- Monday
- June 9th, 2025

இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்காக முள்ளிவாய்க்காலில் நினைவுத் தூபி அமைப்பது தொடர்பில், வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கான குழுவும் நியமிக்கப்பட்டபோதும் அங்கே இன்னமும் நினைவுத்தூபி அமைக்கப்படவில்லை. இது குறித்து மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். முள்ளிவாய்க்காலில் படுகொலைசெய்யப்பட்ட மக்களின் நினைவாக நினைவுத்தூபி அமைக்கப்படும் என கடந்த வருடம் முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தின்போது தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்னும் சில நாட்களில்...

தமிழ்த் தேசியக் கூட்டடமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும், எனக்கும் எவ்வித பனிப்போரும் இல்லை. எனது உடல் ஆரோக்கியமற்றுள்ளது. மருத்துவ உதவியை நாடியிருப்பதால்தான், சம்பந்தனை சந்திக்க முடியாமல் போனது' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார். யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிமனை ஆசிரிய மாநாடு வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்றது. இந்நிகழ்வு...

வடமாகாண சபை மற்றும் தமிழ் மக்கள் பேரவையால் முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்வு யோசனைகளுக்கு, இனவாதசாயம் பூசாது, அவற்றை அரசாங்கம் சாதகமாகப் பரிசீலிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்தார். அரசியல் ரீதியாக ஒரு தீர்வைக் காணமுடியாத நிலையே, நாட்டில் தற்பொழுது காணப்படுகிறது. நிலைத்திருக்கக் கூடிய...

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து, தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்ட ஒரு பிராந்தியமாகவும், ஏனைய மாகாணங்கள் ஏழையும் இணைத்து சிங்கள மொழியை அடிப்படையாகக் கொண்ட வேறு பிராந்தியமாகவும் நிர்வகிக்கவேண்டும் என்று வடமாகாண சபையினால் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படும் தீர்மானத்தை, மேல் மாகாண சபை ஏகமனதாக நிராகரித்துள்ளது. ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 15 பேர் ஒன்றிணைந்து,...

கொக்கிளாய் பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் பௌத்த விகாரையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார். கொக்கிளாய் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியொன்றில் பாரிய பௌத்த விகாரையொன்று கட்டப்பட்டு வருகின்றது. குறித்த நிர்மாணம் தொடர்பில் நேரடியாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக வடக்கு மாகாண ஆளுனர்...

வடக்கு மாகாண சபையின் அரசியல் தீர்வுத்திட்டம் குறித்து சிங்கள இனவாதக் கட்சிகள் சில இணைந்து கொழும்பு நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன்னர் வழக்குத் தொடர்ந்தமை யாவரும் அறிந்ததே. அதையடுத்து வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உட்பட நால்வருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. இந்த அழைப்பாணைக்கமைய முதலாம் எதிரியாக தமிழரசுக்...

வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனிற்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அரசியல் தீர்வுத்திட்ட முன்மொழிவுகளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா.சம்மந்தனிடம் சமர்ப்பிக்கும் நடவடிக்கை இரண்டாவது தடவையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இன்று சனிக்கிழமை காலை வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். இரண்டாவது தடவையாகவும் தீர்வு திட்டம்...

வவுனியாவில் அமைந்துள்ள தாண்டிக்குள விவசாயப் பண்ணைக்குரிய நிலத்தில் பொருளாதார அபிவிருத்தி மையம் அமைப்பதற்காக றிசாட்பதியுதீன் அவர்களின் அமைச்சுக்கு வன்னி மாவட்ட சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கத்தினால் ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி 2016ஆம் ஆண்டு ஒலிபரப்பாகிய மின்னல் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தாண்டிக்குள விவசாயப் பண்ணை அமைந்துள்ள நிலம் 1989ஆம் ஆண்டு மத்திய...

வடக்கு மாகாண காணி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அரச அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற இருந்த சந்திப்பு திகதி குறிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண காணி விவகாரம் தொடர்பில் நேற்றைய தினம் சந்திப்பு இடம்பெற இருந்தது. கடந்த 18 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில்...

சிறீலங்காவில் தனியரசொன்றை உருவாக்குவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அகில இலங்கை தமிழரசுக் கட்சியும் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டவாளர் அனுர லக்சிறியினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு மீதான விசாரணையை தொடருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மனுவின் பிரதிவாதிகளாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா,...

ஒரு அமைச்சர் என்ற முறையில் உயர்ஸ்தானத்தை வகிக்கும் சுவிடன் வௌிவிவகார அமைச்சர் இங்கு வந்தது எமக்கு பெருமை என வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுவிடன் வௌிவிவகார அமைச்சர் நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்தார். இங்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட வட மாகாண முதலமைச்சர், நீங்கள்...

