சென்ற வருடம் தமிழகத்தில் தொடர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு வழங்குவதற்கென வடக்கு மாகாணத்தில் பல்வேறு இடங்களிலிருந்து நிதி சேகரிக்கப்பட்டது. அந்த நிதியானது தமிழக முதலமைச்சரின் நிதியத்தில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்திருந்தார்.
நிதி சேகரிக்கும் பணி முடிந்த நிலையில், வட மாகாண சபையால் சேகரிக்கப்பட்ட நிதியான 4 இலட்சத்து 94 ஆயிரத்து 912 ரூபாய் தொகையை இந்த மாதம் 4ஆம் திகதி தமிழக முதலமைச்சரின் நிதியத்தில் போடப்பட்டுள்ளதாக சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இந்த நிதி தொடர்பான மேலதிக விபரங்களைத் தருமாறு சி.வி.கே சிவஞானம் அவர்களிடம் ஊடகம் ஒன்று வினவியபோது, இது தொடர்பான மேலதிக விபரங்களைக் கொடுப்பதற்கு அவர் மறுப்புத் தெரிவித்துள்ளாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.