காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை: போராட்டம் தொடர்கிறது

முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பைச் சேர்ந்த 84 குடும்பங்களுக்குச் சொந்தமான 54 ஏக்கர் காணிகளில், 42 ஏக்கர் காணிகள், இன்று விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும், 42 ஏக்கர் காணியும் தற்போது முழுமையாக விடுவிக்கப்பட்டவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கேப்பாப்புலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 31 ஆம் திகதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு...

பிலவுக்குடியிருப்பு காணிக்குள் மக்கள் கால்பதித்துள்ளனர்

கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் சுமார் ஒரு மாத கால தொடர் போராட்டத்தின் பிரதிபலனாக சொந்தக் காணிகள், இன்றைய தினம் அவர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமது சொந்தக் காணிகளை மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர் விமானப்படையினர் வசமிருந்த பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகளுக்குச் செல்லும் பிரதான நுழைவாயில் இன்று முற்பகல் திறந்துவிடப்பட்டதை அடுத்து, சொந்த காணிகளுக்குள் மக்கள்...
Ad Widget

வடமாகாண வைத்தியர்கள் வேலை நிறுத்தம்

மாலபே தனியார் வைத்திய கல்வி வழங்கும் நிறுவனத்தினை அரசுடைமையாகுமாறு அரசினை வலியுறுத்தும் முகமாக வடமாகாண வைத்தியர்கள் எதிர்வரும் 2 ம் திகதி வியாழக்கிழமை வடமாகாணத்தில் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். எனினும் தெல்லிப்பளை புற்று நோய் வைத்தியசாலை மற்றும் ஏனைய வைத்தியசாலைகள் அனைத்திலும் அவசர நோயாளர் சேவைகள் இடம்பெறும் எனவும் அரச மருத்துவ...

ஊர்­கா­வற்­றுறை கர்ப்­பிணி பெண் படு­கொலை : ஊடகவியலாளர்களுக்கு அனுப்பப்பட்ட மர்ம மின்னஞ்சல்

ஊர்­கா­வற்­றுறை பிர­தே­சத்தில் இடம்­பெற்ற ஏழு மாத கர்ப்­பிணி பெண் மீதான படு­கொலை வழக்கு விசா­ர­ணையில் உண்­மை­யான குற்­ற­வாளி இவரே என ஒரு­வரை குறித்து அவர் தொடர்­பான தக­வல்கள் மின்னஞ்சல் மூலம் ஊட­க­வி­ய­லா­ளர்கள் சில­ருக்கு இனந்­தெ­ரி­யாத ஒரு­வரால் அனுப்­பப்­பட்­டமை தொடர்­பாக விசா­ரணை மேற்­கொள்­ளு­மாறு பொலி­ஸா­ருக்கு ஊர்­கா­வற்­றுறை நீதிவான் நீதி­மன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் உத்­த­ர­விட்­டுள்ளார். கடந்த ஜன­வரி மாதம்...

காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஹர்த்தால்

கேப்பாபிலவு மக்களின் காணி உட்பட சுவீகரிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க வலியுறுத்தி எதிர்வரும் 08 ஆம் திகதி வடகிழக்கு முழுவதிலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்க தமிழ் மக்கள் பேரவையினர் தீர்மானித்துள்ளனர். கேப்பாபிலவு தொடர்பாக கலந்துரையாடல், யாழ். கோண்டாவில் சேவாலங்கா மண்டபத்தில்,தமிழ் மக்கள் பேரவையினர் மற்றும் பொது அமைப்புக்களுடன் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அந்த கலந்துரையாடலின் போது, வடகிழக்கு...

பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும்: இலங்கை அரசு உறுதி

மனிதஉரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில் இலங்கை அரசாங்கம் உறுதியாகவிருப்பதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடரின் 34வது அமர்வில் இன்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கருத்து கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “1948ம் ஆண்டு சுதந்திரத்தினைப் பெறுவதற்கு நாம் ஜாதி, மத, இன பேதங்களின்றி...

பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகள் நாளை கையளிப்பு

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு காணிகள் நாளை காலை 11.00 மணிக்கு கையளிக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் சி.குணபாலன் தெரிவித்தார்.

கர்ப்பிணிப் பெண் படுகொலை: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

ஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் படுகொலை சந்தேக நபர்களை எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இவ் உத்தரவை பிறப்பித்தார். ஊர்காவற்துறை பகுதியில் கடந்த ஜனவரி...

கடுமையான நிபந்தனைகளுடனேயே கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்: சம்பந்தன்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கையின் இணை அனுசரணையில் நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கடும் நிபந்தனைகளுடனேயே கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் செனட் பிரதிநிதிகள் குழுவை நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இன்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடியபோது இவ்விடயத்தைத்...

எங்கே எமது பிள்ளைகள்; தொடரும் சுழற்சி முறையிலான போராட்டம்!

வவுனியாவில் காணமல் ஆக்கப்பட்ட உறவுகள் முன்னெடுத்து வரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று நான்காவது நாளாக தொடர்கின்றது. வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக ஏ9 வீதியின் அருகில் காணாமல் ஆக்கப்பட்ட...

