Ad Widget

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய கூட்டமைப்பு அழைப்பு

பதுளை, கொஸ்லந்த, மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய அனைத்து தமிழ் மக்களும் முன்வரவேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. (more…)

தெரிவுக்குழுவில் தீர்வுக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது – மாவை

'நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வரும்படி அரசாங்கம் எங்களை அழைக்கின்றது. அங்கு சென்றாலும் எங்களால் தீர்வுக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது' என அவுஸ்திரேலிய பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியிருந்ததாக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கூறினார். (more…)
Ad Widget

பருத்தித்துறையிருந்து கொழும்புக்கு விசேட பஸ் சேவை

பருத்தித்துறையிலிருந்து கொழும்புக்கு புதிய விசேட பஸ் சேவையொன்று புதன்கிழமை (29) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை சாலை முகாமையாளர் கந்தப்பு கந்தசாமி வியாழக்கிழமை (30) கூறினார். (more…)

வீட்டிலிருந்தவர்களை தாக்கி உடமைகள் கொள்ளை

யாழ்ப்பாணம், தாவடி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புதன்கிழமை (28) அதிகாலை நுழைந்த கொள்ளையர்கள் சிலர், வீட்டிலிருந்த கணவன், மனைவியைத் தாக்கி கட்டிவைத்துவிட்டு 3 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என சுன்னாகம் பொலிஸார் கூறினர். (more…)

பாதிக்கப்பட்டவர்களுக்கு சிவன் மானுட மேம்பாட்டு நிறுவனம் உதவி

பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மருத்துவக்குழு உள்ளடங்கலாக 10 பேர் கொண்ட உதவிக்குழு வெள்ளிக்கிழமை (31) பதுளை பிரதேசத்திற்கு செல்லவுள்ளதாக சிவன் மானுட மேம்பாட்டு நிறுவன தலைவர் இ.கலியுகவரதன் இன்று வியாழக்கிழமை (30) தெரிவித்தார். (more…)

நுவரெலியாவில் 1,200 குடும்பங்கள் இடம்பெயர்வு

நுவரெலியாவில் மண்சரிவு அபாயம் காரணமாக, 1,200 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக, அரச முகவர்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

5 இந்தியர்கள் உட்பட எட்டு பேருக்கு மரண தண்டனை

ஹெரோயின் கடத்தலுடன் தொடர்புடைய வழக்கில், 8 பேரை குற்றவாளிகளாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம், அவர்களுக்கு மரணதண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது. (more…)

வடக்கில் அதிகளவு இராணுவத் தலையீடுகள் – கமலேஷ் சர்மா

சிவில் செயற்பாடுகளில் இராணுவத்தின் பங்களிப்பு குறைக்கப்படவேண்டும் என பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா கோரிக்கை விடுத்துள்ளார். (more…)

மண்சரிவில் உயிரிழந்தவர்களிற்கு கூட்டமைப்பு அஞ்சலி

பதுளை கொஸ்லந்தை மீரிபெத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்த மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளது. (more…)

இலங்கை தொடர்பில் மற்றொரு ஐ.நா அறிக்கை இன்று

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்றை இன்று வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

அஜித்தின் 55-வது படம் “என்னை அறிந்தால்”

அஜித்தின் 55-வது படமான ‘என்னை அறிந்தால்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன்னர் வெளியானது. (more…)

இலங்கை முன்னாள் வீரர்கள் அணி வெற்றி

யாழில் நடைபெற்ற வடக்கு கிழக்கு ஒன்றிணைந்த துடுப்பாட்ட அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் அணி வெற்றி பெற்றுள்ளது. (more…)

திருச்சியில் இலங்கை தமிழ் பெண்ணை காணவில்லை

திருச்சியில் இலங்கை தமிழ் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. (more…)

‘லைக்கா’ சுபாஸ்கரன் கைதாகி விடுதலையா?

கத்தி திரைப்பட சர்ச்சையில் சிக்கிய லைக்கா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா கொழும்பு விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக சில செய்தி இணையதளங்கள் தெரிவித்துள்ளன. (more…)

யாழ்ப்பாணத்தில் இன்று அதிக அளவு மழை பெய்ய வாய்ப்பு

யாழ்ப்பாணம் முதல் மட்டக்களப்பு, திருகோணமலை வரையான கடலோரங்களில் அதிக மழைக்கான சாத்தியம் நிலவுவதாகவும் நாட்டின் பெரும்பாலான கடலோரப்பகுதிகளில் இன்று (30) மழையுடன் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. (more…)

யாழ்.போதானா வைத்தியசாலையில் பாரிசவாத நோய் சிகிச்சை வெற்றி

யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த மூன்று மாதங்களாக பாரிசவாத நோயாளர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை வெற்றியளித்துள்ளதாக, யாழ். மருத்துவ சங்கம் தெரிவித்தது. (more…)

ஐ.நா பயங்கரவாத எதிர்ப்பு குழு யாழ்.விஜயம்

ஐக்கிய நாடுகள் பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் நிறைவேற்று குழுவுக்கும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை (29) இடம்பெற்றது. (more…)

உயிர் பலியிடுதலே மீள்குடியேற்றத்தை தடுக்கின்றது – யோகேஸ்வரன் எம்.பி

யாழ்ப்பாணம், வலி.வடக்கு மக்கள் இன்னமும் மீள்குடியேறாமல் இருப்பதற்கு காரணம், கடந்த காலங்களில் உயிர்கள் போட்ட சாபம் தான் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் மதவிவகார செயலாளருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் புதன்கிழமை (29) தெரிவித்தார். (more…)

தாதியர்களை உருவாக்க யாழ்.வணிகர் சங்கம் நடவடிக்கை

யாழ். மாவட்டத்தில் தனியார் வைத்தியசாலையில் பணியாற்றுவதற்கு 10 பெண்பிள்ளைகளுக்கு மருத்துவ தாதி பயிற்சிகளை வழங்கி வேலைவாய்பையும் ஏற்படுத்தி கொடுப்பதற்கு யாழ் வணிகர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வணிகர் சங்கத்தலைவர் ஆர்.ஜெயசேகரம் புதன்கிழமை (29) தெரிவித்தார். (more…)

மண்சரிவுப் பாதிப்புகளிலிருந்து மீள இலங்கைக்கு உதவுகிறது ஐ.நா.

மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்கள் உதவிகளை வழங்கத் தயாராகவுள்ளன என ஐ.நாவின்மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒத்துழைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts