Ad Widget

மக்களின் போராட்டத்தை வலுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்

பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்தை வலுப்படுத்தல் தொடர்பான கல்துரையாடலுக்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்..

ஆக்கிரமிப்புக்கெதிரான குறியீட்டுவடிவமான மாறியுள்ள கேப்பாபிலவு குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் ஏறத்தழ ஒருமாதத்தை எட்டியுள்ளது.

தமது கொள்கையில் மிகத்தெளிவாகவும் உறுதியாகவும் அந்த மக்கள் சுய எழுச்சியுடன் முன்னெடுத்துள்ள இந்த நியாயமான போராட்த்துக்கு ஆதரவு வழங்கி மேலும் மக்கள் மயப்படுத்த வேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும்.

இது குறித்து தமிழர் தாயகப்பகுதிகளில் நாம் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மக்கள் அமைப்புகளுடனான கலந்துரையாடல் ஒன்றிற்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (28-2-2017) மாலை 4 மணிக்கு பலாலிவீதி கோண்டாவிலில் அமைந்துள்ள சேவா லங்கா நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலுக்கு அனைத்து பொது அமைப்பக்கள், தொழிற்சங்கங்கள், மற்றும் ஆர்வமுள்ள அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தமிழ் மக்கள் பேரவை கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்யைில் குறிப்பிடப்பட்டுள்ளது

Related Posts