‘வடமாகாணத்தில் வழங்கப்பட்ட முறையற்ற நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பில் விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் பதவியை பிரதி அவைத்தலைவர் எம்.அன்டனி ஜெயநாதன், கடந்த ஜனவரி மாதம் இராஜினாமா செய்துள்ளார். இதனால், அந்தக் குழுவின் செயற்பாடுகள் முடங்கியுள்ளன’ என வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற போதே, விந்தன் இந்த விடயத்தை தெரிவித்தார்.
தொடர்ந்து கூறுகையில், குழுவின் தலைவர் பதவியை அன்டனி ஜெயநாதன், இராஜினாமா செய்தமையால், குழுவின் செயற்பாடுகள் கடந்த 5 மாதங்களாக ஸ்தம்பித்துள்ளன. குழுவிடம் முறைப்பாடு செய்தவர்கள், தங்கள் முறைப்பாடுக்களுக்கான பதில் என்ன என்று கொந்தளிக்கின்றனர். ஆகவே, பிரதி அவைத்தலைவர், குழுவின் தலைவர் பொறுப்பை ஏற்று, குழுவை மீண்டும் இயங்க வைக்க வேண்டும’ என்றார்.