- Saturday
- November 22nd, 2025
பலாலி விமான நிலையத்துக்குரிய காணிகளைச் சுவீகரிப்பதற்காக நில அளவைச் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்போது வல்லை - அராலி வீதியின் ஒரு பகுதியும் அதனுள் உள்ளடங்கவுள்ளதால் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு, தெல்லிப்பழை பிரதேச செயலாளர் க.ஸ்ரீமோகனன் தெரிவித்தார். மக்களின் காணிகள் 1987ம் ஆண்டு ஜுன் மாதம் 8ம் திகதி சுவீகரிப்புச் செய்யப்பட்டன. இதன்...
முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று புதன்கிழமை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்தப்பட்டதாக கூறப்படும் லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகன் ஆகியோர் காணாமல் போனமை குறித்து யாழ்ப்பாணம் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று யாழ். நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர்...
வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினை பெற்றுத் தறுமாறு கோரி எதிர்க்கட்சி தலைவருக்கு வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் கடிதம் அனுப்பியுள்ளார். இந்திய இழுவைப் படகுகள் வடபகுதி கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதனால் வடக்கு மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இதனையடுத்து, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான...
மட்டக்களப்பில் இலங்கையின் 68 ஆவது சுதந்திர தினத்தன்று காணாமல் போனோர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளனர். வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு காந்திப் பூங்காவின் அருகில் நடாத்தப்படவுள்ள இப் போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளனர். “நாட்டுக்கு சுதந்திரம் எமக்கோ கண்ணீர் ” என்ற துயர் நிறைந்த...
பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் பெ.சிவகுமாரின் வாசஸ்தலத்தில், இன்று புதன்கிழமை பொலித்தீன் பையில் கட்டிய நிலையில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர். நீதவானின் வீட்டில் உள்ள கிணற்றடியில் இருந்தே இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டுக்காக இலங்கையர் ஒருவருக்கு 18 மாத ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்து ஜேர்மனிய நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது. 53 வயதான ஜீ.யோகேந்திரன் என்ற இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜேர்மனிய பிரஜைக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஓர் தடை செய்யப்பட்ட இயக்கமாகவே கருதப்படுகின்றது....
அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் வலியுறுத்துவோம்! – மாவை சேனாதிராசா
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும்படி, இலங்கை வரவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையாளரிடம் நேரில் வலியுறுத்துவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து ஐக்கிய...
திருகோணமலை, சம்பூரில் கல்லுடன் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவனின் மரணம் தொடர்பாக 15 வயது சிறுவன் ஒருவன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளான். சம்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த குகதாஸ் தர்சன் (வயது 6) கடந்த வாரம் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தான். தனது சகோதரனுடனும் தற்போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிறுவனுடனும் இந்தச் சிறுவன்...
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் நேர முகாமைத்துவம் பின்பற்றுதல் ஒரு பிரச்சினையாகத் தொடர்கின்றது. தெல்லிப்பழை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்றபோது, மக்கள் தங்கள் பிரச்சினைகளை ஒரு நிமிடத்தில் சுருங்கச் சொல்லுமாறு இணைத் தலைவர்களில் ஒருவரான மாவை சேனாதிராசா அடிக்கடி வலியுறுத்திக் கொண்டிருந்தார். ஆனால் அவர் உரையாற்றும் போது. 21 நிமிடங்களை எடுத்துக்கொண்டார். இணைத்தலைவர்களின்...
வலிகாமம் வடக்கில் அண்மையில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னைய காலங்களில் இயங்கிய வங்கிகள் மீண்டும் அந்த இடங்களில் இயங்கவேண்டும் என தெல்லிப்பழை பிரதேச செயலர் கே.ஸ்ரீமோகனன் தெரிவித்தார். தெல்லிப்பழை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்....
கிளிநொச்சி கண்டாவளைப் பகுதியில் இளம் குடும்பப் பெண் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட முதலாவது சந்தேக நபரை கடும்நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் செல்ல கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஜே.பிரபாகரன், நேற்று முன்தினம் திங்கட்கிழமை (01) அனுமதித்தார். ஏனைய நான்கு சந்தேக நபரையும் தொடர்ந்து எதிர்வரும் 15ஆம் திகதிவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். கிளிநொச்சி, கண்டாவளை பகுதியில்...
