- Monday
- June 9th, 2025

வடமாகாண முதலமைச்சரின் நிதி நியதிச்சட்டம் எதிர்ப்புக்களின்றி வடமாகாண சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 54வது அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனினால் சமர்ப்பிக்கப்பட்டது. சமர்ப்பிக்கப்பட்ட நிதி நியதிச்சட்டம் குழு நிலை விவாதத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, மாற்றங்கள் செய்யப்பட்டன. வாத விவாதங்களின் பின்னரும், கூச்சல் குழப்பங்களின் மத்தியிலும், நிதி நியதிச்சட்டத்தில் பல மாற்றங்களை மேற்கொள்ளப்பட்டு குழுநிலை...

மகிந்த ராஜபக்ஷவினால் காங்கேசன்துறையில் அமைக்கப்பட்ட மாளிகையினை பெற்றுக்கொள்வதற்கான பிரேரணை வடமாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 54வது அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நடைபெற்றது. அந்த அமர்வின் போது, வடமாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் குறித்த பிரேரணையினை முன்மொழிந்தார். வடக்கு மாகாண சபையின் வதிவிட முகாமைத்துவ பயிற்சி நெறிகளை நடாத்துவதற்கும்,...

ஜனாதிபதி அலுவலகத்தில் கடந்த வருடம் நடைபெற்ற கிறிஸ்மஸ் நிகழ்வுக்கு வடமாகாண சபை உறுப்பினர் ஒருவர் சென்றிருந்தார். அதன்போது, மிக முக்கிய நபர் என்பதை அடையாளப்படும் VIP அட்டையொன்று அவருக்கு வழங்கப்பட்டது. வடமாகாண சபை உறுப்பினர், தனக்கு வழங்கப்பட்ட VIP அட்டையை தனது காரில் முன்புற கண்ணாடியில் ஒட்டினார். அதனையடுத்து, தனது குடும்பத்தினருடன சென்று ஜனாதிபதி மைத்திரிபால...

பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்க உத்தரவிடுமாறு கோரி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவசர கடிதம் எழுதியுள்ளார். இதே கோரிக்கையை திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அவர் கிராமியப் பொருளாதார அமைச்சிடமும் விடுத்திருந்தார். அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக் குளத்தில் அமைப்பது என்று வடக்கு மாகாண சபை...

தமிழர்களுடைய ஆயுதப் போராட்டம் தொடக்கம் எல்லாவற்றையும் பிளவுபடுத்தி பழக்கப்பட்டவர்களுடைய நிகழ்ச்சி நிரலில் மாகாண சபையையும் குழப்பி பேரினவாதிகளுக்கு தீனி போடுவதற் வட மாகாண சபையில் சிலர் உடந்தையாக இருப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார். வடக்கு விவசாய அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராக வடமாகாண சபையில் உள்ள சுமந்திரன் ஆதரவு உறுப்பினர்கள் சிலர் நம்பிக்கையில்லாத்...

புதிய அரசியல் யாப்பு மூலம் எதிர்காலம் வரை நீடிக்க கூடிய வகையிலான, நிதானமான தீர்வினையே தமிழ் மக்கள் எதிர்ப்பார்கின்ற படியால், அத் தீர்வினை பெற்றுக்கொள்ளக் கூடிய வழிகளை அரசாங்கம் வகுக்க வேண்டுமென பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டௌவ்ரிஸ்ஸிடம் (James Duaris ) வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். யாழிற்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய உயர்ஸ்தானிகர் இன்று...

வட மாகாண சமூக சுகாதாரத் தொண்டர்கள் வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தின் முன்பாக இன்று புதன்கிழமை காலை முதல் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நியமனம் வழங்கலின்போது தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி வடமாகாணத்தைச் சேர்ந்த சமூக சுகாதாரத் தொண்டர்கள் கடந்த சில மாதங்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த வடமாகாண சபை அமர்வின்போது வடமாகாண சபை...

வடக்கு மாகாணசபையில் ஆளும்கட்சி உறுப்பினர்கள் சிலர் ஒன்றிணைந்து எதிர்க்கட்சி போல செயற்படுகின்றனர். இவர்கள் ஒருவர் மீது ஒருவர் சேறு பூசுவதுடன், சபை நடவடிக்கைகளை கேலிக்கூத்தாக்கி வருகிறார்கள் என வட மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா தெரிவித்துள்ளார். மாகாண சபையின் எதிர்க்கட்சியாகவுள்ள நாங்களே சபையின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறோம். தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறோம். ஆனால், ஆளும்...

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உட்பட சில அமைச்சர்களுக்கு எதிராக சில உறுப்பினர்கள் சதித்திட்டம் தீட்டி வருவதாக சில அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் வட மாகாண முதலமைச்சர் மற்றும் சில அமைச்சர்களுக்கு எதிராகச் செயற்படுபவர்களுக்கு சலுகைகள் பெற்றுத் தருவதாக அவர்கள் பேரம் பேசி வருவதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்....

