Ad Widget

எந்தவொரு விடயத்திலும் இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை

இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து மேற்கொள்ள வேண்டிய விசரணை நடவடிக்கைகளில் எந்தவொரு விடயத்தையும் வற்புறுத்தவில்லை என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செய்யித் அல் ஹுஸைன் கூறியுள்ளார்.

சர்வதேச நீதிபதிகளை விசாரணை நடவடிக்கையில் இணைத்துக் கொள்வது சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

ரொய்ட்டர் செய்தி சேவையுடன் இடம்பெற்றுள்ள கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எனினும் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடைமுறையும் பக்கச்சார்பற்ற முறையில் சுயாதீனமானதாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அந்த நடவடிக்கைள் அனைத்தும் மிகவும் விரிவான செயல்முறையாக இருக்க வேண்டும் என்றும் அவர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

Related Posts