Ad Widget

இலங்கையிலும் பரவுகிறது ஐ.எஸ் தீவிரவாதம்! – ஐ.நா பொதுச்செயலர் அறிக்கை

இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் ஐஎஸ் தீவிரவாதம் வேகமாக பரவி வருவதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ஐஎஸ் தீவிரவாதம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையை நேற்று பான் கீ மூன் வெளியிட்டார். குறித்த அறிக்கையில் இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதரவுத் தளம் வேகமாக வியாபித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் கொலன்னாவை, கண்டி, கொழும்பு பிரதேசங்கள் ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதரவுத் தளமாக மாற்றம் பெற்று வருவதாகவும் சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

Related Posts