ஐ.தே.க.வுடன் இணைகிறார் பொன்சேகா..!

பீல்ட் மார்ஷல் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி நாளை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் என அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன்போது இரு கட்சிகளுக்கும் இடையில் ஒப்பந்தம் கைசாசத்திடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்றத்தின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமனம் பெறவுள்ள அவருக்கு அமைச்சு பதவியும் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நலன்புரி முகாம்களில் இளவயது கர்ப்பம் அதிகரிப்பு

தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட நலன்புரி முகாம்களில் இளவயது திருமணம் மற்றும் இளவயது கர்ப்பம் என்பன அதிகரித்துக் காணப்படுவதாக தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி ப.நந்தகுமார் தெரிவித்தார். தெல்லிப்பழை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் இணைத்தலைமைகளின் கீழ், பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்,இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில்...
Ad Widget

மலக்கழிவுகளால் நாறும் கீரிமலை

கீரிமலைப் பகுதியில் இராணுவம் மற்றும் கடற்படையினர் மலக்கழிவுகளைக் கொட்டி வருவதால் அப்பகுதியிலுள்ள நிலத்தடி நீர் மாசடைவதுடன், அப்பகுதியில் மீளக்குடியேறிய மக்கள் சுகாதாரச் சீர்கேடான காற்றை சுவாசிக்க வேண்டியுள்ளதாக தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி ப.நந்தகுமார் தெரிவித்தார். தெல்லிப்பழை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்றது. இதன்போதே அவர்...

“ஒரு நாடு ஒரு தேசம்” மென்பொருள் அறிமுகம்

சமூக வலைத்தளமான முகப்புத்தகத்தில், “ஒரு நாடு ஒரு தேசம்” எனும் புதிய மென்பொருள் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் 68ஆவது சுதந்திர தினம், எதிர்வரும் 4ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், இந்த மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முகப்புத்தகத்தில் தங்கள் முகப்பு படத்தில் இந்த மென்பொருளை பயனாளர்கள் பயன்படுத்தக்கூடியதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரியில் 7 கிலோ கிராம் தங்க கட்டிகளுடன் பெண்ணொருவர் கைது

100 கிராம் நிறையுடைய 70 தங்க பிஸ்கட்களுடன் பெண்ணொருவர் இன்று காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தங்க கட்டிகளின் மொத்த நிறை 7 கிலோ கிராம் என்பதுடன் அவற்றின் பெறுமதி 39,340,000.00 ரூபாய் (சுமார் 4 கோடி) என்று பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட பெண் 50 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன், சாவகச்சேரி, சங்த்தாணை...

டக்ளஸ் தேவானந்தாவிடம் காணொளிக்காட்சி மூலம் விசாரணை

கொலை வழக்கை காணொளிக்காட்சி (விடியோ கான்ஃபரன்சிங்) மூலம் விசாரணை நடத்துவதற்கு டக்ளஸ் தேவானந்தா முழு ஒத்துழைப்பு வழங்குவார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர்கள் உத்தரவாதம் அளித்துள்ளனர். இலங்கையின் முன்னாள் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா 1986-ஆம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் வசித்தார். அப்போது, தீபாவளிக்காக பட்டாசு வெடித்தவர்கள் மீது இயந்திரத் துப்பாக்கியால் சிலர் சுட்டனர். இதில்...

ராஜபக்ஷக்களின் கண்ணீர் தொடர்பில் அப்சரா பொன்சேகா

எங்கள் குடும்பம் எப்படி துயரடைந்தோம், தாஜூடீனின் பெற்றோர் எவ்வாறு துயரடைந்திருப்பர், பிரகீத் குடும்பம் எவ்வாறு துயரடைந்திருக்கும் என்பதை நாமல் உணரட்டும், இந்த கணமே அவரது குடும்பத்தினர் அவர்களிற்கு துணிச்சலிருந்தால் கடந்த காலங்கள் குறித்து உணரும் தருணமாக அமையட்டும் என்று முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மகள் அப்சரா பொன்சேகா தனது முகப்புத்தகத்தில்...

யாழில் பட்டப் பகலில் துணிகரக் கொள்ளை

யாழ்.கட்டப்பிராய் பகுதியில் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையிட முயன்றவர்கள், வீட்டின் உரிமையாளரின் துணிச்சலினால் வசமாக மாட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற மேற்படி சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்.கல்வியங்காடு- கட்டப்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் வீட்டின் உரிமையாளர்கள் இல்லாத நிலையில் உட்புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த அலுமாரிகள், மேசை...

வித்தியா கொலை வழக்கில் சட்டத்தரணி தலைமறைவு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கினை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட தென்னிலங்கையினைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் பணத்தினைப் பெற்றுக் கொண்டு தலைமறைவாகியுள்ளார். இவ்வழக்கில் சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணியே அவர்களிடம் பணத்தினைப் பெற்றுக் கொண்டு தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தாம் பிணையிலாவது வெளியில் வந்துவிடலாம் என்ற நப்பாசையில் சட்டத்தரணியிடம் பெரும் தொகைப் பணத்தினைக்...

சிறை உணவையே சாப்பிடுகிறார் யோஷித – சலுகைகள் ஏதுமில்லை!

சிறையில் யோஷித ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஐவருக்கும் எவ்விதமான மேலதிக சலுகைகளும் வழங்கப்படவில்லை எனவும், ஆயினும் மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் தொடர்பான ஊடகப் பேச்சாளர் துஷார உபுல் தெனிய தெரிவித்தார். குறித்த சந்தேகநபர்கள் சாதாரண கைதி அறைகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், கவிஷான் திஸாநாயக்க என்பவர் மாத்திரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன், தேவையற்ற...

