Posts