- Monday
- December 29th, 2025
பரவிப்பாஞ்சானில் மக்களின் காணியில் முகாம் அமைத்துள்ள இராணுவத்தினர், பிரதேச செயலரால் காணிகள் அடையாளம் காட்டப்படுமிடத்து, அக்காணிகளில் இருந்து தாம் வெளியேற தயாராக இருப்பதாக, தெரிவித்ததாக பரவிப்பாஞ்சான் மக்கள் கூறினர். கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் மக்கள் காணிகளை விடுவிக்குமாறு தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், வியாழக்கிழமை (23) பிற்பகல் குறித்த பகுதிக்கு இராணுவ உயரதிகாரிக்ள, கரைச்சி பிரதேச...
“முழந்தாழில் இருத்தி, இரு கைகளையும் கால்களுடன் இணைத்துக் கட்டி, இரண்டு மேசைகளுக்கு இடையில் கட்டித் தூக்கி, உயிரிழக்கும் வரையில் அடித்தே கொன்றார்கள். உயிரிழந்த பின்னரும் அவர்கள் அடிப்பதை நிறுத்தவில்லை” என, யாழ்.மேல் நீதிமன்றில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த சிறிஸ்கந்தராஜா சுமணன் என்ற இளைஞனை, பொலிஸார் அடித்துக் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு தொடரப்பட்ட வழக்கின் சாட்சிகள்,...
வடக்கில் படையினர் வசம் காணப்படுகின்ற பொதுமக்களின் 6124 ஏக்கர் காணிகள் உடனடியாக முதன்மை அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும். மேலும் கரையோரப் பிரதேசங்களில் அபகரிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும். அத்துடன் வடக்கிலிருந்து இராணுவம் அகற்றப்படுவதும் முக்கியமானதாகும் என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சிறுபான்மை மக்கள் தொடர்பான விவகாரங்களை ஆராயும் ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் றீட்டா...
இலங்கையில் தற்போது குடி நீர் மற்றும் நீருக்கான தட்டுப்பாடுகள் பாரியளவில் ஏற்பட்டிருக்கும் நிலையில், எமது நீர் வளங்களை மையமாகக் கொண்டு, வெளிநாடுகளுக்கான உற்பத்திகளை மேற்கொள்கின்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அவற்றைத் தாரைவார்ப்பதற்கான திட்டமொன்று இருப்பதாகச் சுட்டிக் காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இது தொடர்பிலான உண்மை விபரங்கள் வெளிப்படுத்தப்பட...
கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் மற்றும் பரவிப்பாஞ்சான் மக்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, கிளிநொச்சியில் கதவடைப்புடன் கூடிய கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்களது போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் ஆதரவுப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், கிளிநொச்சி மாவட்ட வர்த்தகர்கள் மற்றும் சந்தை வர்த்தகர்கள் ஆதரவு...
தவறிழைத்தவர்கள் அதன் விளைவுகளையும் அனுபவித்தே ஆகவேண்டுமென தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், யுத்தக்குற்றத்தில் ஈடுபட்ட படையினருக்கு எதிராக உரிய விசாரணை நடத்தப்பட்டு தண்டிக்கப்படுவது கட்டாயமென கேட்டுக்கொண்டார். தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காணப்பட்டிருந்தால் ஆயுதப் போராட்டம் ஏற்பட்டிருக்காதென சுட்டிக்காட்டிய சம்பந்தன், இனியாவது இப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தீர்வுகாணப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார். தேசிய...
வடக்கில் புத்தர் சிலைகள் உடைக்கப்படுவது தொடர்பில் தமிழ் மக்கள் மீது தென்னிலங்கை கடும்போக்குவாதிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், அண்மையில் புத்தர் சிலை மீது கழிவு ஒயில் வீசப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் தென்னிலங்கையிலுள்ள குழுவொன்றைச் சார்ந்தவர்களே செயற்பட்டுள்ளனர் என்றும் இவ்வாறான சூத்திரதாரிகளை கண்டறிந்து மக்களுக்கு உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டுமென்றும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல்...
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாள அணிவகுப்பில் அடையாளம் காணப்பட்டனர். ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் நேற்று (புதன்கிழமை) அடையாள அணிவகுப்பு நடைபெற்ற போது குறித்த வழக்கின் சாட்சியாக இருக்கும் சிறுவனால் இரண்டு சந்தேக நபர்களும் அடையாளம் காட்டப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் பின்னர் குறித்த...
வடக்கு மாகாணத்தின் தலைநகரமாக மாங்குளத்தை அபிவிருத்தி செய்வதற்காக ஏ- 9 வீதியின் இரு மருங்கிலும் 31ஆயிரம் ஏக்கர் காணி இனங்காணப்பட்டுள்ளதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) 23 கீழ் 2 இல் சிறப்புக்கட்டளைக்கு அமைய எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்....