கார்ல்டன் விளையாட்டு நெட்வொர்க் பிரைவேட் லிமிட்டெட்டில், நிதி மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரும் வெலிக்கடை சிறைச்சாலையில், விளக்கமறியல் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவை உண்ணுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் இதனால், அவர்களுக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டுவரப்படுவதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர்...
2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரகசிய ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை புலிகளில் முன்னாள் செயற்பாட்டாளரான எமில்காந்தன் அம்பலப்படுத்தவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, 2005ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, தமிழ்ப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் வாக்களிக்காமல் இருக்க நடவடிக்கை...
வடக்கு மாகாண ஆளுநர் எம்.எம்.ஜ.எஸ். பளிஹக்கார இந்த மாதத்துடன் பதவியிலிருந்து விலகுகிறார் என ஜனாதிபதிக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து முன்னாள் ஆளுநர் ஜ.ஏ.சந்திரசிறி பதவி விலகினார். இதையடுத்து கடந்த வருடம் ஜனவரி 29 ஆம் திகதி பளிஹக்கார ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையிலேயே அவர் பதவியிலிருந்து விலகுகிறார்...
நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமளியில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷ, கடற்படையில் பணியாற்றிய காலத்தில், கடற்படை விதிமுறைகளை மீறி வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டமை தொடர்பில் தனியான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறு,...
புகையிரதம் அறிமுகமாகி தற்போது 200ற்கும் மேற்பட்ட வருடங்களாகிறது. புகையிரதம் ஆரம்பத்தில் நிலக்கரி மூலம் நீராவிப் புகையிரதமாக இயங்கியது. இலங்கையில் உள்ள நீராவிப் புகையிரதம் ஒன்று பல வருடங்களுக்குப் பிறகு கொழும்பில் இருந்து பதுளை புகையிரத நிலையம் வரை 02.02.2016 இன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தப் புகையிரதத்தில் செல்வதற்கு மிகவும்...
மதுபோதையில் வாகனம் செலுத்திய நபருக்கு 5 வருடங்கள் ஒத்திவைத்த 6 மாத சிறைத்தண்டனையும் 7,500 ரூபாய் அபராதம் மற்றும் சாரதி அனுமதிபத்திரத்தை 6 மாதகாலம் இரத்து செய்தும் மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ரீ.கருணாகரன் திங்கட்கிழமை (01) தீர்ப்பளித்தார். மானிப்பாய் பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சாரதிக்கு எதிராக மூன்று...
கொழும்பு தமிழ்ச்சங்கத் தலைவர் முத்தையா கதிர்காமநாதன் இன்று செவ்வாய்க்கிழமை காலை தனது 72ஆவது வயதில் கொழும்பு தனியார் மருத்துவமனையில் காலமானார். கடந்த மாதம் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சங்கத்தின் ஆட்சிக்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய பின்னர் மயக்கமடைந்து கீழே விழுந்தார். உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி...
பத்திரிகைகளில் வெளிவரும் மணமகன் தேவை என்ற பகுதியூடாக நாட்டின் பல பிரதேசங்களிலும் பெண்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி அவர்களின் தங்க நகைகளை கொள்ளையடித்து வந்த நபர் ஒருவரை களுத்துறை தெற்குப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதேவேளை குறித்த நபர் 2 கிராம்,80 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே பொலிஸார் கைது செய்திருந்ததாக.தெரிவித்துள்ளனர். ஆனால் பொலிஸார் குறித்த சந்தேக...
அள்ளி வழங்கும் நீலக் கடலையும், பொன் கொழிக்கும் சிவப்பு மண் விவசாயப் பூமியையும் விமான நிலைய அபிவிருத்திக்காக நாம் தாரை வார்க்க முடியாது என வலி.வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவரும் மயிலிட்டி மீள்குடியேற்றக் குழுவின் தலைவருமான அ.குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார். அபிவிருத்தியா? மீள் குடியேற்றமா? என்பதை மயிலிட்டி மக்களே முடிவு செய்ய வேண்டும் என்றும்,...
Loading posts...
All posts loaded
No more posts