போர்க்குற்ற விசாரணையை ஆரம்பிக்கவே கொழும்பு வருகிறாராம் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்!

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் - ஹுசைன் போர்க்குற்றங்களை விசாரணை செய்யும் பெயரில் விசேட பொறிமுறையுடன் கூடிய நீதிமன்றத்தை உருவாக்கவே இலங்கை வருகிறார் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். பொரளை எம்.எம். பெரேரா கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர்...

வேலைவாய்ப்புக்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்க தற்போதுள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் இந்த விடயத்தை மீண்டும் அவர்களுக்கு தெரியப்படுத்துவதாகவும் யாழ்.மாவட்ட மேலதிக செயலாளர் பா.செந்தில்நந்தனன் தெரிவித்தார். வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நேற்று திங்கட்கிழமை (01) கவனயீர்ப்புப் போராட்டமொன்றை மேற்கொண்ட பின்னர், மேலதிகச் செயலாளரை சந்தித்து மகஜர் ஒன்றை கையளித்தனர். மகஜரைப் பெற்றுக்கொண்ட பின்னர் அவர்...

தமிழீழத்தை கைவிடவுள்ளோம் – சிறிதரன்

தமீழம் என்ற பேச்சை எடுத்தால் புத்திஜீவிகள் பயப்பிடுகின்றார்கள். தமிழீழம் குறித்து இனியும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிவது தொடர்பாக கிளிநொச்சியிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து...

போருக்கான காரணங்கள், பின்புலங்கள் அடங்கிய ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்

புதிய அரசியலமைப்புக்கு ஆலோசனை வழங்கும் வடமாகாண சபை உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுவிடம், போருக்கான காரணங்கள் மற்றும் அதன் பின்புலங்கள் தொடர்பான புராதன ஆவணங்களை கையளிக்க முடியும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில், இனப்பிரச்சினை தீர்வுத் திட்டத்துக்கு மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, வடமாகாண சபை உறுப்பினர்கள்...

தவறை உணர்ந்த மஹிந்த

தனது ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்ட ஏற்பாடுகளுக்கு அமையவே, தனது மகன் யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கண்டியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (31) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, 'பணச் சலவை சட்டத்தின் கீழேயே யோஷிதவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது....

புலிகளின் உயர்மட்டத் தலைவர் எமில் காந்தனின் பிடியாணை வாபஸ்!

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவர் எனக் கூறப்படும் எமில் காந்தனுக்கு எதிராக விடுக்கப்பட்டிருந்த பிடியாணை மற்றும் சிவப்பு அறிவித்தலை கொழும்பு விசேட நீதிமன்றம் நேற்று வாபஸ் பெற்றுள்ளது. அவர் சரணடைவதாக தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்திற்கு அறிவித்த உறுதிமொழியை அடுத்தே பிடியாணை மற்றும் சிவப்பு அறிவித்தல் வாபஸ் பெறப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலை சீருடை வவுச்சர் காலாவதியாகும் திகதி நீடிப்பு!

பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர் காலாவதியாகும் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அவ்வகையில் ஜனவரி 31 ஆம் திகதியுடன் காலாவதியாகவிருந்த கால எல்லையானது தற்போது பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி வரையாக நீடிக்கப்பட்டுள்ளது என கல்வியமைச்சு மேலும் அறிவித்துள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் தமக்கான சீருடைகளை பெற்றுக் கொள்ள முடியாது போன மாணவர்களின் நலன் கருதியே இத்தீர்மானம்...

வடக்கு வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக, வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தைச் சேர்ந்த சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள், நேற்று (திங்கட்கிழமை) இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். வட மாகாணத்தில் சுமார் ஐயாயிரத்திற்கும் அதிகமான வேலையற்ற பட்டதாரிகள் உள்ள நிலையில், பல தடவைகள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின்...

மட்டக்களப்பில் க.பொ.த.(உ.த) சிறந்தபெறுபேறு பெற்றவர்கள் கௌரவிப்பு

அண்மையில் வெளியான க.பொ.த (உ.த) பரீட்சை முடிவுகளின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அனுசரணையுடன் இடம்பெற்றது. பாலகன் கல்வி மேம்பாட்டுபிரிவின் ஏற்பாட்டில் ஏற்பாட்டில் நடைபெற்ற மேற்படி நிகழ்வுக்கு அக்கட்சியின் கொள்கை முன்னெடுப்பு பிரிவு இணைப்பாளர் சமயலிங்கம் அண்ணாத்துரை தலைமை தாங்கினார். இந்நிகழ்வு நேற்று (31.01.2016)...

மனம் துவண்டு விழாமல் இருப்பதற்கு விழாக்கள் உதவுகின்றன

எத்தனை இடர்கள் வந்தபோதும் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையை இழந்து விடக்கூடாது. நம்பிக்கைதான் வாழ்க்கையின் அடித்தளம். அந்த நம்பிக்கையை நாம் இழந்து மனம் துவண்டுவிழாமல் இருப்பதற்கு விழாக்கள் உதவுகின்றன என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார். புளியம்பொக்கணையில் சனிக்கிழமை (31.01..2016) ஹற்றன் நாஷனல் வங்கியின் ஏற்பாட்டில் நடைபெற்ற நெல் அறுவடை விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு...
Loading posts...

All posts loaded

No more posts