Ad Widget

யாழ்ப்பாணத்தில் சம்பந்தனிடம் கையளிக்கப்படுகிறது தீர்வுத் திட்டவரைவு!

வடமாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட வரைவு எதிர்வரும் 16 ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வட மாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட வரைவு வடமாகாண சபையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த வரைபு எதிர்வரும் 16 ஆம் திகதி தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனிடம், வட முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், எதிர்கட்சி தலைவர் சி.தவராசா ஆகியோரால் கையளிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தனை யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில் வைத்து வடமாகாணசபையின் 38 உறுப்பினர்களும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதுடன், தீர்வு திட்ட முன்மொழிவும் கையளிக்கப்படவுள்ளதாக அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார்.

Related Posts