வடக்கில் படையினர் வசம் உள்ள பல காணிகள் தொடர்பில் அரசாங்க அதிபர்கள் தகவல்களை தரவில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குற்றச்சாட்டியுள்ளார். அவர் யாழ்ப்பாண செய்தியாளர் யாழ்.தீபனுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல்:- கேள்வி: வடக்கு மாகாணசபையின் அதிகாரங்கள் குறித்து நீங்கள் மேற்கொள்ளும் போராட்டங்கள் எதுவரை எந்தளவில் வெற்றியளித்துள்ளன? பதில்: தமிழ் சிங்கள அரசியல் தலைவர்கள் புரிந்து...

தமிழக முதலமைச்சரை சந்திப்பதற்கான திகதி அறிவிக்கப்படுவதற்கு முன்னர் எதிர்ப்புக்கள் உருவாகியுள்ளது. எனவே, எதிர்ப்பினை சமாளித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்துப் பார்ப்போம்” என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமை சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “நாம் இருவரும் சந்திப்பதற்கு பலர் எதிர்ப்புத்...

"இலங்கையில் அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழவேண்டுமெனில் சமஷ்டியே பொருத்தமானது'' என்று நோர்வே தூதுக்குழுவினரிடம் தமது நிலைப்பாட்டை முன்வைத்திருக்கின்றார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு நேற்றுமுன்தினம் கொழும்பு வந்த நோர்வே துணை வெளிவிவகார அமைச்சர் டொரே ஹற்ரெம் தலைமையிலான குழுவினர் நேற்று புதன்கிழமை வடக்குக்குச் சென்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது இல்லத்தில் சந்தித்துக்...

காங்கேசன்துறை பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவினால் கட்டப்பட்டுள்ள மாளிகையினை வடமாகாண சபையின் பாவனைக்கு வழங்க ஏற்பாடு செய்யுமாறு வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார். யாழ்.மாவட்ட இரண்டாவது ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்.மாவட்ட இணைத்தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் யாழ்.மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்ட போது, வடமாகாண சபையின்...

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தலில் 134 இடங்களில் வென்று அதிமுக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. முதல்வராக 6-வது முறையாக ஜெயலலிதா பதவியேற்றுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் வாழ்த்து தெரிவித்திருந்தார்....

அண்மைக்காலமாக அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதுவுமே செய்யாமல், தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயராம் ஜெயலலிதா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் ஒரு தீர்மானத்தை சமர்ப்பித்ததை கண்டித்து, வடமாகாண சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, சபையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ் நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் செய்த சேவை காரணமாக ஜெயலலிதா, மீண்டும்...

வடக்கு மாகாணசபையின் 53ஆம் அமர்வு நேற்ற கைதடியில் அமைந்துள்ள பேரவை மண்டபத்தில் இடம்பெற்ற போது, குடாநாட்டு பத்திரிகைகள் மீது கடுமையான விமர்சனங்களை மாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர். மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் ஆனோல்ட், மாகாணசபை உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறல் தொடர்பான பிரேரணையினை சபையில் முன்மொழிந்தார். இதன்போது அவர் உரையாற்றுகையில், யாழ். மாவட்டத்தில் இருந்து...

அரநாயக்கவில் ஏற்பட்ட மண்சரிவால் உயிரிழந்தவர்கள், நாட்டின் ஏனைய பகுதிகளில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அனுதாபம் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நேற்று வியாழக்கிழமை (26) நடைபெற்றது. இதன்போது, தமிழக முதல்வராக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட ஜெயலலிதாவுக்கு, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வாழ்த்துக் கூறினார்....

வட மாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட யோசனை, மக்களுக்கும் சென்றடையும் வகையில் நேற்றயதினம் (24) ஊடகவியலாளர்களுக்கு கையளிக்கப்பட்டது. புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற நிலையில், அதில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை உள்ளடக்கும் வகையிலான தீர்வுத்திட்ட யோசனையொன்று, கடந்த ஏப்ரல் மாதம் வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டிருந்தது. குறித்த தீர்வுத்திட்ட...

வட மாகாண சுகாதார அமைச்சரிடம் இருந்து புனர்வாழ்வு, மகளிர் விவகார துறைகளை தாம் திரும்பப் பெற்றுக்கொண்டமை குறித்து முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விளக்கமளித்துள்ளார். குறித்த துறைகளை தம்மால் நிர்வகிக்க முடியாத நிலையிலேயே அவை சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்திடம் வழங்கப்பட்டன. இந்நிலையில் தற்போதுள்ள செயலாளர் மற்றும் அதிகாரிகள் இந்த துறைகளிலேயே நியமனம் பெற்றுள்ளமையால் அப்பதவிகளை தாம் மீண்டும் பொறுப்பேற்கிறார்...

வடமாகாண சபையின் அரசியல் தீர்வு திட்ட முன்வரைபு ஊடகவியலாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த வரைபு இன்று செவ்வாய்கிழமை காலை ஊடகவியலாளர்களிடம் வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானத்தினால் கையளிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் அரசியல் தீர்வு திட்ட வரைபு எதிர்கட்சி தலைவரிடம் கையளிக்கப்பட்ட நிலையிலேயே, ஊடகவியலாளர்களுக்கு அது தொடர்பில் தெளிவு படுத்தும் வகையில் கையளிக்கப்பட்டுள்ளது.

All posts loaded
No more posts