வடக்கு மாகாணசபையினால் திரட்டப்பட்ட தமிழ்நாடு வெள்ள நிவாரணப் பணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் நிதியத்தினில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தமிழ் நாட்டில் கொட்டித் தீர்த்த கன மழையின் காரணமாக பாதித்த மக்களிற்கு உதவும் வகையில் வடக்கு மாகாணசபையினால் திரட்டப்பட்ட தமிழ்நாடு வெள்ள நிவாரணப் பணமே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபையினால் வங்கி கணக்கு ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலம் நிதி சேகரிக்கப்பட்டது. இதன்மூலம் 11 லட்சத்து 20 ஆயிரம் இலங்கை ரூபா சேகரிக்கப்பட்டது. இவ்வாறு சேகரிக்கப்பட்டபணம் இலங்கைச சட்டத்தின் பிரகாரம் ஒரு பயணி கொண்டு செல்லக் கூடிய 5 லட்சம் ரூபா வீதம் அமெரிக்க டொலராக கொண்டு செல்லப்பட்டது.