- Monday
- June 9th, 2025

வட மாகாண சபையின் அமைச்சர் பா.சத்தியலிங்கத்திடம் இருந்த, மூன்று பதவிகள் நேற்று முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பு நிர்மாணமும் தொழிற்துறையும் மற்றும் மாகாண நிர்வாக அமைச்சு போன்ற சில அமைச்சுக்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் இருக்கின்றன. இந்தநிலையில், மேலும் முன்று அமைச்சுக்களை அவர் நேற்று பொறுப்பேற்றுள்ளார். குறித்த...

வடக்கு மாகாண சபையின் அமைச்சுப் பொறுப்புக்களில் இன்று அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிய வருகின்றது. வடமாகாண அமைச்சர்களுக்கு கூடுதல் அமைச்சுப் பொறுப்புக்கள் முதலமைச்சரால் கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் சில பொறுப்புக்களை முதலமைச்சர் எடுத்து தனக்கு கீழேயும், சில பொறுப்புக்களை வேறு வடமாகாண சபை உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று மாலை 6.00...

வட மாகாண சபை தயாரித்த அரசியல் தீர்வு திட்டம் சனிக்கிழமை (21) மாலை எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் கையளிக்கப்பட்டது. எதிர்க் கட்சி தலைவரை அவருடைய அலுவலகத்தில் சந்தித்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வட மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா ஆகியோர் உட்பட மாகாண...

2.1 மில்லியனுக்கு சூழலுக்கு ஏற்புடையதற்ற வீட்டினை கட்டுவது குறித்து தமக்கும் புரியவில்லை என ஐக்கிய இராச்சியத்தின் உயர் ஸ்தானிகர் டேவிட் டலி நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். யாழிற்கு விஜயம் மேற்கொண்ட உயர் ஸ்தானிகர் டேவிட் டலி வடமாகாண முதலமைச்சரை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த வடமாகாண முதலமைச்சர், அந்த...

தமிழ்நாட்டு முதல்வராக மீண்டும் செல்வி ஜெயராம் ஜெயலலிதா தெரிவாகியதையடுத்து வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது, வருங்காலத்தில் செல்வி ஜெயலலிதா ஈழத் தமிழ் மக்களுக்கு பல நன்மைகளைச் செய்வார் என எதிர்பார்க்கின்றேன். தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் அவரையே முதலமைச்சராக்கியதிலிருந்து மக்கள் மத்தியில் அவருக்கிருந்த செல்வாக்கை எடுத்துக்காட்டுகின்றது. அதனால் அவர்...

வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேவின் பேச்சு, நடவடிக்கை வேறுவிதமாக இருக்கின்றது. அவர் அரசியல்வாதியாக இருந்தவர். மேல்மாகாண முதலமைச்சராகவும் இருந்தவர். அதனால், அனைத்தையும் அரசியல் ரீதியாக பார்க்கின்றார் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார். வடமாகாணத்திலுள்ள மீன்பிடியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல், யாழ். பொது நூலக மண்டபத்தில் வியாழக்கிழமை (19) நடைபெற்றது. அந்தக் கலந்துரையாடலின் பின்னர்...

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக அவர் தெரிவித்தார். இன்று (புதன்கிழமை)...

முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் ஏழாம் ஆண்டு அஞ்சலி நிகழ்வுகள் ஆரமம்பமாகி இடம்பெறுகின்றது. வணக்க நிகழ்வை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுடரேற்றி ஆரம்பித்து வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், பொது மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதிகள் விபரம். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்...

வட மாகாணசபை ஏற்பாடு செய்துள்ள நினைவேந்தல் நிகழ்வு, முள்ளிவாய்க்காலில் இன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் முதலமைச்சர் அலுவலகத்தால் செய்திக் குறிப்பொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. '2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இலங்கை தமிழரின் வரலாற்றில் மறக்க முடியாத நாள். சர்வதேச யுத்த விதிகளைப் புறந்தள்ளி கொத்துக் கொத்தாக எமது உறவுகளைக் கொன்றொழித்த இறுதி நாள்....

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வன்முறைகளை தடுக்க வட மாகாண சபை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையே என முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- வடக்கில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரும் கடற்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு இருந்தும் இங்கு வன்முறைகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன என்றால், ஏதோ ஓர் இடத்தில் பிரச்சினை...