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிடுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். முன்னதாக ரவிராஜ் கொலை வழக்கு விஷேட ஜூரி சபை முன்...
தமிழர் தாயகத்தில் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி, நாட்டின் பல பகுதிகளிலுள்ள பொது அமைப்புக்கள், இன, மத, மொழி பேதங்களை கடந்து, ஒன்று திரண்டு யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். யாழ். பேருந்து நிலையத்திற்கு முன்னால் நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்றிணைந்து இன்று (புதன்கிழமை) முன்னெடுத்துள்ள இவ் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, யாழ். மாவட்ட செயலகம் வரை பேரணியாக சென்று...
மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை அரசாங்கம் கோரவுள்ள காலநீட்டிப்பிற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிப்பது தமிழ்மக்களுக்கு செய்யும் துரோகம் என தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் தெரிவித்தார். ‘தற்போதைய அரசாங்கத்திற்கு எந்தவிதமான நெருக்கடிகளையும் கொடுக்காது தொடர்ந்தும் அரசாங்கத்தினைப் பாதுகாப்பதை விடுத்து ஓர் முழுமையான சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதுடன் காலநீடிப்பு வழங்குவதை முழுமையாக...
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்ச்சியாக இதே கொள்கையுடன் செயற்படுவாராக இருந்தால் அவரை மாற்றுத் தலைமையாகக் கொண்டு செயற்பட தாம் தயார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்... முதலமைச்சர் விக்னேஸ்வரன் எங்களுடைய கொள்கையுடன் உடன்பட்டு செயற்படும்வரை அவரை தமிழ் மக்களின் மாற்று...
“மக்களால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்கள் தொடர்பில், அரசாங்கத்தால் இதுவரை எவ்விதத் தகவல்கள், அறிவுறுத்தல்களும் மாவட்டச் செயலகத்துக்குக் கிடைக்கவில்லை” என, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், தெரிவித்தார். கடந்த மாதம் 31ஆம் திகதியில் இருந்து தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி, கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதேபோன்று புதுக்குடியிருப்பில் இராணுவத்தினால்...
அரசாங்கத்திற்கு மக்கள் பிரதிநிதிகள் கொடுக்கும் அழுத்தம் குறைவாக இருக்கின்றமையே காணி விடுவிப்புக்கு தீர்வு கிடைக்காமைக்கான காரணம் என கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் ராணுவ முகாம் அமைந்துள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 9 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு கடந்த காலத்தில் தொடர் போராட்டங்களை நடத்திவந்த மக்கள், உரிய தீர்வு கிடைக்காத நிலையில் நேற்று முதல்...
சங்கானை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளரின் கடுமையான நடமுறை காரணமாக அலுவலகத்தில் மயங்கி வீழ்ந்த பெண் உத்தியோகஸ்தர் ஒருவர் சிசிக்சைக்காக சங்காணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பிரதேச செயலகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக குறித்த பெண் உத்தியோகஸ்தர் அரசாங்க அதிபரிடம் உண்மைகளை சொன்னதன் பிரதிபலனாகவே அவருக்கு பிரதேச செயலகத்தில் அவ்வாறான நெருக்கடியான நிலமை ஏற்பட்டுள்ளது....
கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்களின் சொந்த நிலங்களை மீட்கும் போராட்டத்திற்கு முஸ்லிம் சமூகத்தினர் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். பிலவுக்குடியிருப்பு மக்களின் நிலமீட்பு போராட்டம் தொடர்ச்சியாக 22 ஆவது நாளாகவும் இன்று விமானப்படைத் தளத்துக்கு முன்னாலுள்ள வீதியோரத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் ஆதரவு பெருகிவரும் நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த...
இன்றைய நாடாளுமன்ற அமர்வை புறக்கணித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி எஸ்.சிவமோகன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் சுழற்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். புதுக்குடியிருப்பு ராணுவ முகாம் அமைந்துள்ள 49 குடும்பங்களுக்குச் சொந்தமான 19 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு புதுக்குடியிருப்பு மக்கள் கடந்த மூன்றாம் திகதி முதல் பிரதேச செயலகத்திற்கு முன்னால்...
இலங்கை படை முகாம்களில் தமிழ் பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருப்பதை வெளிப்படுத்தும் அதிர்ச்சிதரும் ஆவணமொன்றை பெண்களுக்கு எதிரான பாரபட்சங்களை ஒழிப்பது தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவிடம், சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் கையளித்துள்ளது. இலங்கை ராணுவத்தால் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டு பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களில் மூவரின் வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட குறித்த ஆவணம்...
கேப்பாப்பிலவு பிளக்குடியிருப்பில் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் நேரில் சென்று மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்ததோடு இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் நிலங்களையும் பார்வையிட்டுள்ளனர். மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி நேற்று 21ஆவது நாளாகவும் தொடர் கவனயீர்ப்பு போராடடத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில்...
Loading posts...
All posts loaded
No more posts
