Ad Widget

​யாழ் சிறைச்சாலையில் உள்ள அரசியல்கைதி ஒருவர் உண்ணாவிரத போராட்டம்!!

யாழ்ப்பாண சிறைச்சாலையில் உள்ள அரசியல்கைதியான சிவராஜா ஜெனீவன் நேற்று மாலையில் இருந்து உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டுபயங்கரவாததடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இவருடைய வழக்கு 2009 ஆம் ஆண்டில் இருந்து பொலநறுவை மற்றும் யாழ்ப்பாண மேல் நீதிமன்றங்களில் பதிவு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகின்றது.

மகசின் சிறைச்சாலையில் இருந்து வரும் குறித்த கைதி யாழ்பாணத்தின் மற்றைய வழக்குக்காக நேற்றைய தினம் யாழ் சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டார்.

நேற்றைய தினம் அவருடைய வழக்கு எடுத்துக் கொள்ளப்படாத நிலையில் இவர் தனதுஉண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

குறித்த கைதியின் வழக்குக்கு சாட்சிக்காரரான புலனாய்வுத்துறை அதிகாரி இதுவரை காலமும் மன்றில் ஆஜராகாத நிலையில் தனது வழக்கு தொடர்ந்து கொண்டு போவதாகவும் சட்டமாஅதிபர் திணைக்களம் தொடர்சியாக இவ்வாறான முறையில் ஏமாற்றி வருவதாகவும் கூறி இதற்கு ஒரு முடிவை கூறுமாறும் பிரதமரின் உதவியாளர் வருகை தருமிடத்து அவர்களுக்கு இந்த விடயத்தை தெரிவிக்கவுள்ளதாக கூறி தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

பொலநறுவை நீதிமன்றால் குறித்த கைதிக்கு 10 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts