வடமாகாண முதலமைச்சரின் நிதி நியதிச்சட்டம் எதிர்ப்புக்களின்றி வடமாகாண சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் 54வது அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனினால் சமர்ப்பிக்கப்பட்டது.
சமர்ப்பிக்கப்பட்ட நிதி நியதிச்சட்டம் குழு நிலை விவாதத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, மாற்றங்கள் செய்யப்பட்டன.
வாத விவாதங்களின் பின்னரும், கூச்சல் குழப்பங்களின் மத்தியிலும், நிதி நியதிச்சட்டத்தில் பல மாற்றங்களை மேற்கொள்ளப்பட்டு குழுநிலை வாதம் நிறைவுபெற்றது.
நிதி நியதிச்சட்டத்தை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முன்மொழிய வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வழிமொழிந்தார்.
இறுதியில் சபை உறுப்பினர்களின் எதிர்ப்புக்களின்றி நிதி நியதிச் சட்டம் சபையினால் அங்கிகரீக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.