யாழ்ப்பாணத்தில் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் பணியில்!

சமூக விரோதச் செயல்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களின் அச்சுறுத்தலை முறியடிப்பதற்காக யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆயுதந் தாங்கிய காவல்துறைக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. காங்கேசன்துறை பிரிவுக்குட்பட்ட 17 காவல் நிலையங்களிலும் ஏற்கனவே இந்த காவல்துறைக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 24 மணிநேரமும் இந்த காவல்துறைக்...

யாழ். நகரப்பகுதியில் துணிகரமாக நடமாடும் வாள்வெட்டு கும்பல்!

யாழ். நகரப்பகுதியில் நேற்றிரவு துணிகரமானமுறையில் வாள்களுடன் இளைஞர்கள் நடமாடியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். யாழ். மாவட்டத்தில் பரவலாக வாள்வெட்டுக்குழுக்கள் நடமாடிவருகின்ற நிலையில் ஆங்காங்கே வன்முறைகளும் இடம்பெற்று வருகின்றது. நேற்று மாலை யாழ். கோப்பாய் பகுதியில் வாள்வெட்டுக்குழுக்கள் அடாவடித்தனத்தில் ஈடுபட்டன. அதேவேளை நேற்று மாலை 7.30 மணியளவில் யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத்தெரு வீதி வேம்படி மகளிர் கல்லூரிக்கு...
Ad Widget

தீர்வு கிடைக்கும்வரை போராட்டத்தை தொடர்வோம்’ காணாமல் போனோரின் உறவினர்கள்

தமிழர் தாயத்தில் ராணுவத்திடம் கையளிக்கப்பட்டும் இறுதிக்கட்ட யுத்தத்தின்போதும் காணாமல் போன தமது உறவுகள் தொடர்பான உண்மை நிலையை வெளிப்படுத்தி உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டுமென கோரி காணாமல் போனோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் சற்றுமுன் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் உரிய முறையில் செயற்பட்டு, ஐ.நா. மனித உரிமை பேரவையினால் உரிய தீர்வு...

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களும் போராட்டம்!

படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு முல்லைத்தீவில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மக்கள் தொடர் சத்தியாக்கிரகம் மற்றும் சுழற்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்றைய தினம் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களும் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி, பரவிப்பாஞ்சான் ராணுவ முகாமுக்கு முன்னால் இன்று (திங்கட்கிழமை) காலை முதல் மக்கள்...

ஐ.நா.வின் கவனத்தை ஈர்க்க காணாமல் போனோர் தொடர் போராட்டம்

தமிழர் தாயகத்தில் ராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையில் காணாமல் போன மற்றும் யுத்தத்தின் போது காணாமல் போன தமது உறவுகளின் உண்மை நிலையை பகிரங்கப்படுத்தக் கோரியும், பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கைக்கு ஐ.நா. இனியும் கால அவகாசம் வழங்கக்கூடாதெனவும் கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின்...

கேப்பாபுலவில் இராணுவத்தின் எச்சரிக்கை பெயர்ப் பலகையில் மீண்டும் மாற்றம்!

இது விமானப்படை காணியாகும் தேவையில்லாமல் உட்செல்லல் தடை தேவையில்லாமல் உட்சென்றால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகுவீர்கள் என விமானப்படையினரால் அறிவித்தல் பலகை ஒன்று போடப்பட்டதால் மக்கள் குழப்பமடைந்தனர். முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த காணியை மீண்டும் கையளிக்குமாறு இருபதாவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இலங்கை விமான படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்கள் காணியை விட்டு...

தீர்வின்றி தொடரும் போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள்

கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றிய நிலையில் இன்று 21 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கோப்பாபுலவு கிராம உத்தியோகத்தர் பிரிவில் பிலவுகுடியிருப்பு என்ற கிராமத்தில் விமானப் படையினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த 84 குடும்பங்களுக்கு சொந்தமான 20 க்கும் அதிகமான ஏக்கர் காணி அண்மையில் விடுவிக்கப்பட்டிருந்தது. தீர்வின்றிய நிலையில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் போராடிக்கொண்டிருக்கும் தமக்கு...

வவுனியாவில் முன்னாள் போராளி ஒருவர் சடலமாக மீட்பு!

வவுனியா மாவட்டம் – கோதண்ட நொச்சிக்குளத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான கோபு என்றழைக்கப்படும் இலங்கைநாதன் இளங்கோவன் (வயது – 31) என்ற குறித்த முன்னாள் போராளி, தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் கொலையா,...

அறிவித்தல் பலகையில் மாற்றம்

கேப்பாப்புலவு விமானப்படை முகாமுக்கு முன்னால், வீமானப்படையினரால் போடப்பட்டிருந்த அறிவித்தல் பலகையில், “விமானப்படையின் காணி, அதனை மீறி உட்சென்றால் சுடுவோம்” எனக் குறிப்பிட்டிருந்த நிலையில், சனிக்கிழமை (18) இரவோடிரவாக அந்த அறிவித்தல் பலகை மாற்றப்பட்டு, “இது விமானப்படையின் காணி,தேவையில்லாமல் உட் செல்லத் தடை” என்றும் எழுதப்பட்டு புதிய அறிவித்தல் பலகையொன்று போடப்பட்டுள்ளது.

நிலங்களை விடுவிக்கும் போராட்டங்களை ஆதரிப்போம்

'ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்கும் போராட்டங்களை ஆதரிப்போம்" என, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா தெரிவித்துள்ளார் முல்லைத்தீவு மக்களின் போராட்டம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சென்ற பல நாட்களாக முல்லைத்தீவில் அஹிம்சை வழியில், ஜனநாயக வழிகளில் அரசாங்கப் படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்ட...

சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு அவசியம் : மனித உரிமை கண்காணிப்பகம்

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகளின் மற்றும் வழக்குரைஞர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது என மனத உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறல் விடயத்தை உரிய முறையில் அமுல்படுத்துவதற்கு சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு அவசியமானது என மனித உரிமை கண்காணிப்பகத்தின் அவுஸ்திரேலிய பணிப்பாளர் எலைனி பியர்சன்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் இன்னமும்...

ஐ.நா. தீர்மானத்தில் மாற்றம் வேண்டாம் வலியுறுத்தினார் சுமந்திரன்

திடீர் பயணம் மேற்கொண்டு ஜெனீவா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அங்கு நேற்று நடைபெற்ற இரு முக்கிய சந்திப்புக்களில் கலந்துகொண்டார். இதன்போது "ஐ.நா.தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவை என்ற பரிந்துரையை நீக்கி ஐ.நா. தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ய இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது...

கேப்பாப்பிலவு படைமுகாம் கட்டடங்கள் புனருத்தாபனம்!

கேப்பாப்பிலவு, பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி தொடர்ச்சியான போராட்டத்தினை நடத்தி வருகின்ற நிலையில், காணி விடுவிப்பு தொடர்பான எந்த விதமான கரிசனையும் கொள்ளாத விமானப்படையினர், படைமுகாமுக்குள் உள்ள கட்டடங்களின் புனருத்தான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக விமானப்படையின் விடுமுறை மண்டபத்துக்கான புனருத்தான பணிகளையே அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். பிலவுக்குடியிருப்பில் உள்ள மக்களுடைய காணிகளை...

அங்கத்துவ கட்சிகள் கூட்டமைப்பை நிராகரிக்க கோருகின்றார் கஜேந்திர குமார்

தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள அங்கத்துவ கட்சிகள் தமது தலைமையை நிராகரித்து , ஆணித்தரமான முடிவை எடுத்து நேர்மையான அரசியலை முன்னெடுத்து செல்ல முன் வர வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்துள்ளார். யாழ். கந்தர்மடத்திலுள்ள உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற...

வடக்கு- கிழக்கு இணைப்பு சாத்தியமற்றது: ஹக்கீம்

வடக்கையும், கிழக்கையும் ஒன்றிணைப்பது சாத்தியமாகாது எனவும் நாடாளுமன்ற பெரும்பான்மையின்றி வட, கிழக்கை ஒருபோதும் இணைக்க முடியாதென்றும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உயிரைப் போல நீரைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளிலான விசேட வேலைத்திட்டம் குறித்து விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே...

இராஜதந்திர முயற்சியில் சம்பந்தன் தோல்வியடைந்தாரா?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு மேலும் கால அவகாசம் வழங்குவதன் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினை சர்வதேச சமுகத்திலிருந்து மறைக்கப்பட்டு விடும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்...

கடற்புலிகள் தொடர்பாக பாடம் நடத்திய இலங்கை கடற்படைத் தளபதி!

பாகிஸ்தான் போர்ப்படைக் கல்லூரியில் விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் தொடர்பாகவும், அவர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற தலையங்கத்தில் விரைவுரையொன்றை இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நிகழ்த்தியுள்ளார். பாகிஸ்தானுக்கு அதிகாரபூர்வ பணம் மேற்கொண்டுள்ள கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, கடந்த புதன்கிழமை லாகூரிலுள்ள பாகிஸ்தான் போர்க் கல்லூரிக்குப் பயணம் செய்திருந்தார். பாகிஸ்தான் கடற்படை...

தேவையில்லாமல் உட்சென்றால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும்; விமானப்படை எச்சரிக்கை

முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்கள் தங்களின் சொந்த நிலங்களில் மீளகுடியேறுவதற்காக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றார்கள். இந்த மக்களின் போராட்டத்திற்கு நாளுக்கு நாள் பல்வேறு தரப்புக்களும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தங்களுடைய காணிகள் மீண்டும் கிடைக்காது விடின் விமானப்படையினரின் தடையையும் தாண்டி தங்களின் காணிகளுக்குச் செல்ல வேண்டிவரும் என மக்கள் தெரிவித்திருந்தனர். இந்த...

கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவாக கிளி. வர்த்தகர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்களின் தொடர் சத்தியாக்கிரக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியிலும் இன்று (வெள்ளிக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. விமானப்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களது 524 ஏக்கர் காணிகளை தங்களிடம் கையளிக்க கோரி கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்கள் இன்று 18ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு பல தரப்பினரும் தங்களின்...

நாய்களை ஏவிவிட்டு மக்களைக் கலைக்கும் இராணுவம்!

இன்று 18ஆவது நாளாக தமது நிலத்தை மீட்பதற்காகப் போராடிக்கொண்டிருக்கும் பிலவுக்குடியிருப்பு மக்களைத் துரத்துவதற்காக விமானப்படையினர் நாய்களை ஏவிவிடுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. பிலவுக் குடியிருப்பு மக்களின் சிறீலங்கா விமானப்படையினர் கடந்த எட்டு ஆண்டுகளாகக் கையகப்படுத்தி வைத்திருக்கும் நிலையில் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு குறித்த மக்கள் கடந்த 31ஆம் நாளிலிருந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு...
Loading posts...

All posts loaded

No more posts