Ad Widget

அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பில் சட்டமா அதிபருடன் விரைவில் பேச்சு

புதிய சட்டமா அதிபர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரமளவில் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஸ்கொட்லாந்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் மேற்கொண்ட விஜயம் குறித்தும் சுமந்திரன் இதன்போது கருத்து வௌியிட்டுள்ளார்.

இதேவேளை, மங்கள சமரவீர போன்ற சிங்கள அரசியல் தலைவர்களுடன் இணைந்து செயற்படுவது அவசியமானது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Related Posts