Ad Widget

தொழில்வாய்ப்பு இன்மையால் போராளியொருவர் தற்கொலை

யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் தொழில் வாய்ப்பு இன்மை காரணமாக தற்கொலை செய்துள்ளார்.

யோதிலிங்கம் துசன் என்ற 34 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நல்லூர் வடக்கு விநாயகர் வீதியைச் சேர்ந்த குறித்த முன்னாள் போராளி குடும்ப பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு போதுமான தொழில் வாய்ப்பின்றி இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்கொலை செய்தவரின் மனைவியும் முன்னாள் போராளி என்பதுடன், அவர்களுக்கு 05 மற்றும் 03 வயதுடைய குழந்தைகள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுகின்றது.

குறித்த மரணம் தொடர்பில் கோப்பாய் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Related Posts