Ad Widget

வாள்வெட்டுச் சம்பவம் : சந்தேகத்தின் பேரில் 5 மாணவர்கள் கைது

வாள்வெட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், யாழ்.நகரிலுள்ள பிரபல பாடசாலையை சேர்ந்த 5 மாணவர்கள் யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைதுச் சம்பவம் நேற்றைய தினம் யாழ்.நகரில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,பாடசாலையில் நடைபெற்ற வாய்த் தகாராறு ஒன்றின் நிமித்தம் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரு மாணவ குழுக்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலின் காரணமாக இடையிடையே இரு குழுவினரும் மோதலில் ஈடுபட்டு வந்துள்ளனர். குறித்த இரு மாணவ குழுக்களும் பொலிஸாரால் இனங்காணப்படாத நிலையில் நேற்றைய தினம் குழு ஒன்று வாள்வெட் டில் ஈடுபட இருப்பதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

இதனையடுத்து குறித்த பாடசாலை சூழலில் யாழ்.பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸாரால் சிவில் உடையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது குறித்த பகுதியில் மாணவர் குழு ஒன்று சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுள்ளது. இதனை அடுத்து அவர்களிடம் மேற்கொண்ட, விசாரணைகளை அடுத்து எட்டுப்பேர் கைது செய்யப்பட்டனர். அதில் 3 பேர் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். ஏனையோர் யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கைதான மாணவர்கள் மேற்படி வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்காலம் என சந்தேகப்படும் நிலையில், இவர்கள் மீதான விசாரணைகள் முடிவுற்ற பின்னர் நீதி மன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

Related Posts