இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு யாழ்குடா நாட்டுக்கான விஜயத்தின் போது யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.
இச்சந்திப்பின் போது இப்பிராந்தியத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் நல்லிணக்க அபிவிருத்தி செயற்பாடுகளின் நகர்வுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக இராணுவ தகவல்கள் குறிப்பிடுகின்றன.
மேலும் இந்நிகழ்வின் போது ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கு யாழ் கட்டளைத்தளபதியினால் நினைவுச் சின்னங்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.