Ad Widget

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை: சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாள அணிவகுப்பில் அடையாளம் காணப்பட்டனர்.

ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் நேற்று (புதன்கிழமை) அடையாள அணிவகுப்பு நடைபெற்ற போது குறித்த வழக்கின் சாட்சியாக இருக்கும் சிறுவனால் இரண்டு சந்தேக நபர்களும் அடையாளம் காட்டப்பட்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் பின்னர் குறித்த வழக்கினை எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான் அதுவரையில் இரு சந்தேக நபர்களையும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

ஊர்காவற்துறை பகுதியில் கடந்த 24ஆம் திகதி கர்ப்பிணி பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். அது தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்

குறித்த படுகொலை சம்பவத்தை கண்ணால் கண்ட சாட்சியாக 12வயது சிறுவன் ஒருவன் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts