- Monday
- June 9th, 2025

யாழ்ப்பாணம் வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், நேற்று மாலை, வடமாகாண சபையின் ஆளும்கட்சி உறுப்பினர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன்போது பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தலைமையிலான 16 ஆளுங்கட்சி உறுப்பினர்களின் அமைச்சரவை மாற்றத்திற்கான கோரிக்கையினை சம்பந்தர் நிராகரித்தார். அமைச்சர்களும் முதலமைச்சரும் திறமையானவர்கள் . வினைத்திறனின்மைக்கு அரசியலமைப்பின் 13 ம்...

மன்மத வருடம் எங்களை விட்டுப் போக துர்முகி வருடம் இன்று மாலை ஆரம்பமாகின்றது. வருடங்கள் வந்து போனாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தாமதங்களே மிஞ்சி நிற்கின்றன என வடமாகாண முதலமைச்சர் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட எம்முடைய மக்களில் பலர் சொந்த வீடுகளுக்கும் காணிகளுக்கும் செல்லமுடியாது வேறு இடங்களில்...

வடக்கு மாகாண காணிப் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் எதிர்வரும் 18ஆம் திகதி கலந்துரையாடுவதற்கு, தனக்கு அழைப்பு வந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்றது. சபை அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்...

சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீட்டை வன்மையாகக் கண்டித்துள்ள வடக்கு மாகாண சபை, இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில், பொது முக்கியத்துவம் வாய்ந்த அவசர பிரேரணை ஆளும் கட்சி உறுப்பினர் து.ரவிகரனினால் சமர்ப்பிக்கப்பட்டது. பிரேரணையைச் சமர்ப்பித்து உரையாற்றிய ரவிகரன்,...

வடக்கு மாகாண சபையின் அரசியல் தீர்வுத் திட்ட வரைவு, முதலமைச்சருக்கு நேரமின்மையால் இறுதி செய்யப்பட்டு சபையில் நேற்றுச் சமர்ப்பிக்கப்படவில்லை. தீர்வுத் திட்ட இறுதி வரைவு எதிர்வரும் 22 ஆம் திகதியே வெளியிடப்படும் என்றும், 30ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் கையளிக்கப்படும் எனவும் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடக்கு...

"காணி சுவீகரிப்பு இனிமேலும் தொடருமாக இருந்தால் விளைவுகள் மோசமாக இருக்கும். இதனை நாம் நல்லாட்சி அரசுக்கு இங்கிருந்து எச்சரிக்கின்றோம்." - இவ்வாறு வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்று சபையில் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையில் நேற்று எடுத்துக் கொள்ளப்பட்ட பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரேரணை மீது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு...

அரசியல் தீர்வு மற்றும் அரசியல் யாப்புக்கான வட மாகாண சபையின் தீர்வுத்திட்ட முன்மொழிவு இன்னமும் பூரணப்படுத்தப்படவில்லை. இன்னும் சில தினங்களில் பூரணப்படுத்தப்பட்டு, சபையில் முன்வைக்கப்பட்டு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஊடாக அரசாங்கத்துக்கு கையளிக்கப்படும்' என வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். அரசியல் தீர்வு மற்றும் அரசியல் யாப்புக்கான வட மாகாண சபையின் கொள்கை...

வடமாகாண சபை அமைச்சர்கள் நால்வரையும் நீக்கி புதியவர்களை நியமிக்குமாறு கோரி பெற்றுக்கொள்ளப்பட்ட கையெழுத்து அடங்கிய விண்ணப்பம் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வடமாகாண பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தலைமையில் அறுவர் அடங்கிய குழு இன்று மாலை 5.30க்கு முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தது. இதன்போதே குறித்த விண்ணப்பம் கையளிக்கப்பட்டுள்ளதாக அன்ரனி ஜெகநாதன் தெரிவித்தார். இந்தக்...

மத்திய அரசாங்கத்தின் மீள்குடியேற்ற மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு வட மாகாணசபை முட்டுக்கட்டையாக செயற்படுகிறது என்று சிறைச்சாலை மறு சீரமைப்பு புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து கலாசார அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் குற்றம்சாட்டியுள்ளார். வடக்கு கிழக்கில் யுத்தத்தால் வீடுகளை இழந்த மக்களுக்கு 65,000 வீடுகளை அமைப்பதற்கு மீள் குடியேற்ற அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வீடமைப்புத் திட்டத்திற்கு...

வடமாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட வரைவு எதிர்வரும் 16 ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. வட மாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட வரைவு வடமாகாண சபையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த வரைபு எதிர்வரும் 16 ஆம் திகதி தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான...