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, இருதய நோய் சிகிச்சை பிரிவில் இன்று திங்கட்கிழமை (25) சிகிச்சை பெற்றார். முதலமைச்சருக்கு இருதய நோய் இருப்பதன் காரணமாக அவர் கடந்த காலங்களிலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இந்நிலையில், இன்றும் சிகிச்சை பெறுகின்றார். அவர் விடுதியில் அனுமதிக்கப்படவில்லையெனவும், சிகிச்சை மாத்திரம்...

வடமாகாணத்தில் குற்றச்செயல்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பில் புதிய பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு அவசர கடிதம் ஒன்றை வடக்கு முதல்வர் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் களவுகள், கொள்ளைகள், நாளாந்தம் இடம்பெற்று வருகின்றன என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வடமாகாணத்திற்கு சுற்றுலா வந்த சிங்கள மக்களின் பேரூந்து மீது தாக்குதல்...

சென்ற வருடம் தமிழகத்தில் தொடர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு வழங்குவதற்கென வடக்கு மாகாணத்தில் பல்வேறு இடங்களிலிருந்து நிதி சேகரிக்கப்பட்டது. அந்த நிதியானது தமிழக முதலமைச்சரின் நிதியத்தில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்திருந்தார். நிதி சேகரிக்கும் பணி முடிந்த நிலையில், வட மாகாண சபையால் சேகரிக்கப்பட்ட நிதியான 4 இலட்சத்து 94...

"நாட்டைப் பிரிக்காது நாம் தனித்து வாழும் அதே நேரம் சகல மக்களுடனும் சேர்ந்தே வாழ ஆசைப்படுகின்றோம். அதனை வலியுறுத்தியே அரசியல் தீர்வுத் திட்டத்துக்கான முன்மொழிவுகளை உள்ளடக்கிய வரைவை நாம் தயாரித்திருக்கின்றோம்." இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். "நாம் பிரிந்து செல்ல விரும்பாது ஒருங்கிணைந்து வாழ முன்வந்துள்ளமையால் சிங்கள மக்கள் எங்களுக்குச் சகல ஒத்துழைப்பையும்...

அரசியலமைப்பு தீர்வுத் திட்டம் குறித்து வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை தாக்கி பேசுவதும், கைதுசெய்ய வலியுறுத்துவதும் தேவையற்ற விடயம் என வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி. கே. சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண சபையின் 50வது அமர்வு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வடமாகாண சபையின் அரசியலமைப்பின் தீர்வு திட்டத்தில் மாற்றத்தினை மேற்கொள்ளவதற்கான ஆலோசனைகளைப் பெறும் போதே இவ்வாறு...

வடக்கு மாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வு திட்ட யோசனை நேற்று வெள்ளிக்கிழமை 19 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தினால் புதிய அரசியலமைப்பு உருவாக்குவதற்கான கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்ற நிலையில், வடக்கு மாகாண சபையும், புதிய அரசியலமைப்பு கருத்துக்களை முன்வைப்பதற்காக வடக்கு மாகாண முதலமைச்சரின் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவினர் மூன்று...

வடக்கு மாகாணசபையினால் திரட்டப்பட்ட தமிழ்நாடு வெள்ள நிவாரணப் பணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் நிதியத்தினில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தமிழ் நாட்டில் கொட்டித் தீர்த்த கன மழையின் காரணமாக பாதித்த மக்களிற்கு உதவும் வகையில் வடக்கு மாகாணசபையினால் திரட்டப்பட்ட தமிழ்நாடு...

வடமாகாண சபை உறுப்பினர்கள் மூவர், ஒன்றாக இணைந்து ஒரே தட்டில் உணவு உட்கொண்ட சம்பவம், தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவின் வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்றது. மாவை சேனாதிராசாவின் தாயாருடைய அந்தியோட்டிக் கிரியைகள் அன்றைய தினம் மாவையின் வீட்டில் நடைபெற்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது. வடமாகாண சபை உறுப்பினர்களாக...

வடக்கு மாகாணசபையின் மூலம் வழங்கப்படும் நியமனங்களில் எமக்குத் தெரிந்தவர், எமக்கு வாக்களித்தவர் என்று எந்த முன்னுரிமைகளும் வழங்கப்படுவதில்லை. பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. நீதியரசர் ஒருவரை முதல்வராகக்கொண்டு இயக்கப்படும் மாகாண நிர்வாகத்தில் நியமனங்கள் யாவும் நீதியான முறையில் தகுதிகளின் அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபையால் முகாமைத்துவ உதவியாளர்கள், சாரதிகள், அலுவலகப்...

All posts loaded
No more posts