மக்களின் போராட்டத்தை வலுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்

பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்தை வலுப்படுத்தல் தொடர்பான கல்துரையாடலுக்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. ஆக்கிரமிப்புக்கெதிரான குறியீட்டுவடிவமான மாறியுள்ள கேப்பாபிலவு குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் ஏறத்தழ ஒருமாதத்தை எட்டியுள்ளது. தமது கொள்கையில் மிகத்தெளிவாகவும் உறுதியாகவும் அந்த மக்கள் சுய எழுச்சியுடன் முன்னெடுத்துள்ள இந்த...

வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்று! கண்டனப் பேரணி!

யாழ்ப்பாண மாவட்டம், வலிகாமம் வடக்கு மக்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இவர்கள் மல்லாகம் பழம்பெரும் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டமானது கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், வலிகாமம் வடக்கில் தமது காணிகளை விட்டு இராணுவத்தினரை வெளியேறுமாறும் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், வலிகாகமம் வடக்கில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது காணிகள்...

கர்ப்பிணிகளே அவதானம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் இம் மாதம் 10ம் திகதி முதல் தற்போது வரை பத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என, மாவட்ட வைத்தியதுறை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இது தொடர்பில் மாவட்ட மருத்துவ துறை பொது மக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கிளிநொச்சி மாவட்டத்தில் 10.02.2017 இலிருந்து 25.02.2017 காலப் பகுதியில் பத்து கர்ப்பிணிப் பெண்கள்...

வவுனியா உறவுகளின் உண்ணாவிரதத்தில் சந்தியா எக்னலிகொடவும் இணைவு

வவுனியா மாவட்டத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் ஆரம்பித்துள்ள சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவில் மனைவி சந்தியா எக்னலிகொடவும் இணைந்து கொண்டுள்ளார். வவுனியா தபால் அலுவலகத்திற்கு முன்னாள் இந்த போராட்டம் இன்று மூன்றாவது நாளாக இடம்பெற்று வருகின்றது. பல சந்தர்ப்பங்களில் காணாமல் போனோர் குறித்து உரிய பதிலளிப்பதாக, அரசாங்கம் வாக்குறுதி அளித்த போதும்,...

புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கை ராணுவத்துக்கு 80% பயிற்சி கொடுத்தது இந்தியாதான்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கை ராணுவத்துக்கு 80% பயிற்சி கொடுத்தது இந்தியாதான் என்று முன்னாள் பாதுகாப்பு செயலரும் மகிந்த ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார். கொழும்பில் இருந்து வெளிவரும் டெய்லி மிர்ரர் ஆங்கில ஏட்டுக்கு கோத்தபாய ராஜபக்சே அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: புலிகளுக்கு எதிரான போரில் சீனா, பாகிஸ்தான், உக்ரேன், ரஷ்யா...

மூன்றம்ச கோரிக்கையை முன்வைத்து வவுனியாவில் உணவுதவிர்ப்பு போராட்டம்

காணாமல் போனவர்களின் உறவுகள் வவுனியாவில் உணவுதவிர்ப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர். அரசியல்வாதிகளால் தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும், வழங்கப்பட்ட வாக்குறுதிகள் பொய்யாகியுள்ள நிலையில் தாம் இனியும் ஏமாற தயாரில்லை என்று மூன்றம்ச கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போனோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற...

காணிகளிலிருந்து இராணுவம் வெளியேறுகிறது; சுத்தம் செய்யும் பணியில் பரவிப்பாஞ்சான் மக்கள்

கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பகுதியில் மக்களின் காணிகளிலிருந்து இராணுவத்தினர் தற்போது வெளியேறி வருகின்ற நிலையில், காணிகளை துப்பரவு செய்யும் நோக்கில் முகாம் அமைந்திருந்த பகுதிகளுக்குள் மக்கள் சென்று கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் இராணுவ முகாம் அமைந்துள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 9 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி இன்று ஐந்தாவது நாளாக மக்கள் போராட்டத்தில்...

உயிர் ஆபத்து ஏற்பட்டால் சம்பந்தனும் சுமந்திரனுமே முழுப் பொறுப்பு!

சுமந்திரனுக்கு எதிராகக் கொலை அச்சுறுத்தல் நிலவுகின்றமையை எங்களுடன் தொடர்புபடுத்திச் சம்பந்தன் தன்னுடைய பாராளுமன்ற உரையில் குறிப்பிட்டிருக்கிறார். எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ். கந்தர்மடத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று(23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பாராளுமன்றத்தில் சம்பந்தன் நேற்று ஆற்றிய உரை தொடர்பாகப்...

இலங்கையின் இருட்டறை : இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பான ஆவணப்படம்

இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பான ஆவணப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.மனித உரிமைகள் மேம்பாட்டிற்கும் பாதுகாப்பிற்குமான நிலையம் (CPPHR) நிறுவனத்தினால் தயரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் முழுமையும் இலங்கையில் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இருட்டறை என்ற (The Dark Cornors of Sri Lanka) என்ற இந்த ஆவணப்படத்தில் பயங்கரவாததடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பின்னர் கடுமையான சித்திரவதைகளை அனுபவித்தவர்கள்...

சம்பந்தனுக்கு முதுகெலும்பு இருந்தால் பகிரங்க விவாதத்திற்கு வர வேண்டும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு முதுகெலும்பு இருந்தால், தங்களுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை,...
Loading posts...

All posts loaded

No more posts