வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உட்பட சில அமைச்சர்களுக்கு எதிராக சில உறுப்பினர்கள் சதித்திட்டம் தீட்டி வருவதாக சில அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் வட மாகாண முதலமைச்சர் மற்றும் சில அமைச்சர்களுக்கு எதிராகச் செயற்படுபவர்களுக்கு சலுகைகள் பெற்றுத் தருவதாக அவர்கள் பேரம் பேசி வருவதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் ஒத்துழைப்புடனேயே இவர்கள் செயற்பட்டு வருவதாகவும் இவர்களின் சிபாரிசுகளை சில உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறானவர்களே மாகாணசபையில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றார்கள் என சில மாகாண சபை உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.