வட, கிழக்கு மாகாணங்களை இணைத்து தனி நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு சமஷ்டி முறையிலான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என வடமாகாண சபையினால் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரைத்துள்ளது. வடமாகாண சபையின் அமர்வு கைதடியிலுள்ள மாகாண சபை கட்டிடத் தொகுதியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போது வடமாகாண சபையினால் நியமிக்கப்பட்ட 19 பேர் கொண்ட குழு பாிந்துரைத்த திட்ட வரைபை...

வடமாகாண சபை அமைச்சர்களை நீக்கி அவர்களுக்குப் பதிலாக புதியவர்களை நியமிக்குமாறு கோரி பெறப்பட்ட கையெழுத்து அடங்கிய விண்ணப்பம் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் இன்று வியாழக்கிழமை கையளிக்கவுள்ளது. இந்த விண்ணப்பத்தில் வடமாகாண சபையில் அங்கம் வகிக்கும் 16 உறுப்பினர்கள் இதுவரை கையெழுத்திட்டுள்ளதோடு, மேலும் சிலர் இன்று கையெழுத்திடவிருப்பதாக வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் ஐ.பி.சி தமிழ்...

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒருபோதும், மீண்டும் தலைதூக்காது. தமிழ் மக்கள், ஒருபோதும் மீண்டுமொரு யுத்தத்துக்குள் தள்ளப்பட மாட்டார்கள். தெற்கைச் சேர்ந்த சில அரசியல் சக்திகளுக்கே, யுத்தமொன்றின் தேவை அவசியமாகியுள்ளது' என்று வட மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கூறினார். தமிழீழ விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட தற்கொலை அங்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் கடந்த...

வட மாகாணசபை அமைச்சர்கள் அனைவரையும் நீக்கி புதியவர்களை நியமிக்குமாறு கோரும் மனுவில், இதுவரை 16 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தெரிவித்தார். வடமாகாண முதலமைச்சர், அவைத்தலைவர் மற்றும் 4 அமைச்சர்கள் நீங்கலாக மொத்தம் 24 உறுப்பினர்கள் இதில் கையெழுத்திடவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் இணைப் பொருளாளரும், வடமாகாண சபை பிரதி...

வட மாகாண முதலமைச்சரின் அலுவலகம் இன்று திங்கட்கிழமை தொடக்கம் கைதடியில் உள்ள பேரவைச் செயலக வளாகத்திற்குள் அமைந்துள்ள புதிய கட்டிடத்தில் இயங்கவுள்ளது. வட மாகாணசபை ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் நேற்று வரை யாழ்ப்பாணம் - சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள தனியார் கட்டிடத்தில் இயங்கிவந்த முதலமைச்சர் அலுவலகம் மற்றும் முதலமைச்சரின் அமைச்சிற்குரிய அலுவலகம் என்பன இன்று முதல்...

வடமாகாண தமிழ் மக்களால் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதால் அவர்களின் கேள்விகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்குமே பதிலளிக்க வேண்டிய கடமை உள்ளதென முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அண்மையில் ஹிக்கடுவயில் இடம்பெற்ற 32வது முதலமைச்சர்கள் மாநாட்டில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்து கொள்ளாமை தொடர்பாக ஜாதிக ஹெலஉறுமயவின் தேசிய அமைப்பாளரும், மேல்மாகாணசபை உறுப்பினருமான நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்....

இலங்கை அரசியலமைப்பு மறுசீரமைப்பில் வடமாகாண சபையின் அரசியல் தீர்வுத்திட்ட யோசனைகள் 7ம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, உறுப்பினர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்மந்தனிடம் நேரில் கையளிக்கப்படும் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஆட்சிமாற்றத்தின் பின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசியல் யாப்பு மறுசீரமைப்பு ஒன்றிற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதனடிப்படையில் வடமாகாண மக்களின்...

வட பகுதியெங்கும் பௌத்தர்களே இல்லாத இடங்களில் கூட அடாத்தாக பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டியுள்ள வடமாகாண சபை உறுப்பினர்கள், இவை திட்டமிட்ட இனத்துவ அடையாள அழிப்பின் நோக்கமே என்றும் குறிப்பிட்டுள்ளனர். முதலமைச்சருக்கும் வட மாகாண சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போது நயினாதீவில் 62 அடி...

வடக்கு, கிழக்கில் 65ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் வீட்டுத்திட்டத்தை நிறுத்தி, அந்த வீடுகள் வடக்குக்கு பொருத்தமானவையா என்பது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு கோரி, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை நேற்று (29) அனுப்பி வைத்துள்ளார். இக்கடிதத்தின் பிரதிகள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேற்படி வீட்டுத்திட்ட...

சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் வீடுகள் அமைக்கும் வீட்டுத்திட்ட வீடுகளைப் பெறுவதற்கான விண்ணப்படிவங்கள் விநியோகிக்கப்படுவதாக ஆளுங்கட்சி உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் கூறினார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (24) நடைபெற்றது. இதன்போது, வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் வீடுகள் அமைக்கும்...

All posts loaded
No more posts