வடக்கு மாகாணசபையால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவதற் காக எட்டுப்பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி வடக்கு மாகாணசபையால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கடைப்பிடிக்கப்படவுள்ளது. கடந்த வருடத்தைப்போன்று முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு அமைதியான முறையில் நடைபெறுமெனவும், இதற்கான ஒழுங்குகளை மேற்கொள்வதற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் வடக்கு...

வடமாகாணத்தில் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட முறையற்ற நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பில் விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் புதிய தலைவராக ஆளுங்கட்சி உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழுவின் முன்னாள் தலைவரான எம்.அன்டுனி ஜெயநாதன், தனது தலைவர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, புதிய தலைவர் நேற்று செவ்வாய்க்கிழமை (10) அறிவிக்கப்பட்டுள்ளார். 7 பேர் கொண்ட இந்தக்...

வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில் பொருளதார மத்திய நிலையம் அமைப்பதற்கான காணி தொடர்பான பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து ஆளும் கட்சியினரே முதலமைச்சர் விக்னேஸ்வரன், விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் ஆகியோரை சபையில் நுழைய விடாமல் செய்வோம் எனப் போர்க்கொடி தூக்கினர். வடக்கு மாகாண சபையின் 52 ஆவது அமர்வு நேற்று நடந்தது. இதன்போது தொலைபேசி...

மாகாண சபை அமர்வை நடத்த விடாது குழப்பிக் கொண்டிருந்த உறுப்பினர்களிடம் "என்னை செம்மறி என்று நினைத்துப் பேசிக்கொண்டிருக்காதீர்கள்" என சீறினார் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம். நேற்று நடந்த வடக்கு மாகாண சபையின் 52 ஆவது அமர்வில் நிரந்தரக் குழுக்களுக்கான தெரிவு இடம்பெற்றது. அப்போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் இடையே கடும் வாய்த் தர்க்கம் ஏற்பட்டது. அவைத்...

வடமாகாண தொழில்நுட்ப சங்கம் மாகாண சபை முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை பகல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொழிநுட்ப சங்கத்திலுள்ளவர்களே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த மாவட்டங்களில் தொழில்நுட்ப மையங்கள் உள்ளன. இதில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர தகைமைகளோடு பயிற்சி நெறியை முடித்த தங்களை தொழில்வாய்ப்புக்களுக்கு...

வன்னி மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் வடமாகாண சபைக்கு முன்பாக கூடி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பல்வேறு போராட்டங்கிளன் பின் தங்களுக்கான நிரந்தர நியமனத்திற்கான பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ள போதிலும் அதனை விரைவில் வழங்குமாறு கோரியே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. வடமாகாண சபை...

'தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கழுத்தறுப்புக்கள், கருவறுப்புக்கள் மற்றும் வெட்டுக்குத்துக்கள் என்பன தாராளமாக நடக்கின்றன' என வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவரும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான எம்.அன்டனி ஜெயநாதன் பகிரங்கமாக தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்றது. இதன்போது உரையாற்றக் கிடைத்த சந்தர்ப்பத்திலேயே ஜெயநாதன் இவ்வாறு கூறினார்....

'வடமாகாணத்தில் வழங்கப்பட்ட முறையற்ற நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பில் விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் பதவியை பிரதி அவைத்தலைவர் எம்.அன்டனி ஜெயநாதன், கடந்த ஜனவரி மாதம் இராஜினாமா செய்துள்ளார். இதனால், அந்தக் குழுவின் செயற்பாடுகள் முடங்கியுள்ளன' என வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண...

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், அமைச்சர் மனோகணேசனுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்றைய தினம் நடைபெற்றிருந்தது. யாழ்ப்பாணத்தில் வைத்து இந்த சந்திப்பு நடைபெற்றுது. இதன்போது வடமாகாணத்துக்கு மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்துக்கான காணித் தெரிவு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் பின்னர் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார். இதன்போது, வடக்கில் அமைக்கப்படவுள்ள பொருளாதார...

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வடக்கு மாகாண சபையின் அரசியல் தீர்வுத்திட்டத்தின் பிரதி ஒன்றை வழங்குமாறு கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னாண்டோ வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாணசபையின் தீர்வுத்திட்டம் கடந்த மாதம் 22 ஆம் திகதி சபையில் நிறைவேற்றப்பட்டிருந்தது. குறித்த தீர்வுத்திட்டம் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம்...

All posts loaded
No more posts